ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
சிறப்பு வழிகாட்டி
இயல் – 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
ஒன்பதாம் வகுப்பு – தமிழ்
அ) பலவுள்
தெரிக.
1. கீழ்க்காணும்
மூன்று தொடர்களுள் –
அ) இருந்த இடத்திலிருந்தே
பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி
உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ) வங்கி
அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு
எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ) திறன்
அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
i) அ, ஆ
ஆகியன சரி; இ தவறு ii)
அ, இ ஆகியன சரி; ஆ தவறு
iii) அ தவறு; ஆ, இ ஆகியன சரி iv) மூன்றும் சரி
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத்
திறனறித் தேர்வு ஆ) ஊரகத்
திறனறித் தேர்வு
இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு ஈ)
மூன்றும் சரி
3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு
என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு
உணர்வு
இ) கேட்டல் ஈ) காணல்
4. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க .
அறிவியல்
வாகனத்தில் நிறுத்தப்படுவேன் எல்லாக் கோளிலும்
ஏற்றப்படுவேன் இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
அ) இணையம் ஆ) தமிழ் இ)
கணினி ஈ) ஏவுகணை
5. விடை வரிசையைத் தேர்க .
அ) இது
செயற்கைக் கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது
கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.
௧) நேவிக், சித்தாரா ௨) நேவிக்,
வானூர்தி
௩) வானூர்தி, சித்தாரா ௪)
சித்தாரா,
நேவிக்
குறுவினா
1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.
பொறுமை, அடக்கம் என்னும்
கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான்
பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
2. இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக்
குறிப்பிடுக.
ü தொலைநகல் இயந்திரம்
( FAX )
ü தானியங்கு பண இயந்திரம்
( ATM )
ü ஆளறி சோதனைக் கருவி
( BIOMETRIC DEVICE )
ü வங்கி கணக்கு அட்டை
அச்சுப்படி இயந்திரம்
ü அட்டை தேய்ப்பி
இயந்திரம்
3. மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்க றிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே
அவற்றொடு செவியே இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு,
நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
ü மூவறிவு – கரையான்,
எறும்பு
ü நாலறிவு – நண்டு,
தும்பி, வண்டு
ü ஐந்தறிவு – பறவை,
விலங்கு
4. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றி திரு.சிவன்
கூறுவது யாது?
ü சித்தாரா – செயலி
ü செயற்கைக்கோள்
ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.
ü தவறு ஏதேனும் நடந்திருந்தால்
உடனே சரி செய்யலாம்.
சிறுவினா
1. 'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
ü கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
ü திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை
மாற்றுங்கள்.
ü ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும்
ஏற்றுங்கள்.
2. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?
அறிவு
நிலை |
அறியும்
ஆற்றல் |
உயிரினங்கள் |
ஓரறிவு |
தொடுதல் |
புல்,மரம் |
ஈரறிவு |
தொடுதல் + சுவைத்தல் |
சிப்பி, நத்தை |
மூவறிவு |
தொடுதல் + சுவைத்தல்
+ நுகர்தல் |
கரையான், எறும்பு |
நான்கறிவு |
தொடுதல் + சுவைத்தல்
+ நுகர்தல் + காணல் |
நண்டு, தும்பி |
ஐந்தறிவு |
தொடுதல் + சுவைத்தல்
+ நுகர்தல் + காணல் + கேட்டல் |
பறவை, விலங்கு |
ஆறறிவு |
தொடுதல் + சுவைத்தல்
+ நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல் |
மனிதன் |
3. பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
- தமிழக அரசு ஆண்டு
தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
- 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
- 9ம் வகுப்பு கிராம
பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
- 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது.
அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே
இணையத்தின் சேவையைப் பெறலாம்
- அரசின் விலையில்லா
மிதிவண்டி,
மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின்
மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
4. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?
ü ஒவ்வொரு ஆண்டும்
விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதனைக் கணித்து அரசுக்குத் தெரிவிக்கும்.
