9TH - 10-01-2022 -KALVI TV - VIRIVAGUM AALUMAI - VIDEO AND WORKSHEET

   https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           10 - 01- 2022        

வகுப்பு                    ஒன்பதாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 9   - விரிவாகும் ஆளுமை

காணொளி

பணித்தாள்
1. யாதும் ஊரே யாவரும் கேளீர் - எனக் கூறியவர்

அ. தனிநாயகம்             ஆ. திரு.வி.க            இ. கணியன் பூங்குன்றனார்            ஈ. பாரதிதாசன்

2. “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று”  - எனக் கூறியவர்

அ. தனிநாயகம்             ஆ. திரு.வி.க            இ. தெறென்ஸ்            ஈ. பாரதிதாசன்

3. தெறென்ஸ் என்பவர் எந்த நாட்டுப் புலவர்  

அ. பாரசீகம்                    ஆ. எகிப்து                இ. ஜப்பான்                ஈ. இலத்தீன்

4. முதிர்ந்த ஆளுமைக்கு இன்றியமையாத இலக்கணங்கள் ____________

அ. மூன்று                    ஆ. ஐந்து                    இ. ஆறு                      ஈ. ஏழு

5. கோர்டன் ஆல்போர்ட் என்பவர் ________________________

அ. மருத்துவர்                    ஆ. பாடநூல் வல்லுநர்               இ. ஆசிரியர்                ஈ. உளவியல் வல்லுநர்

6. முதிர்ந்த ஆளுமையில் முதலாவதாக கருதப்படுவது _________________________

அ. அறிந்து கொள்ளுதல்                   ஆ. வாழ்க்கைத் தத்துவம்               இ. ஈடுபாடு               

 ஈ. எதுவும் இல்லை

7. முதிர்ந்த ஆளுமையில் இரண்டாவதாக கருதப்படுவது _________________________

அ. அறிந்து கொள்ளுதல்                   ஆ. வாழ்க்கைத் தத்துவம்               இ. ஈடுபாடு               

 ஈ. எதுவும் இல்லை

8. முதிர்ந்த ஆளுமையில் மூன்றாவதாக கருதப்படுவது _________________________

அ. அறிந்து கொள்ளுதல்                   ஆ. வாழ்க்கைத் தத்துவம்               இ. ஈடுபாடு               

 ஈ. எதுவும் இல்லை

9. எது இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என தனிநாயகம் அவர்கள் கூறுகிறார்?

அ. முயற்சி                                    ஆ. குறிக்கோள்              இ. பயிற்சி              ஈ. மனித நேயம்

10. " பூட்கையில்லோன்  யாக்கை போல" எனக் கூறுபவர்-----------------

அ. தனிநாயகம்             ஆ. திரு.வி.க            இ. ஆலந்தூர் கிழார்            ஈ. தெறென்ஸ்

11. Altruism எனும் பண்பு -----------------

அ. குறிக்கோள்             ஆ. பிறர் நலவியல்           இ. சமுதாயம்            ஈ. ஈடுபாடு

12. லாவோட்சு பிறந்த ஆண்டு_________________________

அ. பொ.ஆ.மு. 604            ஆ. பொ.ஆ.மு. 605        இ. பொ.ஆ.மு. 606          ஈ. பொ.ஆ.மு. 606

13. கன்பியூசியஸ் பிறந்த ஆண்டு_________________________

அ. பொ.ஆ.மு. 581 - 499            ஆ. பொ.ஆ.மு. 561 - 479        இ. பொ.ஆ.மு. 551 - 489          ஈ. பொ.ஆ.மு. 551-479

14. பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் தோன்றிய நாடு_________________________

அ. சீனம்            ஆ. எகிப்து            இ. கிரேக்கம்         ஈ. ஸ்காட்லாந்து

15.  “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என திருக்குறளைப் பற்றி கூறுபவர் ______________________

அ. ஜி.யு.போப்            ஆ. கால்டுவெல்           இ. வீரமாமுனிவர்         ஈ. ஆல்பிரட் சுவைட்சர்

16. தமிழ் இலக்கியத்தை ஆராயும்போது, பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர் ____________________

அ. கபிலர்            ஆ. பரணர்               இ. கம்பர்             ஈ. பாரி

17. பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – ------------- – என்றே வரையறுத்துக் கூறியுள்ளனர்.

அ. மொழிபெயர் தேயம்           ஆ. தேயம்              இ.  மொழி பெயர் நாடு            ஈ. வேற்று கிரகம்

18. யார் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது?

அ. திருவள்ளுவர்           ஆ. அகத்தியர்             இ.  தொல்காப்பியர்          ஈ. ஒளவையார்

19. முதல் உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1966,கோலாலம்பூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1989, மொரீசியஸ்          ஈ. 1968,சென்னை

20. இரண்டாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1966,கோலாலம்பூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1989, மொரீசியஸ்          ஈ. 1968,சென்னை

21. மூன்றாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1966,கோலாலம்பூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1989, மொரீசியஸ்          ஈ. 1968,சென்னை

22. நான்காவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1966,கோலாலம்பூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1974,யாழ்ப்பாணம்          ஈ. 1968,சென்னை

23. ஐந்தாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1966,கோலாலம்பூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1974,யாழ்ப்பாணம்          ஈ. 1981,மதுரை

24. எட்டாவது உலக தமிழ்மாநாடு நடைபெற்ற ஆண்டு மற்றும் நடந்த இடம் எது?

அ. 1995, தஞ்சாவூர்         ஆ. 1970, பாரீசு             இ.  1974,யாழ்ப்பாணம்          ஈ. 1981,மதுரை

25. இத்தாலியில் உரோமையர் என்பது தமிழில் என்னவாக குறிப்பிடப்பட்டு இருந்தது_______

அ. உழைப்பாளர்         ஆ. புகழுடைய மன்னன்            இ.  சான்றோன்          ஈ. கள்வன்

இணைய வழித் தேர்வு
































Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post