7TH - 10-01-2022 -KALVI TV - VAYALUM VALVUM - VIDEO AND WORKSHEET

  https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           10 - 01- 2022            

வகுப்பு                    ஏழாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       பருவம் -3 - இயல் - 1   - வயலும் வாழ்வும்

காணொளிக்கான இணைப்பு கிடைத்ததும் பதிவேற்றம் செய்யப்படும்.

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. பசிதீர்க்கும் தொழில் ________________

அ. நெசவு            ஆ. உழவுத்தொழில்            இ. தொழில் நுட்பத் தொழில்       ஈ. ஆசிரியத் தொழில்

2  உழவுத்தொழிலின் செயல்பாடுகளில் ஒன்று வேறுபட்டுள்ளது

அ. நிலத்தை தேர்வு செய்தல்        ஆ. நாற்று நடுதல்  இ. நீர் பாய்ச்சுதல்      ஈ. நூல் நூற்றல்

3. நாட்டுப்புற இலக்கியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

அ. சங்க இலக்கியம்       ஆ. வாயில் இலக்கியம்        இ. வாய்மொழி இலக்கியம்        ஈ. செந்தமிழ் இலக்கியம்

4. நாட்டுப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் உழைப்பு களைப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்கள் ______

அ. தாலாட்டு      ஆ. ஒப்பாரி                                இ. கவிதை                             ஈ. நாட்டுப்புறப் பாடல்கள்              

5. மலையருவி என்னும் பெயரில் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தவர்------------.

அ.  வேதநாயகம்        ஆ. கி.வ.ஜகந்நாதன்            இ. அரங்கநாதன்                   ஈ. சுவாமி நாதன்

6.  உழவர் சேற்று வயலில் __________ நடுவர்.

அ) செடி              ஆ) பயிர்                        இ) மரம்                          ஈ) நாற்று

7 வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை __________ செய்வர்.

அ) அறுவடை       ஆ) உழவு                       இ) நடவு                         ஈ) விற்பனை

 8. தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) தேர் + எடுத்து ஆ) தேர்ந்து + தெடுத்து      இ) தேர்ந்தது + அடுத்து      ஈ) தேர்ந்து + எடுத்து

9.ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

 அ) ஓடைஎல்லாம்              ஆ) ஓடையெல்லாம்            இ) ஓட்டையெல்லாம்          ஈ) ஓடெல்லாம்

 10 . உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர் ?

அ. நிலத்தை தேர்வு செய்யும் போது        ஆ. நாற்று நடும் போது             இ. நீர் பாய்ச்சும் போது      ஈ. நாற்று பறிக்கும் போது

 

11. குழி என்பதன் பொருள் யாது?

அ) முற்றிய நெல்      ஆ)  நில அளவை பெயர்          இ) நீட்டல் அளவை பெயர்                                      ஈ) புடவை

12 சாண் என்பதன் பொருள் யாது?

அ) முற்றிய நெல்      ஆ)  நில அளவை பெயர்          இ) நீட்டல் அளவை பெயர்                                      ஈ) புடவை  

13. மணி என்பதன் பொருள் யாது?

அ) முற்றிய நெல்      ஆ)  நில அளவை பெயர்          இ) நீட்டல் அளவை பெயர்                                      ஈ) புடவை  

14 . சீலை என்பதன் பொருள் யாது?

அ) முற்றிய நெல்      ஆ)  நில அளவை பெயர்          இ) நீட்டல் அளவை பெயர்                                      ஈ) புடவை  

15. கழலுதல் என்பதன் பொருள் யாது?

அ) முற்றிய நெல்      ஆ)  நில அளவை பெயர்          இ) உதிர்தல்                                          ஈ) புடவை  

இணைய வழித் தேர்வு



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post