ü எந்த இடத்தில்
நீரின் அளவு எவ்வளவு இருக்கிறது? என்பதனை அறியலாம்.
ü கடல் பகுதியில்
எந்தெந்தப் பகுதியில் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்றும் மீனவர்களுக்கு சொல்ல முடிகிறது.
ü தானியக்கப் பண
இயந்திரம், அட்டைப் பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக் கோள் பயன்படுகிறது.
5. வல்லினம் இட்டும் நீக்கியும்
எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
வல்லினம் மிகும் போது ஒரு பொருளும்
மிகாத போது வேறொரு பொருளும் வருவதைக் காணலாம். நாம் பேசும் போதும் எழுதும் போதும் மயக்கம்
தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகும் இடம், மிகா இடங்களை அறிவது
இன்றியமையாதது.
எடுத்துக்காட்டு
:
1.
மண்வெட்டி கொண்டு வா.
2.
மண்வெட்டிக் கொண்டு வா.
இவற்றில்
முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர்
மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இவ்வா று பொருள் தெளிவை
ஏற்படுத்தவும் வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது இன்றியமையாகிறது.
நெடுவினா
1. அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி
விரிவாகத் தொகுத்து எழுதுக.
அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-
ü வங்கி அட்டையைக்
கொண்டு இன்று தேவைப்படும் போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது.
ü இதன் காரணமாக கால
விரயம் தவிர்க்கப்படுகிறது.
ü மேலும் இந்த அட்டை
மூலம் பல்வேறு விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது.
ü சமையல் எரிவாயு
முன்பதிவு, இரயிலில் முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில்
தேர்வுக்கான கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட
முடிகிறது.
ü வங்கி அனுப்பும்
ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம்.
திறன்
அட்டைக் கருவி:-
·
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.
·
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
·
நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில்
வருடப்படுகின்றன.
·
அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு
செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.
2. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க
இந்திய விண்வெளித்துறை
முன்னுரை:-
இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும்.
இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய
விண்வெளித்துறை படைத்துள்ளது.
இஸ்ரோ:-
·
இந்திய
விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,
·
குறைந்த
செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.
·
இதுவரை
45 செயற்கைக்கோள் வின்னில்
செலுத்தப்பட்டுள்ளன.
·
இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது
இடத்தை பெற்றுள்ளது.
சாதனைகள்:-
·
1975-ல் இந்தியாவின் முதல்
செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது.
விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்
·
1980-ல் முதல் செயற்கைக்
கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.
·
சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.
·
நேவிக்
என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.
முடிவுரை:-
நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை
விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு
மொழியை
ஆள்வோம்
மொழிபெயர்க்க:-
Bottle xylophone: Make music with
bottles You will need: 6 glass bottles, Wooden spoon, Water, Food coloring.
1. Fill one bottle with water, then fill
each other bottle with slightly less than the bottle next to it.
2. Add some food coloring to help you to
see the different levels of water.
3. Tap the bottles with the end of a
wooden spoon. Can you play a tune?
Water music
Hitting the bottles with the spoon makes them
vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note
will be. The more water in a bottle, the less it vibrates, so less water means
higher notes.
கண்ணாடிப்
புட்டிகளாலான இசைக்கருவி.
கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.
தேவையான
உபகரணங்கள்:
- ஆறு கண்ணாடி
புட்டிகள்
- மரத்தாலான கரண்டி
ஒன்று
- தண்ணீர்
- உணவுப்பொருளுக்குப்
பயன்படும் வண்ணப்பொடி
செய்முறை:
- முதல் புட்டியில்
முழுவதுமாக தண்ணீ ரை நிரப்பு. அடுத்தடுத்து வரும் புட்டிகளில் சற்று குறைவாக
நிரப்பிக் கொள்.
- உணவுப்
பொருளுக்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடியை தண்ணீரில் கலந்து கொண்டு,
ஒவ்வொரு புட்டியிலும் வேறுபட்ட அளவில் தண்ணீர்
நிரப்பியிருப்பதை அறிந்துகொள் (பார்த்துக்கொள்)
- இப்போது மரத்தாலான
கரண்டியின் அடிப்பாகத்தைக் கொண்டு புட்டிகளில் தட்டினால்,
இசையை உன்னால் உருவாக்க முடியும்.
