8H - TAMIL - 1ST TERM EXAM - SALEM - ANSWER KEY - PDF

 

எட்டாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவத் தேர்வு - 2022

சேலம் மாவட்டம் - வினாத்தாள் -விடைக்குறிப்பு

சேலம் – முதல் பருவத் தேர்வு / செப்டம்பர் - 2022-2023

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2..00 மணி                                                    மதிப்பெண் : 60

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ.விசும்பில்

1

2.

ஆ.தாயாக

1

3.

இ.நல்வாழ்வுக்காக

1

4.

பெரியார்

1

5.

எச்சம்

1

6.

அறிவியல்

1

7.

பத்துப்பாட்டு

1

8.

சிந்தாமணி

1

9.

கம்பராமாயணம்

1

10.

பெரியபுராணம்

1

11.

நிலம்,காற்று,தீ,வானம்,நீர் எனும் ஐந்து பூதங்களால் ஆனது.

2

12.

தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

2

13.

ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

2

14.

இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

 

2

15.

தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது

2

16.

·         மருந்தினால் நீங்கும் நோய்.

·         எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.

·         வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.

2

17.

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்

2

18.

·         மெய்யெழுத்துகளில், வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

·         மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

·         இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

2

19

ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் வினைமுற்று எனப்படும்.

2

20

ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்

வள்ளி படித்தனள் தேறினாள்

2

21

Ø  வேற்றுமை எட்டு வகைப்படும்

Ø  முதல் வேற்றுமை

Ø  இரண்டாம் வேற்றுமை

Ø  மூன்றாம் வேற்றுமை

Ø  நான்காம் வேற்றுமை

Ø  ஐந்தாம் வேற்றுமை

Ø  ஆறாம் வேற்றுமை

Ø  ஏழாம் வேற்றுமை

Ø  எட்டாம் வேற்றுமை

2

22

க,இய,இயர்,அல்

4

23

·                கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.

·                தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.

·                ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம் பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் தமிழ்

·                கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்

 

2

24

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

2

25

·              நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

·              சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

·              விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

 

2

26

i) வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் சித்தர்கள்.

(ii) வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 (iii) அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.

(iv) அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.

(v) ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும்; பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.

(vi) ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியே தான் சித்த மருத்துவத்தின் லேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.

(vii) அதனால் உணவு எப்படி பக்கவிளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

(viii) தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால், தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு; இரண்டாவது சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

(ix) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

 (x) அதாவது நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

Ø   

6

26

முன்னுரை :
உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம்.

இடப்பாகக் செயல்:
மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள்.

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்:
இடது பாதி அண்ணன் என்றால் வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாகத் திகழ்வர்.

முடிவுரை:
இடதும் வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

o     

6

27

Ø  முன்னுரை

Ø  நோய் ஏற்படக் காரணங்கள்

Ø  நோய் தீர்க்கும் வழிகள்

Ø  உணவும் மருந்தும்

Ø  உடற்பயிற்சியின் தேவை

Ø  முடிவுரை

மேற்கண்ட தலைப்புகளில் விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

6

27

சேலம்

26-09-2022.

அன்புள்ள நண்பன் கபிலனுக்கு,

       நலமா? நீ மாநில அளவில்  நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். என் அன்பு நிறைந்த பாராட்டினை உனக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். உன்னை நண்பனாய் அடைந்தமையை எண்ணிப் பெருமைப்படுகின்றேன். படிப்பில் நீ காட்டி வருகின்ற ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாய் வர உதவுகின்றன.

இப்படிக்கு,

அன்பு நண்பன்

முகிலன்

உறை மேல் முகவரி:-

பெறுதல்

       கபிலன்,

        50, காமராஜர் தெரு,

        வ.உ.சி. நகர்,

        ஈரோடு-637102

6

28.

மாமரம், தேன்சிட்டு,தேன் கூடு, குருவி கூடு

1

29..

எனது நண்பன் உலக நடப்புகள் ஏதும் தெரியாது கிணற்றுத் தவளைப் போல் இருக்கிறான்,

1  

30

EPIGRAPH – கல்வெட்டு

TRIBES -  பழங்குடியினர்

1  

31    

26 – ௨ ௬

48 – ௪ ௮

1

32

போ

1

33.

என்னே! காட்டின் அழகு.

1

34.

நலம் + எல்லாம்

1

35.

தமிழ்மொழி செம்மையானது;வலிமையானது;இளமையானது

1

36

அ. வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

 

 ( அல்லது )

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்

 

4

37

தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

 

 CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET THIS ANSWER KEY - PDF

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

விடைக்குறிப்பு தயாரிப்பு

இளந்தமிழ் – வழிகாட்டி

தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம்


 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post