பத்தாம் வகுப்பு - தமிழ்
இரண்டாம் பருவத் தேர்வு - வினாத்தாள் 2022- 23
வகுப்பு : 10 இரண்டாம் இடைப் பருவத் தேர்வு அலகு : இயல் 4,5,6
பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ)
துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
2
இது செய்வாயா? என்ற வினாவிற்கு நீயே செய் எனக் கூறும் விடை________
அ)
மறை விடை ஆ) ஏவல் விடை இ) நேர் விடை ஈ)
சுட்டு விடை
3.
இடையில் அணியக் கூடிய அணிகலன் ___________
அ)
சுட்டி ஆ) சிலம்பு இ) சூழி ஈ) அரைநாண்
4.
கலவைச் சொற்றொடரைக் காண்க:-
கூத்துக்கலைஞர்
பாடத்தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்___________
அ)
கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்.
ஆ)
கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
இ)
கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார் என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்
ஈ)
கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி கூட்டத்திலிருட்ந்தவர்களை அமைதிப்படுத்தி வைத்தார்.
5.
பின்
வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
அ)
பெரிய கத்தி ஆ) இரும்பு ஈட்டி இ) உழைத்ததால் கிடைத்த ஊதியம் ஈ) வில்லும் அம்பும்
II)
பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:- 3×1=3
“
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ
நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?
தோழமை
என்று அவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ?
“
ஏழைமை வேடன் இறந்திலன் “ என்று எனை ஏசாரோ?
.6
இப்பாடல் இடம் பெற்ற நூல் ___________
அ.
முல்லைப்பாட்டு ஆ. கம்பராமாயணம் இ. காசிக்காண்டம் ஈ. மலைபடுகடாம்
7. இலக்கணக் குறிப்பு
தருக:- நெடுந்திரை
அ. வினைத்தொகை ஆ. பண்புத்தொகை இ. தொழிற்பெயர் ஈ.
அன்மொழித்தொகை
8. “ வேடன் “ என்பது
இங்கு யாரை குறிக்கிறது?
அ. கம்பர் ஆ. இராமன் இ. இலக்குவன் ஈ. குகன்
III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும்
விடையளி:- 3×2=6
( வினா எண் : 12 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்
)
9. விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ. கரகாட்டத்தின் துணையாட்டமாக மயிலாட்டம்
கருதப்படுகிறது.
ஆ. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர
மனிதன் பெப்பர்.
10. மருத்துவத்தில் மருந்துடன் நம்பிக்கையும்
ஆற்றும் பாங்கினை எழுதுக.
11. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
12. ‘செயற்கை ‘ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
IV) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:- 3×2=6
13. இன்னாசிரியர் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.அவற்றைப்
புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
– இத்தொடரை தொடர் சொற்றொடராக மாற்றுக.
14. கலைச்சொல் தருக:- அ. SYMBOLISM ஆ.
BIOTECHNOLOGY
15. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை
மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன். – இத்தொடர் கால
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
16. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
( வினா எண் – 19 கட்டயமாக விடையளிக்க வேண்டும்
)
பிரிவு -1
17. உங்களுடன் பள்ளியில் பயிலும் மாணவர்
ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம்
கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
18.வைத்தியபுரிநாத முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை
ஆடிய நயத்தை விளக்குக.
19. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும்
நீதிவெண்பா பாடல்
(
அல்லது )
“ வெய்யோன் “ எனத்
தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.
பிரிவு -2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
19.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத்
தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப்
பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத்
தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என்
தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட
இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
20.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் – அலகிட்டு வாய்பாடு காண்க.
21.
வினாவின் வகைகளையும், விடையின் வகைகளையும் கூறுக.
VI) கீழ்க்காணும் வினாவிற்கு
விடையளி:- 2×4=8
22. அ) “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ – குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி
அதனை நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு ஒப்புதல் பெற வேண்டி கடிதம் எழுதுக.
(அல்லது )
ஆ.
புதிதாகத்
திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசிப் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக்
கூறி கடிதம் ஒன்று எழுதுக
23 அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-
( அல்லது )
ஆ) அறிவழகனின் 23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித்
தேர்வில் பங்கேற்பதற்காக 50, பாரதியார் தெரு, வ.உசி,].நகர்,சேலம் மாவட்டம் -636006
என்ற முகவரியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர்
அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர
விரும்புகிறார்..
தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.
VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி 2×5=10
24.அ)
தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய
வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு
‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார
இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ)
நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள்
– சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை
வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
25.
அ) “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்
“ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக
(அல்லது)
ஆ)‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.