ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
சிறப்பு வழிகாட்டி
இயல் – 5 கசடற மொழிதல்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ)
பலவுள் தெரிக.
1. பொருத்தமான விடையைத் தேர்க .
அ) சிறுபஞ்ச மூலம் - 1. காப்பிய
இலக்கியம்
ஆ)
குடும்ப விளக்கு - 2. சங்க இலக்கியம்
இ) சீவகசிந்தா மணி - 3. அற இலக்கியம்
ஈ)
குறுந்தொகை - 4. தற்கால இலக்கியம்.
(௧) அ-3, ஆ- 4, இ -1, ஈ- 2 (௨) அ- 2, ஆ- 3, இ- 1, ஈ- 4
(௩) அ- 3, ஆ-1, இ- 4. ஈ -2 (௪) அ- 4, ஆ -1, இ – 2, ஈ- 3
2.
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
அ)
கலைக்கூடம் ஆ) கடி
திரையரங்கம் உறு
ஆடுகளம் கூர்
அருங்காட்சியகம் கழி
இ)
வினவினான் ஈ)
இன்
செப்பினான் கூட
உரைத்தான் கிறு
பகன்றான் அம்பு
3.
கீழ்க் காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ)
சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ)
இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ)
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
4.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ)
வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய
வடிவம்.
1. ஆ, இ சரி;
அ தவறு 2. அ, இ, சரி; ஆ தவறு
3.
மூன்றும் சரி 4. மூன்றும் தவறு
5.
பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட
சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
அ)
பெயரெச்சம்,
உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
இ) வினையெச்சம், உவமை ஈ)
எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
ஆ)
குறுவினா
1. தலைவியின் பேச்சில்
வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
பெண்கல்வி பெறுதலே தலைவயின் பேச்சில் வெளிப்படுகினற் பாடுபொருள் ஆகும்.
2.
மூவாது மூத்தவர், நூல் வல்லார்- இத்தொடர்
உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர்,
வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்
3.
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Ø திருக்குறள்
Ø பரமார்த்த குரு
கதைகள்
4. சாரதா சட்டம் எதற்காக
இயற்றப்பட்டது?
பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது
குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறுவினா
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின்
பெயர்களை எழுதுக.
Ø ஒளவையார்
Ø ஒக்கூர் மாசாத்தியார்
Ø காவற்பெண்டு
Ø ஆதிமந்தி
Ø பாரிமகளிர்
Ø நச்செள்ளையார்
2.
சமைப்பது தாழ்வா ? இன்பம் சமைக்கின்றார் சமையல்
செய்வார்.
அ)
இன்பம் சமைப்பவர் யார்? ஆ) பாவேந்த ரின் கூற்றுப்படி சமைப்பது
தாழ்வா?
இன்பம்
சமைப்பவர்:
உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் பரிமாறுவது
மூலம் இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.
சமைப்பது
தாழ்வா:
இல்லை. உணவு சமைப்பது உயிரைக் காப்பது ஆகும்.
3.
விதைக்காமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம்
தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து
உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
4. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில்
வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
“தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட
ஆமாம்
வில்லினில் பாட
வந்தருள்வாய்
தமிழ் மகளே!
இன்றைய
பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!
ஆமாம்!
பாடப்போகிறோம்.
மருத்துவம்
படித்து மருத்துவ மாேமேதைகள் தான்
இன்று
பெண்கள்…
சட்டம்
படித்து சட்ட மாமேதைகள் தான்
இன்று
பெண்கள்…
பொறியில்
படித்து பொறியியல் மாமேதைகள் தான்
இன்று
பெண்கள்…
ஆமாம்!
வாழிய
வாழிய பெண்கல்வி
ஆமாம்
வாழிய வாழியவே!”
5.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
Ø சென்னைப்
பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.
Ø சென்னை மாகாண
சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர்.
Ø சட்டப்பேரவையின் துணைத்
தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி.
Ø சென்னை மாநகராட்சியின்
முதல் பெண் மேயர்.
Ø சென்னை மாகாண சமூக நல
வாரியத்தின் முதல் பெண் தலைவர்
Ø .புதுக்கோட்டையில் 30.7.1886-இல் பிறந்த முத்துலட்சுமி,
தமிழக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்.
Ø பெண்ணுரிமைக்காக
போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர்.
