6TH - 10-01-2022 -KALVI TV - BHARATAHAM ANTRAYUA NATTARANGAL - VIDEO AND WORKSHEET

  https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           10- 01- 2022            

வகுப்பு                    ஆறாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 1  - பாரதம் அன்றைய நாற்றாங்கால்

காணொளி



பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் மனிதர்கள் வேறுபட்டு இருந்தாலும் -----ஒன்றுபட்டவர்களே.

அ. வண்ணம்        ஆ. தூய்மை        இ. உணர்வால்       ஈ. பாடல்

2. தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்

    தேசம் உடுத்திய நூலாடை! -  பாடலில் தெய்வ, தேசம் என்பதற்கான நயம் யாது?

அ. மோனை            ஆ. எதுகை            இ. இயைபு       ஈ. முரண்

3. கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்

   கங்கை அலைகள் இசையமைக்க  - இவ்வடியில் இடம் பெறும் ஆறு எது?

அ. பிரம்மப்புத்திரா        ஆ. கோதாவரி                 இ. கங்கை       ஈ. காவிரி

4. அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

    அறத்தின் ஊன்று கோலா– அறத்தின் ஊன்றுகோலாக கருதப்படுவது எது?

அ. புத்தகம்       ஆ. காந்தியின் கைத்தடி        இ. கல்வி        ஈ. செல்வம்

5. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு எது மேலாடையாக விளங்குகின்றது?

அ. பட்டாடை      ஆ. இலக்கியங்கள்       இ. மெய்யுணர்வு                     ஈ. அன்பு

6. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் _________மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன.

அ.  தமிழ்நாடு        ஆ. கர்நாடகம்       இ. கேரளம்                 ஈ. காஷ்மீரம்

7.  கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்------

அ. அண்ணா           ஆ. கண்ணதாசன்        இ. தாரா பாரதி        ஈ. வாணிதாசன்

8. இராதாகிருஷ்ணன் எழுதாத நூல் _____________

அ. புதிய விடியல்கள்    ஆ.  நிலாக்கால நட்சத்திரங்கள்    இ. விரல் நுனி வெளிச்சங்கள்        ஈ. இது எங்கள் கிழக்கு

9. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம்    ஆ) திருக்குறள்                       இ) திரிகடுகம்                        ஈ) திருப்பாவை

10. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

            அ) காவிரிக்கரை             ஆ) வைகைக்கரை            இ) கங்கைக்கரை              ஈ) யமுனைக்கரை    

11. கலைக்கூடமாகக் காட்சி தருவது

அ) சிற்பக்கூடம்                ஆ) ஓவியக்கூடம்             இ) பள்ளிக்கூடம்               ஈ) சிறைக்கூடம்

12. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நூல்+ஆடை                ஆ) நூலா+டை                 இ) நூல்+ லாடை               ஈ) நூலா+ஆடை

13. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க                  ஆ) எதிர்ஒலிக்க               இ) எதிரொலிக்க               ஈ) எதிர்ரொலிக்க

14. . தேன் + இசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தேன் இசை                 ஆ) தேசை                       இ) தேஇசை                     ஈ) தேனிசை

15. தேசம் என்பதன் பொருள் யாது?

            அ) உலகம்                      ஆ. நாடு                         இ) நகரம்                        ஈ) பூமி 



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post