இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத்
தொகுப்பு
பருவம்
: 1 இயல்
: 1
அமுத தமிழ்
எங்கள் தமிழ்
மனப்பாடப்பாடல்
அருள்நெறி
அறிவைத் தரலாகும்
அதுவே
தமிழன் குரலாகும்
பொருள்பெற
யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம்
குறியாகக்
கொள்கை
பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும்
இசைந்திடும் அன்ப றமே
அன்பும்
அறமும் ஊக்கிவிடும்
அச்சம்
என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற
வானொலியாம்
எங்கள்
தமிழெனும் தேன்மொழியாம்*
-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 'நெறி'
என்னும் சொல்லின் பொருள் _________.
அ)
வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்
2. ‘குரலாகும்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) குரல் +
யாகும் ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்
3. வான்
+ ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) வான்ஒலி ஆ)
வானொலி இ) வாவொலி ஈ) வானெலி
ஆ) நயம் அறிக
1. 'எங்கள்
தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச்
சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
அருள்நெறி, பொருள்பெற , கொல்லா
அதுவே, போற்றா, கொள்கை
2. 'எங்கள் தமிழ்' பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோ ல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து
எழுதுக.
(எ.கா.)
அருள் , கொல்லா, அன்பும்
பொருள்
, எல்லா, இன்பம்
3. 'எங்கள்
தமிழ்' பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச்
சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) தரலாகும்,
புகழாது, குறியாக
குரலாகும்.
இகழாது, நெறியாக
ஈ) குறுவினா .
1. தமிழ்மொழியின்
பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
அருள் நெறிகள் நிரம்பிய
அறிவௌத் தருகிறது. அது தமிழ் மக்களின் குரலாக விளங்குகிறது.
2. தமிழ்மொழியைக் கற்றவரின்
இயல்புகளை எழுதுக.
பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும்
இகழமாட்டார்
உ)
சிறுவினா
1. ‘எங்கள் தமிழ்’ பாடலில்
நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
Ø தமிழ்
மொழி அருள் நெறிகள் நிறைந்தது.
Ø பொருள்
பெற யாரையும் புகழாது, தம்மைப் போற்றாதவரையும் இகழாது தமிழ்
Ø கொல்லாமை
குறிக்கோளாகவும், பொய்யாமை கொள்கையாகவும் விளங்குவது தமிழ் மொழி.
Ø அன்பும்,
அறத்தையும் தூண்டி இன்பம் கொடுக்கும்.
Ø தமிழ்
தேன் போன்ற இனிய மொழி
ஊ) சிந்தனை
வினா
1.கவிஞர் தமிழை ஏன் தேனுடன்
ஒப்பிடுகிறார்?
·
தேன் இனிமையானது. உடலுக்கு ஆரோக்கியமானது
·
தமிழி படிக்க படிக்க இனிமையானது. உள்ளத்திற்கு
ஆரோக்கியமானது
·
எனவே கவிஞர் தமிழை தேனோடு ஒப்பிடுகிறார்.
ஒன்றல்ல இரண்டல்ல்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை
வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.
அ) கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி
ஈ) அந்தாதி
2. வானில்
_____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில் ஆ)
முகில் இ)
துகில் ஈ) துயில்
3. ‘இரண்டல்ல
’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) இரண்டு +
டல்ல ஆ) இரண் + அல்ல இ) இரண்டு + இல்ல
ஈ)
இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ)
தந்து + உதவும் ஆ) தா + உதவும் இ)
தந் து + தவும்
ஈ) தந்த +
உதவும்
5. ஒப்புமை
+ இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
ஒப்புமைஇல்லாத ஆ) ஒப்பில்லாத இ)
ஒப்புமையில்லாத
ஈ)
ஒப்புஇல்லாத
இ)
குறுவினா
1. தமிழ்நாட்டின்
இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
சுவை மிகுந்த கனிகளும், தங்கம் போன்ற
தானிய கதிர்களும் விளையும். தமிழ் நாட்டின் வளங்கள் ஒன்றல்ல இரண்டல்ல பலவாகும்.
2. ‘ஒன்றல்ல
இரண்டல்ல ’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
முல்லைக்கு தேர் கொடுத்தவர்
– பாரி
புலவரின் சொல்லுக்கு தன் தலையைத் தந்தவர்
– குமணன்
ஈ)
சிறுவினா
1.
தமிழுக்கு வளம் சேர் க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Ø பகைவரை
வென்றவரை பாடுவது பரணி
Ø இசைப்
பாடல்களான பரிபாடல், கலம்பகம், எட்டுத் தொகை
Ø வான்
புகழ் கொண்ட திருக்குறள்
Ø அகம்,
புறம் எனக் கொண்ட சங்க இலக்கியங்கள்.
