7TH - TAMIL - TERM 1 - UNIT 3 - FULL SYLLABUS - GUIDE

 

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 3

நாடு ,சமூகம்                                                                       புலி தங்கிய குகை                                             

மனப்பாடப்பாடல்



அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. 'யாண்டு' எனனும் சொல்லின் பொருள் _______.

அ) எனது ஆ) எங்கு இ) எவ்வளவு ஈ) எது

2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) யாண்டு + உளனோ?                   ஆ) யாண் + உளனோ?

இ) யா + உளனோ?                    ஈ) யாண்டு + உனோ?

 3. ‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) கல்லளை ஆ) கல்அளை இ) கலலளை ஈ) கல்லுளை

ஆ) நயம் அறிக

ஈ) குறுவினா                                                                             .         

1. தம் வயிறறுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

புலி தங்கிச் சென்ற குகை

உ) சிறுவினா                                                                              

 1. தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

Ø  அவன் எங்குள்ளான் என்பது தெரியாது.

Ø  ஆயினும் புலி தங்கிச் சென்ற குகைப் போன்று அவனை பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது.

Ø  அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும்

ஊ) சிந்தனை வினா                                                                          

 1. தாய் தன் வயிற்றை புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?

Ø  புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.

Ø  அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.

Ø  இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.

பாஞ்சை வளம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.

அ) தோரணம்  ஆ) வானரம்  இ) வாரணம்  ஈ) சந்தனம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,

அ) முயல்             ஆ) நரி              இ) பரி               ஈ) புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு      ஆ) படுக்கையறை உள்ள வீடு

இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு  ஈ) மாடி வீடு

 4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பூட்டு + கதவுகள் ஆ) பூட்டும் + கதவுகள்  இ) பூட்டின் + கதவுகள்

ஈ) பூட்டிய + கதவுகள்

5. ‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) தோரணம் + மேடை ஆ) தோரண + மேடை  இ) தோரணம் + ஒடை

ஈ) தோரணம் + ஓடை

 6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) வாசல்அலங்காரம் ஆ) வாசலங்காரம்  இ) வாசலலங்காரம் ஈ) வாசலிங்காரம்

ஆ) பொருத்துக:-

 பொக்கிஷம் - அழகு

சாஸ்தி - செல்வம்

விஸ்தாரம் - மிகுதி

சிங்காரம் – பெரும்பரப்பு

விடை:

பொக்கிஷம் – செல்வம்

சாஸ்தி     - மிகுதி

விஸ்தாரம் – பெரும்பரப்பு

சிங்காரம்க - அழகு

இ) குறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

  1. பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.
  2. அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

ஈ) சிறுவினா                                                                                    

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

Ø  வீடுகள் தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட  மேடைகள் இருக்கும்.

Ø  வீடுகள் எல்லொம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.

Ø  வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்

 

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

          வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சலாங்க்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப்  பிடிக்கவரும் வேட்டை நாயை எதிரத்து விரட்டிவிடும்.

பைசுவும் புலியும் நீரநிலையின் ஒருதுறையில் நின்று பால் போன்ற  தண்ணீரை குடிக்கும்.

உ) சிந்தனை வினா                                                                          

1. நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?

Ø  மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது

Ø  அவன் வீரத்தை அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்ற காரணத்திற்காக நாட்டுப்புறப் பாடல்களில் பாடப்படுகிறது.

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்து இராமலிங்க தேவர்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

அ) தூத்துக்குடி    ஆ) காரைக்குடி   இ) சாயல்குடி         ஈ) மன்னார் குடி

2. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் _____.

 அ) இராஜாஜி     ஆ) நேதாஜி          இ) காந்திஜி        ஈ) நேருஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தே வரைப் பாராட்டியவர் _____.

அ) இராஜாஜி      ஆ) பெரியார்       இ) திரு.வி.க.         ஈ) நேதாஜி

ஆ) குறுவினா:-

1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி – என்று முத்தராமலிங்கத் தேவரை பெரியார் பாராட்டியுள்ளார்.

 2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?

முத்துராமலிங்கத்தேவர் மேடைகளில் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

 3. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

          சிலம்பம், குதிரையேற்றம்,துப்பாக்கி சுடுதல்,சோதிடம், மருத்துவம்

ஈ) சிறுவினா:-

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப்பற்றி எழுதுக.

Ø  நேதாஜியை தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்

Ø  1939 செப்டம்பர் ஆறாம் நாள் முத்துராமலிங்கர் வேண்டுகோளை ஏற்று நேதாஜி மதுரை வருகை புரிந்தார்

Ø  இந்திய தேசிய இராணூவத்தில் ஏராளமான தமிழர்களை சேர்த்தார்.

Ø  விடுதலைக்குப் பின் நேதாஜி என்னும் இதழை நடத்தினார்.

2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?

Ø  1937 இல் மதுரையில் 23 தொழிலாளர் சங்களுக்கு தலைவராக இருந்தார்.

Ø  1938 இல் தோழர் ஜீவானந்தம் அவர்களுடன் இணைந்து மதுரை நூற்பாலை தொழிலாளர் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்.

