9TH - TAMIL - UNIT -3 - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

WWW.TAMILVITHAI.COM

இயல் – 3                                                                  உள்ளத்தின் சீர்

ஒன்பதாம் வகுப்புதமிழ்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் – எருதுகட்டி            ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

இ) ஆதிச்ச நல்லூர் – அரிக்க மேடு   ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்             

2 முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான       

) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று

) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

 இ) எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

 ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

) திசைச்சொற்கள்                      ஆ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்                         ஈ) தொகைச்சொற்கள்

5.. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

) ஏறுதழுவுதல் என்பதை            ஆ) தமிழ் அகராதி          ) தழுவிப் பிடித்தல் என்கிறது

i) ஆ- அ - இ        ii) ஆ-இ-அ        iii) இ – ஆ – அ   iv) இ – அ - ஆ

) குறுவினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

            மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு.

2. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

Ø  அகழாய்வு வரலாறு முழுமை பெற உதவுகிறது.

Ø  நம் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும்.

3. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

          காளைகளின் பாய்ச்சல் – கலித்தொகை

            மாடு தழுவுதல் – கண்ணுடையம்மன் பள்ளு

            ஏறுகோள் – சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை

4. பழமணல் மாற்றுமின் ; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.

          இடம் : மணிமேகலை

            பொருள் விளக்கம் : விழாக்கள் நிறைந்த மூதூரில் தெருக்கள், மன்றங்கள் எல்லாவற்றிலும் உள்ள பழைய மணலை மாற்றி புது மணலை பரப்புங்கள்.

5. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.

Ø  இரண்டும் ஒன்று தான்.

Ø  இலக்கிய வழக்கு பட்டிமண்டபம்.

Ø  தற்கால வழக்கு – பட்டி மன்றம்

6. ஏறுதழுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

Ø  நடுகல் – சேலம் மாவட்டம்

Ø  பாறை ஓவியம் – கரிக்கையூர்

Ø  கல்முத்திரை – சிந்து வெளி அகழாய்வு

சிறுவினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

Ø  ஏறுதழுவுதல், முல்லை நில மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்தின் வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் இணைந்தது.

Ø  பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடு இணைந்தது.

2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

Ø  முல்லை நில ஆயர்கள் ஏறுதழுவுதலில் பங்கேற்கும் நிகழ்வினை கலித்தொகையில் குறிப்பிடுகிறது.

Ø  முல்லை நில வேளாண் குடிகளின்  வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும்  மரபாக உருகொண்டது ஏறு தழுவுதல்.

3. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

Ø  நிகழ்காலத்தை செம்மையாக்க கடந்த கால நிகழ்வுகளைக் கூறும் அகழாய்வு அவசியம்.

Ø  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பண்பாட்டு வாழ்க்கையைக் காண அகழாய்வு தேவை.

Ø  தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையை சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதனை அகழாய்வு மூலமே அறிய முடியும்.

4 உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்களுடன் ஒப்பிடுக.

ஊர் திருவிழா

இந்திர விழா

Ø  திருவிழா நடைபெறும் தெருக்களில் தோரணம் கட்டப்பட்டு இருக்கும்.

Ø  திருவிழா நடைபெறும் தெருக்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பாடிருக்கும்.

Ø  வாழைத் தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø  விழா நடைபெறும் நிகழ்வுகள் அழைப்பதழ் வழியாக அச்சிடப்பட்டு ஊர் மக்களுக்கு தெரிவிப்பர்

Ø  ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கும்.

Ø  அனைத்து வீடுகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

Ø  முத்துதாமம், தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø  முரசறைந்து இந்திர விழா நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பர்

 

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகளி எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது

நெடுவினா

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

5.  பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-

ü  ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டினையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.

ü  நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளை பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.

ü  மாட்டுப்பெங்கல் விழாவைப் பெரிய நிகழ்வாக கொண்டாட வேண்டும்.

ü  குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும், வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

 

மொழியை ஆள்வோம்

)  பொன்மொழிகளை மொழிபெயர்க்க.

1. A nations’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

            மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால் நேரு

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

          குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப்பெரிய பிரச்சனை – அன்னை தெரஸா

4. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் -A.P.J.அப்துல் கலாம்

5. Winners don’t do different; they do things differently – Shiv Khera

வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறர்கள் - சேவ்கேரா

 

) வடிவம் மாற்றுக:-

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப்  படுத்தி முறையான பத்தியாக்குக.

 1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

 3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

விடை :

1. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

2. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

3. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன

 

இ) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 1. மேடும் பள்ளமும்

          சாலைகள் மேடும் பள்ளமுமாக உள்ளது.

2. நகமும் சதையும்

          நண்பர்கள் நகமும் சதையுமாக இணைபிரியாது உள்ளார்கள்.

3. முதலும் முடிவும்

          ஆசிரியர் தவறு செய்த மாணவனை இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும் என எச்சரித்தார்.

4. கேளிக்கையும் வேடிக்கையும்

          எங்கள் ஊர் திருவிழாவில் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்து இருந்தது.