Ø பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை
ஒழிப்பதற்குச் சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம்.
6.
நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
Ø திருவரங்க நீலாம்பிகை
அம்மையார் (1903-1945) [1] சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர்.
Ø வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர்.
Ø மறைமலை அடிகளாரின்
மகளாகிய இவர், அவரைப்
போன்றே மொழியறிவு நிரம்பியவர்.
Ø தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க
வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத்
தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார்.
Ø வடசொற்றமிழ் அகரவரிசை
என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.
இ) நெடுவினா
1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த
செய்திகளை விவரிக்க.
மூவலூர்
இராமாமிர்தம்
o தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி
o எழுத்தாளர்
o திராவிட இயக்க செயல்பாட்டாளர்
o தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்
o தமிழக
அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை
வழங்கி வருகிறது.
முத்து
லட்சுமி :
o தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
o இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
o சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
o சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி
o அடையாற்றில்
அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
நீலாம்பிகை
அம்மையார்
o மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்
o தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.
o தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை,
முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன் இவர் எழுதிய நூல்கள்
2. குடும்ப
விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய
சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
சங்க காலத்தில் பெண்கள்
கல்வி கற்று தமிழநாடு சிறந்து விளங்கியது.
Ø இடைப்பட்ட
காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து.
Ø சமைப்பது, வீட்டு
வேலைகள் செய்வது என கருதினர்
Ø அறிவுடைய
மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன்
பாடியுள்ளார்.
Ø பெண்கள்
உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ
ஆண்களும் துணை செய்கிறார்கள்.
Ø இன்று
பெண்கள் அனைத்து துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள்.
Ø கல்வியில்
சிறந்து விளங்கிய பெண்கள், முத்து லெட்சுமி அம்மையார்
முதல் பெண் மருத்துவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே
Ø இன்றைய
பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச்
செய்கிறார்கள்.
3. நூலகம், நூல்கள்
ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Ø உலகமெங்கும் வாழும்
மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில்
மனவளம் பெருக வேண்டும்.
Ø வீட்டு நிலை மாற, வீட்டிற்கோர் புத்தகசாலை
வேண்டும்.
Ø வீடுகளில் நற்பண்புகள்
காண வேண்டுமெனில் வெள்ளி, பித்தளை, உடைகள், மருந்துகள், அணிகலன் போன்றவை இருப்பது போன்று
புத்தகங்களும் இருக்க வேண்டும்.
Ø உணவு,உடை,அடிப்படைத்
தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.
Ø இதயத்தைப் பண்படுத்துவன
புத்தகங்களே, மக்களின்
மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே
Ø சுப நிகவுகளில்
புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.
Ø உலக அறிவைத் தரக் கூடிய
நூல்களும், வீட்டிற்கோர்
திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
மொழியை
ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க.
Akbar said, "How many crows are
there in this city?
" Without even a moment's thought,
Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine
crows, my lord".
"How can you be so sure?" asked
Akbar.
Birbal said, "Make your men
count, My lord. If you find more crows it means some have come to visit their
relatives here.
If you find less number of crows it
means some have gone to visit their relatives elsewhere".
Akbar was pleased very much by
Birbal's wit.
இந்த நகரத்தில் எத்தனை
காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து
ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.
எப்படி உன்னால் உறுதியாகச்
சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.
உங்களது ஆட்களை வைத்து
எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள
தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக
இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று
அர்த்தம் என்றார் பீர்பால்.
பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை
உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.
ஆ) பிழை நீக்கி எழுதுக.
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.
மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
நல்ல தமிழில் எழுதுவோம்
3. பவளவிழிதான் பரிசு உரியவள் .
பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
4. துன்பத்தால்
பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.
துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.
5. குழலியும் பாடத் தெரியும்.
குழலிக்கும் பாடத் தெரியும்.
இ) இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
(எ.கா.) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை
புரண்டு ஓடியது. பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
1. அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றமடைந்தனர்
2. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்
3. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
பழனிமலையை விட இமயமலை மிகப் பெரியது
4. கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ் காலம்.
கவலியற்ற எதிர்காலம் அமைய கல்வியே நிகழ்காலம்.
ஈ) விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி
அமைக்க.