Ø  பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்புடன் ஊதியம் வழங்க போராடினார்.

எ) சிந்தனை வினா:-

1. சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

Ø  செயல்பாடுகள் நல்லதாக இருக்க வேண்டும்.

Ø  நல்ல குண இயல்புகள் கொண்டு இருக்க வேண்டும்.

Ø  வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப்பண்பு இருக்கின்றது என்ற கருத முடியாது. 

Ø  அறிவு, அனுபவம், மனிதர்களை மதித்து நடந்து கொள்ளும் பண்பு ஆகியவற்றைக் கொண்டவரே சிறந்த தலைவர். 

வழக்கு

அ) பொருத்துக.

1. பந்தர் - முதற்போலி

2. மைஞ்சு - முற்றுப்போலி

3. அஞ்சு - இடைப்போலி

4. அரையர் – கடைப்போலி

விடை :

1. பந்தர் – கடைப்போலி

2. மைஞ்சு – முதற்போலி

3. அஞ்சு – முற்றுப்போலி

4. அரையர் -  இடைப்போலி

ஆ) குறு வினா:-

1. வழக்கு என்றா ல் என்ன?

Ø  தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும்

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?

          இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

                நஞ்சு - நைந்து

மொழியை ஆள்வோம்

அ) பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க .

 1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

 4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்

 

எழுவாய்

பயனிலை

செயபடுபொருள்

1. வீரர்கள்

காத்தனர்

நாட்டை

2. பொதுமக்கள்

தீயிட்டு எரித்தனர்

அந்நியத் துணிகளை

3. பாண்டியனுடைய

மீன் கொடி பறந்தது

கொற்கைத் துறைமுகத்திலே

4. திருக்குறளை

யார்

எழுதியவர்?

5. கபிலர்

குறிஞ்சிப்பாட்டை

எழுதிய புலவர்

 

ஆ). எழுவாய், பயனிலை, செயப்ப டுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து

தொடர்களை எழுதுக.

1. மாறன் பாடம் படித்தான்

2. இளங்கோ கேள்வி கேட்டான்

3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

4. கபிலரின் நண்பர் இடைக்காடனார்

5. ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்

இ) கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

நான் விரும்பும் தலைவர்..

காமராசர்

முன்னுரை: 

      கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் .வளமான தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழை மாணவர்கள் கல்விக்கண் திறந்தனர். பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்: 

      காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

அரசியல் :

      தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  பின்னர் காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார் 

கல்விப்பணி: 

     பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவுத் திட்டத்தினைத் தொடங்கினார். பல கிராமங்களில் பள்ளிகளை துவங்கினார்.

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

·         நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

·         கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்"

               என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

 

மொழியோடு விளையாடு

அ) இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார் – மாட்டிற்கு புல் கொடுத்தார்

 2. பாட்டு பொருள் எழுது  - பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர்  - செடிக்கு பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி – முல்லைக்குத் தேர் தந்தான் பாரி

 5. சுவர் சாந்து பூசினாள் – சுவருக்குச் சாந்து பூசினாள்

 

 

ஆ) இரண்டுசொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

 

கண்

அழகு

உண்டு

கண்ணழகு

கண்ணுண்டு

மண்

மண்ணழகு

மண்ணுண்டு

விண்

விண்ணழகு

விண்ணுண்டு

பண்

பண்ணழகு

பண்ணுண்டு

 


இ ) அகம் என முடியும் சொற்களை எழுதுக.

 (எ.கா.) நூலகம்

1. அருங்காட்சியகம்

2. பெட்டகம்

3. வஞ்சகம்

4. சங்கம்

ஈ) கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக. (எ.கா.) திருக்குறள் பால்களைக் கொண்டது.

1. எனது வயது ௧௪

2. நான் படிக்கும் வகுப்பு .

 3. தமிழ் இலக்க ணம்  வகைப்படும்.

4. திருக்குறளில் ௧௩௩  அதிகாரங்கள் உள்ளன.

5. இந்தியா ௧௯௪௭  ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

உ) குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

1. மூதறிஞர்  - இராஜாஜி

2. வீரமங்கை வேலுநாச்சியார்

 3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன்  - சின்னமலை

5. கொடிகாத்தவர்  - குமரன்

6. எளிமையின் இலக்கணம் கக்கன்

7. தில்லையாடியின் பெருமை வள்ளியம்மை

 8. கப்பலோட்டிய தமிழர்  - வ.உ.சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன்  - பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் காமராஜர்

11. கள்ளுக்கடைமறியல் பெண்மணி நாகம்மை

 12. மணியாட்சியின் தியாகி வாஞ்சிநாதன்

ஊ) கலைச்சொல் அறிக:-


கதைப்பாடல் - Ballad

பேச்சாற்றல் - Elocution

துணிவு - Courage

ஒற்றுமை - Unity

தியாகம் – Sacrifice

முழக்கம் – Slogan

அரசியல் மேதை - Political Genius

சமத்துவம் - Equality

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

CLICK HERE TO GET - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post