தண்ணீர்
இசை
- மரக்கரண்டியின்
அடிப்பாகத்தால் புட்டிகளைத் தட்டும் போது ஏற்படும் அதிர்வுகளால் ஒலி
ஏற்படுகிறது.
- புட்டிகளில் நிறைய
நீர் இருந்தால் குறைவான அதிர்வுகளும், குறைவான நீர் உள்ள
புட்டிகளில் நிறைய அதிர்வுகளும் ஏற்படும். ஒலியின் அளவுகள் வேறுபட்டு
வரும்பொழுது, அதற்கேற்ப இசையும் (Tune) மாறுபட்டு ஒலிக்கும்.
பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச்
சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான்
ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின்
புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு,
காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று
சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு
அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பா க நுனியில். கசப்பு –
உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது
புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை
அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது
ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன்
காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால்தான் பாதாம்
அல்வா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப்
பிடித்துக் கொ ண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும்.
அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம்.
மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனை கள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட்
வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும்
அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை,
அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை.
இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது.
( ஏன்? எதற்கு? எப்படி?
– சுஜாதா)
வீக்கு
– பலவீனம் காபி
– கொட்டை வடி நீர்
ஸேவரி
– இனிப்பு டேஸ்ட்
- ருசி
எக்ஸ்பிரஷன்
– வெளிப்பாடு ஐஸ்கிரீம் –
பனிக்கூழ்
ஜில்
– குளிர்ச்சி பெப்பர்மிண்ட்
– மிளகு இலை மணம் கொண்ட நீர்
மஸ்க்
– வாசனை திரவியம் ஈத்தர்
– வண்ணமில்லாத நீர்
பெட்ரோல்
– வாகன எரிபொருள் அரபுசேக் செண்ட்
– அரபு நாட்டு வாசனை திரவியம்
கதையைப்
படித்து உரையாடலாக மாற்றுக.
ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ,
என்னால் வலி தாங்கமுடியவில்லையே '. ‘ஏன்?
என்னாச்சு? ’ என்று விசாரித்தது இரண்டாவது
சிப்பி. ‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி. ’ இதைக் கேட்டதும் இரண்டாவது
சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்'
என்றது உற்சாகமாக. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு,
இரண்டாவது சிப்பியிடம் சொன்னது– ‘உனக்கு எந்த
வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில
நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை
தேடித்தரும்.
’
சிப்பி 1 : ‘ ஐயோ!
என்னால் வலி தாங்க முடியவில்லையே’
சிப்பி 2 : ஏன்?என்னாச்சு?
சிப்பி 1: எனக்குள்
ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வது போல் இருக்கிறது. ரொம்ப வலி
சிப்பி 2: ஆகா!
நான் எந்த வலியும் இல்லாமல் நலமாக இருக்கிறேன்.
நண்டு : சிப்பியே
உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ
எப்போதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியது தான்.
சிப்பி 2 : அப்பாடியானால்
அந்த சிப்பிக்கு வலி இருக்கிறதே?
நண்டு : இன்னும்
சில நாட்களில் அந்த வலி ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமைத் தேடித் தரும்.
நயம் பாராட்டுக:-
பொங்கியும்
பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான
வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பி
ழம்பே ! மாணிக்கக் குன்றே ! தீர்ந்த
தங்கத்தின்
தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி
கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில்
கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ
காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின்
ஒளிஅ ளாவ அமைந்தனை ! பரிதி வாழி! – பாரதிதாசன்
திரண்ட கருத்து:
புதுப்பிடரி மயிர் சிலிர்க்கும் சிங்கம்
போலப் பொங்கி எழுந்து,வான வீதி முழுதும் எரியும் வெப்பம் மிகுந்த மாணிக்கக் குன்றுபோல்
ஒளி வீசும் தங்கத் தகட்டான பெரியவிளக்கு நெடுவானிலிருந்து தன்னுடைய ஒளிக்கதிர்களைக்
கடல், மணல்,காடு,பொய்கை ஆறு என அனைத்தின் மீது படரச் செய்து என்றும் வளர்ந்திருக்கும்
சூரியனே நீ வாழ்வாயாக என பாரதிதாசன் பாடுகிறார்.