5.  கண்ணும் கருத்தும்.

          அறிவிழகன் கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில் முதலிடம் பிடித்தான்.

6. மேலும் கீழும்

          ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.

ஈ) தொகுப்புரை எழுதுக.

          பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா நிக  ந் ழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-22 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

ஈ ) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

.            தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற் கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை ?

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்ப டுவது யாது?

இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?

ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

 

விடை : காங்கேயம் காளைகள்

2 ) பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

அ) கர்நாடகம்      ஆ) கேரளா        இ) இலங்கை          ஈ) ஆந்திரா

3) பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன

அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன

ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

4) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் காளைகள் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

அ) வினாத் தொடர்           ஆ) கட்டளைத் தொடர்

இ) செய்தித் தொடர்  ஈ) உணர்ச்சித் தொடர்

  

மொழியோடு விளையாடு

அ) பொருள் எழுதி தொடரமைக்க:-

கரை;கறை      குளவி;குழவி     வாளை; வாழை          பரவை; பறவை

மரை. மறை

கரை – ஆற்றின் ஓரம் – ஆற்றின் ஓரம் புற்கள் நன்றாக வளர்ந்துள்ளது.

கறை – அழுக்கு - அவன் துணியில் கறை அதிகம் உள்ளது.

குளவி – வண்டு – குளவி கொட்டியதில் காதில் வலி.

குழவி – குழந்தை – அனைத்து குழந்தைகளும் நல்லக் குழந்தைகளே.

வாளை – மீன் – கோவில் குளத்தில் வாளை மீன்கள் அதிகம் உள்ளன.

வாழை – மரம் – எங்கள் வீட்டில் வாழை மரம் இரண்டு உள்ளது.

பரவை – கடல் -  மீனவர்கள் மீன் பிடிக்க பரவைக்குச் சென்றனர்.

பறவை – பறப்பவை – மயில் இந்தியாவின் தேசிய பறவை

மரை – மான் -  காட்டில் மரைகள் துள்ளி ஓடின.

மறை – மறைத்தல் – இரகசியத்தை மறை.

 

ஆ) அகராதியில் காண்க.

இயவை – காடு,வழி

சந்தப்பேழை – அழகிய பெட்டி

சிட்டம் – நீதி

தகழ்வு – வீண் ஆடம்பரம்

பெளரி – பண் வகை

 

இ) பொருள் தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல் லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதியாக அத்தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழை மின்கம்பிகள்

 

ü  வைக்காதீர்கள்

ü  காலை வைக்காதீர்கள்

ü  கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

ü  அறுந்த மின் கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

ü  காப்பிக் கம்பிகள் அறுந்த மின்கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

ü  தெருவில் காப்பிக் கம்பிகள் அறுந்த மின்கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

ü  மழைக் காலங்களில் தெருவில்  காப்பிக் கம்பிகள் அறுந்த மின்கம்பிகள் ஆகியவற்றின் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

 

ஈ) குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

2.  விழாவறை காதை குறிப்பிடும்  - இந்திர விழா

3. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளன – தவறு

7 பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சீறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று – தவளை ஓட்டம்

10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் – விதி

13. மா+அடி இதன் புணர்ந்த வடிவம் – மாவடி

19. கொள்ளுதல் என்பதன் முதல் நிலை திரிந்த சொல் – கோள்

வலமிருந்து இடம்

9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் – சிரை

11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் – ஆய்வு

12. மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் – சாத்தனார்

16. சல்லிக்கட்டு விளையாட்டுக்கு உரிய விலங்கு – காளை

18. தனி + ஆள் – சேர்த்து எழுதுக – தனியாள்

மேலிருந்து கீழ்

1. தமிழர்களின் வீர விளையாட்டு – ஏறு தழுவுதல்

2.இவள் + ஐ – சேர்த்தால் கிடைப்பது – இவளை

3. மரத்தில் காய்கள் ----- ஆக காய்த்திருந்தன – திரட்சி

4. ஆடிப்பட்டம் தேடி – விதை

5 உரிச்சொற்களுள் ஒன்று – தவ

6. ____ சிறந்தது – சால

8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் – ஓரை

12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை – சாடிகள்

15. காய் பழுத்தால் – கனி

கீழிருந்து மேல்

14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது – வத்தி

17.  யா முதல் வரும் வினாப் பெயர் – யார்

18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது -  தகையர்

 

ஊ ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

இது அர்த்தமுள்ள காட்சி

பண்பாட்டினைப் போற்றும் காட்சி

 



 

எ) நிற்க அதற்குத் தக

நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்

அ) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்த போது.

ஆ) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.

இ) வயது முதிர்ந்த பாட்டியை சாலையை கடக்க உதவிய போது

ஈ) பள்ளியில் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக முடித்த போது

உ) விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற போது

 

 

சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154

வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM


 WWW.KALVIVITHAIGAL.COM

 


YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan


இயல் -3 க்கான சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்.

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post