காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 10- 01- 2022 & 24-01-2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 9 - அணி இலக்கணம்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது------- அணி எனப்படும்.
அ. வேற்றுமை அணி ஆ. உவமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. உருவக அணி
2 அணி என்பதற்கு _____________ பொருள்
அ. செல்வம் ஆ. அழகு இ. கல்வி ஈ. தொழில்
3. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து - இக்குறட்பாவில் வரும் அணி
அ. வேற்றுமை அணி ஆ. உவமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. உருவக அணி
4. தேனும் வெள்ளைச்சர்க்கரை யும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இதன் மூலம் பெறப்படும் அணி
அ. வேற்றுமை அணி ஆ. உவமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. உருவக அணி
5. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி
அ. தீவக அணி ஆ. வேற்றுமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. உருவக அணி
6. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை க் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது _______அணி எனப்படும்.
அ. தீவக அணி ஆ. வேற்றுமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. உருவக அணி
7 சிலேடை என்பது _____________.
அ) ஆழ்ந்த விளக்கம் உடையது ஆ) இரு பொருள்பட கூறுவது இ) அகராதியைப் பயன்படுத்துவது ஈ) சொற்களஞ்சியம் பெருக்குவது
8. இரட்டுற மொழிதல் அணி இவ்வாறும் வழங்கப்படுகிறது _____.
அ. தீவக அணி ஆ. வேற்றுமை அணி இ. பிறிது மொழிதல் அணி ஈ. சிலேடை அணி
9. ஒரு சொல் இரு பொருள் பெற வைப்பது-------------
அ. அகராதி ஆ. சிலேடை இ. சொற்களஞ்சியம் ஈ. உவமை
10 . பிறிதுமொழிதல்அணியில்_____ மட்டும் இடம்பெறும்.
அ) உவமை ஆ) உவமேயம் இ) தொடை ஈ) சந்தம்
11. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.
அ) ஒற்றுமை ஆ) வேற்றுமை இ) சிலேடை ஈ) இரட்டுற மொழிதல்
12 . ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.
அ) பிறிதுமொழிதல் ஆ) இரட்டுறமொழிதல் இ) இயல்பு நவிற்சி ஈ) உயர்வு நவிற்சி
13 காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ”எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துநர் கேட்டார். அதேநேரம் அருகிலிருந்தவர், ”உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார். அவன், “செங்கல்பட்டு” என்று கூறினான். அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது – மேற்கண்ட கூற்றில் இரு பொருள் தரக்கூடிய சொல் எது?
அ) பயணச்சீட்டு ஆ) காயம் இ) செங்கல்பட்டு ஈ) நேரம்
14 தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இரு கூற்றுகளிலும் ஒற்றுமைப்படுத்தும் சொல் எது?
அ) தேன் ஆ) சர்க்கரை இ) தீங்கு ஈ) இனிப்பு
15. தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இரு கூற்றுகளிலும் வேறுபடுத்தும் சொல் எது?
அ) தேன் ஆ) சர்க்கரை இ) தீங்கு ஈ) இனிப்பு