புத்தகத் திருவிழா
செப் – 18. தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக
வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி
மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள்
காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி
வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள்
வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும்
வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
உ)
நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
அண்ணாவின்
வாழ்க்கையில்… தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.
ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்.
வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர்,
முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே சோதனை செய்தார்.
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள்,
வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு
வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,"
தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் " என்றார்.
ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், " இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள் "என்றார். அந்த
அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார்.
உடனே , அண்ணா, “ நாங்கள் போடும்
சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின்
கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப்
போன்றவர்கள் தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்”
என்றார்.
1.
மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி
அறிந்தார்?
மகிழுந்தின்
பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள்,
வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு
வந்திருப்பது யார் என்பது புரிந்தது.
2.
அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்?
முதலமைச்சர் என அறியாமல் அவரது வண்டியினை சோதனை
செய்தற்காக அண்ணாவிடம் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்.
3.
அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
“ நாங்கள் போடும்
சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின்
கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப்
போன்றவர்கள் தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்”
என்றார்.
4.
பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை
உருவாக்குக.
தான்: பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன்.
இன்: சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது.
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக:-
கடமை
மொழியோடு
விளையாடு
அ) சொற்களைப்
பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக
மாணவர்கள்
ஆசிரியர் பாடவேளை கரும்பலகை புத்தகம் எழுதுகோல் அழிப்பான் வழிபாட்டுக் கூட்டம் அறை
கல்லூரி உயர்நிலை சீருடை மடிக்கணினி
எ. கா . வழிபாட்டுக் கூட்டத்தில்
மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
1. மாணவர்கள் உயர்நிலை அடைய
வேண்டும் என்றார் ஆசிரியர்.
2. மாணவர்களே! எழுதுகோலும்
அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
3. பாடவேளையின் பொழுது ஆசிரியர்
கரும்பலகையில் எழுதினார்.
4. மாணவர்கள் பாடவேளைக்குரிய
புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
5. வழிபாட்டுக் கூட்டத்தில்
மடிக்கணினி வழங்கப்பட்டது.
6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம்
எடுத்து வா.
7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
தேவை.
8. சீருடை அணிந்தே
வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம்
செய்தான்.
10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.
ஆ) அகராதியில்
காண்க.
அரங்கு - அரங்கம்
ஒட்பம் - அறிவு, அழகு
கான் - காடு
நசை - ஆசை, குற்றம்
பொருநர்- படைவீரன்
இ) படங்களை
இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெ டுத்து எழுதுக.
(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள் , சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்,
தண் ணீர்தண்ணீர் )
1. நா. காமராசனின் கவிதை நூல் …
கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்.
தண்ணீர் தண்ணீர்
3.நோபல்
பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்
கிழவனும் கடலும்
4.சாகித்திய
அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்
ஒரு கிராமத்து நதி
5. எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல்
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி
இது அர்த்தமுள்ள காட்சி
சமூக மாற்றத்திற்கான காட்சி
பெண்கல்வியே சிறப்பு
உ) கடிதம்
எழுதுக.
உங்கள் பள்ளி நூலகத்திற்குத்
தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்ச லில்
அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
க. இளவேந்தன்
மாணவச்செயலர்,
10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி,
பெறுநர்
மேலாளர்,
தமிழ்விதைப் பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
சுமார்
500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை
அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை
எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
நாள் : 01-09
-2021
இடம் : கோரணம்பட்டி
தங்கள் உண்மையுள்ள,
க.இளவேந்தன்.
(மாணவர் செயலர்)
உறைமேல் முகவரி:
மேலாளர்,
தமிழ்விதைப் பதிப்பகம்,
சென்னை-600
001.
ஊ) நிற்க அதற்குத் தக
எனக்குப்
பிடித்தவை / என் பொறுப்புகள்
1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும். எவரையும் காயப்படுத்தாமல்
நடந்துகொள்வது, குறைகூறாமல் பேசுவது என் பொறுப்பு.
2. எனக்குப் படம் வரைவது
பிடிக்கும். பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு
செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு.
எ) கலைச்சொல்
அறிவோம்
சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
தன்னார்வலர் –
Volunteer
களர்நிலம் – Saline Soil
சொற்றொடர் - Sentence
இயல் - 5 - திருக்குறளுக்கான சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள்
காத்திருக்கவும்.