நாள் : 28-03-2022 முதல் 02-04-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் - ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஆசிய ஜோதி
கருபொருள் :
Ø பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்
Ø பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்
உட்பொருள் :
Ø புத்தரின் அறிவுரைகளை
அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø பிற உயிர்களைத் தம்
உயிர் போல் மதித்தல்
Ø பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்
ஆர்வமூட்டல் :
Ø நீதிக்
கதைகள் கூறி ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø பாடலைச் சீர் பிரித்து
ஆசிரியர் வாசித்தல்
Ø ஆசிரியரைத் தொடர்ந்து
மாணவர்களும் பின் தொடர்ந்து வாசித்தல்
Ø பாடலின் பொருளை உணர்ந்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருளை அகராதியில் கண்டு பொருள் எழுதுதல்
நினைவு வரைபடம் :
ஆசிய ஜோதி
தொகுத்து வழங்குதல் :
ஆசிய
ஜோதி
Ø தேசிக விநாயகனார்
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
Ø ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில்
எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத்
தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிற ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில்
எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத்
தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது
Ø அரச வாழ்வைத்
துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான். பிம்பிசார மன்னனின்
யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால்
துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார்.
யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத்
தடுத்து நிறுத்தினார்.
வலுவூட்டல் :
Ø வரைபடத்தாள் மற்றும்
கற்பித்தல் கருவிகள் மூலம் பாடத்தினை கற்பித்து வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø நீள் நிலம் என்பதன் பொருள்
யாது?
Ø அரசனாலும் செய்ய
முடியாத செயல் எது?
Ø புத்தரின்
வரலாற்றைக் கூறும் நூல் ______________
Ø உலகம் முழுமையையும்
எப்போது ஆளமுடியும்?
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø
பாடலைச் சீர்ப் பிரித்துப் படித்தல்
தொடர் பணி :
Ø நீங்கள் மிகவும்
விரும்பும் தாவரங்கள்,
பறவைகள், விலங்குகளின்
பெயர்களைப் பட்டியலிடுக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை