வினா – வங்கி / எட்டாம் - தமிழ்
காலாண்டுத் தேர்வு சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள் / ஒரு மதிப்பெண் – வினாக்கள்
இயல் – 1
தமிழ்மொழி வாழ்த்து
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்__________
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
2. ‘ என்றென்றும் ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது_____
அ) என் + றென்றும் ஆ) என்று + என்றும் இ) என்றும் + என்றும் ஈ) என் + என்றும்
3. ‘ வானமளந்தது ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________
அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது இ) வானம் + அளந்தது ஈ) வான் + அளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________________
அ) அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ) அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________
அ) வானம்அறிந்து ஆ) வான்அறிந்த இ) வானமறிந்த ஈ) வான்மறிந்த
6. தமிழ் மொழி வாழ்த்து – இப்பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
தமிழ்மொழி
மரபு
7. பறவைகள் ________ பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
8. இயற்கையைப் போற்றுதல் தமிழர் _________
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ)
தகவு
9. ‘ இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
அ) இரண்டு + திணை ஆ)
இரு + திணை இ) இருவர் + திணை ஈ) இருந்து + திணை
10.. ‘ ஐம்பால் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
அ) ஐம் + பால் ஆ) ஐந்து + பால் இ) ஐம்பது + பால் ஈ) ஐ + பால்
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
11. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ________ காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
12. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
13. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்_________
அ) பாரதிதாசன் ஆ) தந்தை
பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக:-
14. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ________ என அழைக்கப்பட்டன.
15. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
எழுத்துகளின் பிறப்பு
16. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ________
அ) இ,ஈ ஆ) உ,ஊ இ) எ,ஏ ஈ)
அ,ஆ
17. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ________
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ)
மூக்கு
18. வல்லின எழுத்து பிறக்கும் இடம் __________
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
19. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
________
அ) க்,ங் ஆ) ச்.ஞ் இ) ட்,ண் ஈ) ப்.ம்
பொருத்துக:-
20. க்,ங் - நாவின் இடை, அண்ணத்தின் இடை
21. ச், ஞ் - நாவின் நுனி,
மேல்வாய்ப்பல்லின் அடி
22. ட்,ண் - நாவின் முதல், அண்ணத்தின் அடி
23. த்,ந் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
இயல் – 2
ஓடை
1.. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.
அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ) பாடுதல்
2.. செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை
மீட்டுவது _________
அ) கடல் ஆ)
ஓடை இ) குளம் ஈ) கிணறு
3.. ‘ நன்செய் ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது _________
அ) நன் + செய் ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய் ஈ) நல் + செய்
4.. ‘ நீளுழைப்பு ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது _______
அ) நீளு + உழைப்பு ஆ)
நீண் + உழைப்பு இ) நீள் + உழைப்பு ஈ) நீள் + உழைப்பு
5.. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -------
அ) சீருக்குஏற்ப ஆ) சீருக்கேற்ப இ)
சீர்க்கேற்ப ஈ) சீருகேற்ப
29. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______
அ) ஓடை ஆட ஆ) ஓடையாட இ) ஓடையோட ஈ)
ஓடைவாட
கோணக்காத்துப் பாட்டு
6.. வானில் கரு ______ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ)
கயல்
7.. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ________ யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை ஆ) காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை
8. ‘ விழுந்ததங்கே ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த
+ ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே
9.. ‘ செத்திறந்த ‘ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
_________
அ) செ + திறந்த ஆ) செத்து
+ திறந்த இ) செ + இறந்த ஈ) செத்து + இறந்த
10.. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
__________
அ) பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்
நிலம் பொது
11. செவ்விந்தியர்கள் நிலத்தை _________ மதிக்கின்றனர்
அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
12.. ‘ இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை
13.. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________
அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்
தொடரில் அமைத்து எழுதுக:- 1. வேடிக்கை 2. உடன்பிறந்தார்
வினைமுற்று
14.. மாடு வயலில் புல்லை மேய்ந்தது
– இத்தொடரிலுள்ள வினைமுற்று ________
அ) மாடு ஆ) வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
15.. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
_________
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ)
உண்பான் ஈ) ஓடாது
16.. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்________
அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய
திருக்குறள்
17.. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _________
அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை
18.. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ________
அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர்
19.. ‘ வல்லுருவம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
அ) வல் + உருவம் ஆ) வன்மை +
உருவம் இ) வல்ல + உருவம் ஈ) வல்லு + உருவம்
20.. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) நெடுதேர் ஆ) நெடுத்தேர் இ) நெடுந்தேர் ஈ) நெடுமைதேர்
21.. ‘ வருமுன்னர் ‘ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி_________
அ) எடுத்துக்காட்டு உவமை அணி ஆ)
தற்குறிப்பேற்ற அணி இ) உவமை அணி ஈ) உருவக அணி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
22.. வலியில் நிலைமையான் வல்லுருவம் ________
புலியின் தோல் _________ மேய்ந்
தற்று
23.. விலங்கொடு __________ அணையர் ________
கற்றாரோடு ஏனை யவர்
இயல் – 3
நோயும் மருந்தும்
1. உடல் நலம் என்பது ___________ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி ஆ)
பணி இ) பிணி ஈ) மணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்
__________
அ) இரண்டு ஆ) மூன்று இ)
நான்கு ஈ) ஐந்து
3. ‘ இவையுண்டார் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________
அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார் இ) இவை + உண்டார் ஈ) இவை + யுண்டார்
4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) தாம்இனி ஆ) தாம்மினி இ) தாமினி ஈ)
தாமனி
வருமுன் காப்போம்
5. காந்தியடிகள் ________ போற்ற வாழ்ந்தார்
அ) நிலம் ஆ) வையம் இ) களம் ஈ
) வானம்
6. ‘ நலமெல்லாம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
அ) நலம் + எல்லாம் ஆ) நலன் +
எல்லாம் இ) நலம் + எலாம் ஈ) நலன் + எலாம்
7. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் _______
அ) இடவெங்கும் ஆ) இடம்எங்கும் இ) இடமெங்கும் ஈ) இடம்மெங்கும்
8. வருமுன் காப்போம் – இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை
எடுத்து எழுதுக.