மையக் கருத்து:
கதிரவனின் பெருமைகளை பாரதிதாசன் வருணிக்கிறார்.
மோனை :
அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
மோனை.
பொங்கியும்
–
பொலிந்தும்
நெடுவானில் – நிறைசுடர்
எதுகை :
முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம்
எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சிங்கமே – மங்காத
சொல் நயம் :
மங்காத தணற்பி
ழம்பே ! மாணிக்கக் குன்றே ! தீர்ந்த
தங்கத்தின்
தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே! இவ்வடிகளில் சொல்நயம்
மிகுந்துள்ளது.
அணி நயம் :
பாரதிதாசன் பரிதியைப்(சூரியனை)
பல்வேறு உருவகங்களாகக் காட்சிப் படுத்துகிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி
பயின்றுவந்துள்ளது.
மொழியோடு விளையாடு
அகராதியில் காண்க.
இமிழ்தல் – ஒலித்தல், கக்குதல்
இசைவு
– உடன்பாடு
துவனம் –
நெருப்பு
சபலை
– மின்னல்
துகலம்
– பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு,
எழுதி, அகல், கால்,
அலை)
அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால்
கிடைக்குமா?
ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில்
அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ)
எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை,
ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து – குவித்து; சேர்ந்து
– சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து
– பொருத்து; மாறு – மாற்று.
(எ.கா) விரிந்தது – விரித்தது
அ) மழைக்காற்று வீசியதால், பூவின்
இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
குவிந்து – குவித்து
மாணவத்தலைவராக
பதவி கிடைத்தவுடன் பாராட்டுகள் குவிந்தன. சக மாணவர்களால் பரிசுப் பொருட்கள் குவித்தனர்.
சேர்ந்து – சேர்த்து
ஊர் திருவிழாவில்
மக்கள் ஒன்று சேர்ந்து தேர் இழுத்தனர். பொருட்களை சேர்த்து மகிழ்ந்தனர்.
பணிந்து – பணித்து
ஆசிரியரை மாணவர்கள் பணிந்தனர், வீட்டுப்பாடத்தை விரைவில்
முடிக்க ஆசிரியர் பணித்தார்.
பொருந்து – பொருத்து
பின்வரும் சொற்களைப் பின்குறித்த
பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
மாறு – மாற்று
பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு
மாற்று.
காட்சியைக் கண்டு கவுனுற எழுதுக.
ஏடெடுத்தேன்
கவி ஒன்று எழுத என்னை எழுது
என்று சொன்னது இந்த
காட்சி இது அர்த்தமுள்ள
காட்சி விழிப்புணர்வுக்கான
காட்சி |
|
நிற்க அதற்குத்தக….
என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது
1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து
பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல்
நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக்
கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை
நானே செய்து தருவேன்.
5. குறித்த நேரங்களில் பள்ளி வீட்டுப்பாடங்களை முடிப்பேன்.
6. பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்டு நடப்பேன்
கலைச்சொல்
அறிவோம்
ஏவு ஊர்தி – Launch Vehicle
பதிவிறக்கம் – Download
ஏவுகணை – Missile
பயணியர் பெயர்ப் பதிவு – PNR (Passenger Name Record)
கடல்மைல் – Nautical Mile
மின்னணு இயந்திரங்கள் – Electronic devices
காணொலிக் கூட்டம் – Video Conference
சிறப்பு வழிகாட்டி
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்
பள்ளி, கோரணம்பட்டி,
சேலம்.
8667426866,8695617154
வலைப்பக்கம்
:
WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
YOUTUBE :
https://youtube.com/user/000ramakrishnan