9TH - TAMIL - UNIT -3 - THIRUKKURAL - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

WWW.TAMILVITHAI.COM

இயல் – 3                                                                                                                                      திருக்குறள்

ஒன்பதாம் வகுப்புதமிழ்

) படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.

அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

    பேணாமை பேதை தொழில்.

ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

    கேளாது நட்டார் செயின்.

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாந் தலை.

2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற

காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்.

குறள்

அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

    அவியினும் வாழினும் என்.

 ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

   தகுதியான் வென்று விடல்.

இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.

1) பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று  - அ) ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

2) தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

3) அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் -  இ) சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

விடை :

1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று  - இ) சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல

2. தத்தம் கருமமே கட்டளைக்கல் - அ) ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

3) அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்

4. தீரா இடும்பை தருவது எது?

அ. ஆராயாமை, ஐயப்படுதல்                    ஆ. குணம், குற்றம்

இ. பெருமை, சிறுமை                  ஈ. நாடாமை, பேணாமை

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்

நுட்பமான கேள்வியறிவு உடையவர் எப்போதும் நன்மையே செய்வர்

ஆ. பேணாமை – பாதுகாக்காமை

 உடல் நலத்தை பேணாவிடில் நோய் வந்து சேரும்

இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு

எல்லாச் செல்வங்களை விடவும் செவிச் செல்வமே சிறந்தது

 ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்

நாம் எப்போதும் அறன் அல்லாத செயல்களை செய்யக் கூடாது.

 

குறுவினா

1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க   வேண்டும்?

                தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது

 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

          தீயச் செயல்கள் தீயவையே தரும் என்பதால் அவற்றை செய்ய அஞ்ச வேண்டும்.

3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

    ஒற்றினால் ஒற்றிக் கொளல். இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

          மோனை :  ற்றொற்றி -     ற்றினால்

          எதுகை :    ற்றொற்றி -     ற்றினால்    

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

          செயல் வேறு சொல் வேறு  என்று இருப்பவர் நட்பு கனவிலும் இனிக்காது.

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

 மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொ ற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்து விட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பா வி! பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டா ய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை ! நான் மட்டும் பேச வில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

  அறஞ்சூழும் சூழ்ந்த வன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

   அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

   பேதையின் பேதையார் இல

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

   பேதையின் பேதையார் இல்

காரணம்

                படித்தும் ,படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததை மற்றவர்களுக்கு கூறியும் தான் அதன்படி செயல்படாத பேதையைப் போல பேதை யாருமில்லை

கலைச்சொல் அறிவோம்

 அகழாய்வு                     - Excavation

கல்வெட்டியல்                 - Epigraphy

நடுகல்                           - Hero Stone

பண்பாட்டுக் குறியீடு        - Cultural Symbol

புடைப்புச் சிற்பம்              - Embossed sculpture

பொறிப்பு                        - Inscription

 

சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154

வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM                               WWW.KALVIVITHAIGAL.COM

 

YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan


இயல் -3 - திருக்குறளுக்கான சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள்

 காத்திருக்கவும்.

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post