தமிழர் மருத்துவம்
9. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ____________ பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ)
விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை
10. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ______ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ)
வாழ்வின்
11. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _________
அ) தலைவலி ஆ) காய்ச்சல் இ) புற்று நோய் ஈ) இரத்தக் கொதிப்பு
12. சமையலறையில் செலவிடும் நேரம் _________ செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
எச்சம்
13. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _________________ எனப்படும்.
அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
14. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____________
அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த
15. குறிப்பு வினையெச்சம் ________ வெளிப்படையாகக் காட்டாது.
பொருத்துக:-
16. நடந்து - முற்றெச்சம்
17. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
18. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
19. பெரிய - வினையெச்சம்
இயல் – 4
கல்வி அழகே அழகு
1. கற்றவருக்கு அழகு தருவது
______
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி
2. ‘ கலனல்லால் ‘ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ___________
அ) கலன் + லல்லால் ஆ)
கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால்
தொடரில் அமைத்து எழுதுக:-
3. அழகு 4.
கற்றவர் 5. அணிகலன்
புத்தியைத் தீட்டு
6. என் நண்பர் பெரும் புலவராக இருந்த போதும் ________ இன்றி
வாழ்ந்தார்.
அ) சோம்பல் ஆ)
அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
7. ‘ கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) கோ + அப்பா ஆ) கோயில்
+ லப்பா இ) கோயில் + அப்பா ஈ) கோ + இல்லப்பா
8. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல் ________
அ) பகைவென்றாலும் ஆ)
பகைவனென்றாலும் இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்
பல்துறைக் கல்வி
9. அறியாமை நீக்கி அறிவை விளக்குவது ________
அ) விளக்கு ஆ)
கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
10. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் __________
அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ)
வாய்மை
11. இன்றைய கல்வி _______ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு
வருகிறது.
அ) வீட்டில் ஆ)
நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
கோடிட்ட இடத்தை நிரப்புக :-
12. கலப்பில் _____________ உண்டென்பது இயற்கை நுட்பம்
13. புற உலக ஆராய்ச்சிக்கு ___________ கொழுகொம்பு போன்றது.
14. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது __________
இன்பம் ஆகும்.
பொருத்துக:-
15. இயற்கை ஓவியம் - சிந்தாமணி
16. இயற்கை தவம் - பெரிய புராணம்
17. இயற்கைப் பரிணாமம் - பத்துப்பாட்டு
18. இயற்கை அன்பு - கம்பராமாயணம்
வேற்றுமை
19. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது
_____________
அ) எழுவாய் ஆ)
செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) வேற்றுமை
20. எட்டாம் வேற்றுமை ____________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய் ஆ)
செயபடுபொருள் இ) விளி ஈ) பயனிலை
21. உடனிகழ்ச்சிப் பொருளில் ________ வேற்றுமை வரும்
அ) மூன்றாம் ஆ)
நான்காம் இ) ஐந்தாம் ஈ) ஆறாம்
22. ‘ அறத்தான் வருவதே இன்பம் ‘ - இத்தொடரில் __________ வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம் ஆ)
மூன்றாம் இ) ஆறாம் ஈ) ஏழாம்
23. ‘ மலர் பானையை வனைந்தாள் ‘ – இத்தொடர் ____________ பொருளைக்
குறிக்கிறது.
அ) ஆக்கல் ஆ)
அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்
பொருத்துக:-
24. மூன்றாம் வேற்றுமை -
இராமனுக்குத் தம்பி இலக்குவன்
25. நான்காம் வேற்றுமை - பாரியினது தேர்
26. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
27. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
CLICK HERE TO DOWNLOAD PDF
வடிவமைப்பு
:
திரு. வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
தொடர்புக்கு
:- 8667426866, 8695617154
நமது வலைதளங்கள் : WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
குழுக்களில்
சேர :
WHATSAPP :