உ)
சிந்தனை வினா
1. தமிழில்
அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
Ø நீதிகளும்,
அறங்களும் பெருக வேண்டும் என்ற நோக்கமே தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்ற
காரணமாக இருக்கும்..
பேச்சு மொழியும் எழுத்து
மொழியும்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
அ) படித்தல் ஆ) கேட்டல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
2. ஒலியின் வரிவடிவம் _________
ஆகும்.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
3.
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________
அ)
உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
4.
பேச்சு மொழியை ________ வழக்கு என்றும்
கூறுவர்
அ)
இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழி
ஆ)
சரியா தவறா என எழுதுக.
1.
மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது. - சரி
2.
எழுத்து மொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது. - சரி
3.
பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது
எழுத்து மொழி. - தவறு
4.
எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம். - தவறு
5. பேச்சு மொழி சிறப்பாக அமையக்
குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.- சரி
இ)
ஊடகங்களை வகைப்படுத்துக.
வானொலி, தொலைக்காட்சி,
செய்தித்தாள், நூல்கள், திரைப்படம்,
மின்னஞ்சல்
எழுத்து மொழி |
பேச்சு மொழி |
மின்னஞ்சல் |
வானொலி |
செய்தித்தாள் |
தொலைக்காட்சி |
நூல்கள் |
திரைப்படம் |
ஈ) குறுவினா:-
1.
மொழியின் இரு
வடிவங்கள் யாவை?
Ø பேச்சு மொழி
Ø எழுத்து மொழி
2. பேச்சுமொழி என்றால்
என்ன?
வாயினால்
பேசப்படுவது பேச்சுமொழி
3. வட்டார மொழி எனப்படுவது யாது ?
இடத்திற்கு இடம் பேச்சு மொழி மாறுபடுவது
வட்டார மொழி ஆகும்.
உ)
சிறுவினா:-
1.
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை
விளக்குக.
பேச்சுமொழி |
எழுத்து மொழி |
1. சொற்கள் குறுகி
ஒலிக்கும் |
1. சொற்கள் முழுமையாக
ஒலிக்கும் |
2. உணர்ச்சிக்
கூறுகள் அதிகம் |
2. உணர்ச்சிக்
கூறுகள் குறைவு |
3. குரல், ஏற்றத்தாழ்வு
உண்டு |
3. குரல் ஏற்றத்
தாழ்வுக்கு இடமில்லை |
4. நினைத்தவாறே
பேச முடியும் |
4. நினைத்தவாறு
எழுதுவது கடினம் |
2.
கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Ø வாழும்
இடத்தின் நில அமைப்பு
Ø இயற்கைத்
தடைகள்
Ø சிறிது
சிறிதாக மாற்றம் ஏற்பட்டு புதிய மொழிகள் பிறக்கின்றன.
Ø தமிழிலிருந்து
கன்னடம், மலையாளம், தெலுங்கு கிளைமொழிகளாக பிரிந்து சென்றது
ஊ)
சிந்தனை வினா:-
1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று
கருதுகிறீர்கள்?
இலக்கியங்கள் நம் வாழவை வளப்படுத்த,
வழிகாட்டக் கூடிய ஒளிவிளக்குகளாகத் திகழ்வதால் காலம் கடந்தும் அவை அழியாமல் வாழ்கின்றன.
குற்றியலுகரம்,
குற்றிய லிகரம்
அ)
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில்
வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு,
எட்டு, ஏடு, பந்து,
காசு, கொய்து
நெடில்
தொடர் |
ஆய்த்
தொடர் |
உயிர்த்
தொடர் |
வன்
தொடர் |
மென்
தொடர் |
இடைத்தொடர் |
ஆறு,
ஏடு, காசு |
எஃகு |
விறகு |
உழக்கு,எட்டு |
பந்து,
கரும்பு |
கொய்து |
ஆ பொருந்தாத சொற்களை
எடுத்து எழுதுக.
1. பசு, விடு,
ஆறு, கரு - கரு
2.
பாக்கு, பஞ்சு, பா ட்டு,
பத்து – பஞ்சு
3. ஆறு, மாசு,
பா கு, அது - அது
4.
அரசு, எய்து, மூழ்கு,
மார்பு - அரசு
5 பண்பு, மஞ்சு,
கண்டு, எஃகு - எஃகு
இ)
குறு வினா:-
1.
’குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
Ø குறுமை
+ இயல் + உகரம் = குற்றியலுகரம்
Ø தனக்குரிய
ஓசையிலிருந்து குறைந்து ஒலிக்கும் உகரம்
2. குற்றியலிகரம் என்றால் என்ன?
Ø தனக்குரிய
ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவு ஒலிக்கும் இகரம்
மொழியை
ஆள்வோம்
அ)
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொ டரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து
எழுதுக.
கோதை கவிதையைப் படித்தாள்
வினா |
அழுத்தம் தர
வேண்டிய சொல் |
கோதை எதைப் படித்தாள்? |
எதை |
கவிதையைப் படித்தது யார்? |
யார் |
கோதை கவிதையை என்ன செய்தாள்? |
என்ன |
ஆ).
படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.
உயர் திணை
அஃறிணை
உயர்திணை
இ)
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை,
அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி,
கடல், ஆசிரியர், புத்தகம்,
சுரதா, மரம்
உயர்திணை:
முகிலன்,
கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா
அஃறிணை:
வயல்,
குதிரை,கடல், புத்தகம், மரம்
இ)
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிப் பற்று
(முன்னுரை – மொழி பற்றிய விளக்கம்
– தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன்
வரலாறு – நமது கடமை – முடிவுரை)
முன்னுரை
உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள்
எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்று . இக்கட்டுரையில் எமது தாய்மொழி பற்றி
விரிவாக காண்போம்.
தாய்மொழி
உலகத்திலே
எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும்
உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அவர்களுக்கு சிறந்த
உணர்வை எப்போதும் தரும்.
தாய்மொழிப் பற்று
·
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் – என்கிறார் பாரதியார்
o
தாய்மொழி மீதான் பற்று
ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியான தமிழ் பழமையானது
பெருமை மிக்கது
·
நாம் எமது கல்வியை தாய்மொழியில் கற்பது எமக்கு சால சிறந்ததாகும்.
இதுவே எமது அறிவை பெருக்கும்.
தாய்மொழிக் கல்வியும்
சுய சிந்தனையும்
காந்தியடிகள் ஒருவன்
தாய்மொழியில் கல்வி கற்றால் தான் சிறப்படையும் என்கிறார். தாய்மொழி வழியில் கல்வி
பயிலும் போது புரிதல் எளிதாகிறது.
உலகத்தின் வளர்ந்த நாடுகள் தமது நாட்டு குழந்தைகளுக்கு தாய்மொழி
மூலமாகவே கல்வியினை வழங்குகின்றன.
முடிவுரை:
அறிவையும்
திறனையும் விருத்தி செய்து கொள்ள எமது தாய்மொழியில் கல்வி கற்பதனை நாம் எப்போதும்
பெருமையாக கருத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி
தினமாக கொண்டாடி வருகிறோம். நாம் நமது தாய்மொழியை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.
மொழியோடு
விளையாடு
அ) தொகைச் சொற்களை
விரித்து எழுதுக.
(எ.கா.) இருதிணை : உயர்திணை ,
அஃறிணை
முக்கனி : மா.பலா,வாழை
முத்தமிழ்
: இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்
தமிழ்
நாற்றிசை
: வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு
ஐவகைநிலம்
: குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல் ,பாலை
அறுசுவை: இனிப்பு,
புளிப்பு, துவர்ப்பு.கார்ப்பு, கசப்பு,உவர்ப்பு
ஆ) கட்டங்களிலுள்ள
எழுத்துகளை மாற்றி,
மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல்
வருமாறு கட்டங்களில் எழுதுக
கு |
ம |
த |
ந் |
தி |
த |
ரை |
கு |
தி |
ம |
த |
கு |
த |
ந் |
தி |
கு |
தி |
ரை |
இ)
இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
(எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி
செலுத்த வேண்டும். ஏட்டில் எழுதுவது வரி வடிவம்..
1.
மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத்
தமிழ் மொழி எமது.
2.
அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடைபழகும்.
அறிஞர்
அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை.
3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
எழுத்துகள்
தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்
4.
உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்
.
குழந்தையை
மெதுவாக நட என்போம்.
5.
நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு
ஈ)
கலைச்சொல் அறிவோம்.
ஊடகம்
– Media
பருவ இதழ் - Magazine
மொழியியல் – Linguistics
பொம்மலாட்டம் – Puppetry
ஒலியியல் - Phonology
எழுத்திலக்கணம்
- Orthography
இதழியல்
- Journalism
உரையாடல்
– Dialogue
ஆக்கம்
:
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
CLICK HERE TO GET PDF