10TH - 10-01-2022 -KALVI TV - YER PUTHITHA - VIDEO AND WORKSHEET

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           10 - 01- 2022            

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 7   - ஏர் புதிதா

காணொளி

பணித்தாள்

1. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?

அ. நெசவு நெய்தல்             ஆ. பொன் ஏர் பூட்டுதல்           இ. எருதாட்டம்           ஈ. பொங்கல் வைபவம்

2. சங்கத் தமிழரின் திணை வாழ்வு எதனை அடிப்படையாக கொண்டது.

அ. நெசவு             ஆ.  வேளாண்மை           இ. விருந்தோம்பல்            ஈ. கல்வி

3. உலகத்திற்கு அச்சாணி எனப் போற்றப்பட்டவர்கள்_______________

அ. முன்னோர்கள்                   ஆ. ஆசிரியர்கள்                இ. உழுவோர்                ஈ. நெசவாளர்

4. உலகின் முதன்மையான தொழில்_______________

அ. நெசவு                   ஆ. உழவு                    இ. கற்பித்தல்                      ஈ. மருத்துவம்

5. கு.ப.இராஜகோபாலன் பிறந்த ஊர்_______________

அ. கும்பகோணம்                  ஆ. தஞ்சாவூர்               இ. ஈரோடு               ஈ. திருநெல்வேலி

6. சங்கத் தமிழர் வாழ்வு எத்தனை திணை வகைகளாகப் பிரிக்கப்பட்டது?

அ. 2                                     ஆ. 3                        இ. 4                                    ஈ. 5

7. கு.ப.இராசகோபாலன் அவர்களின் காலம்____________

அ. 1902 – 1944                   ஆ. 1902 – 1946                இ. 1903  – 1944                ஈ. 1907  – 1945

8. கு.ப.இராஜகோபாலன் ஆசிரியராக பணியாற்றிய இதழ் _________________________

அ. தினமணி                   ஆ. தினத்தந்தி                             இ. தமிழ்முரசு                ஈ. பாரத மணி

9. இவற்றில் எந்த நூல் கு.ப.இராஜகோபாலன் எழுதவில்லை_____________

அ. சிறிது வெளிச்சம்          ஆ. விடியுமா                              இ. ஆற்றாமை             ஈ. விஜயா

10. கு.ப.இராஜகோபாலன் அவர்களின் மறைவுக்கு பின் எந்த இரு படைப்புகள் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன---------

அ. கனகாம்பரம்,அகலிகை             ஆ. ஆத்ம சிந்தனை, காஞ்சன மாலை           இ. கனகாம்பரம், காஞ்சன மாலை           

ஈ. அகலிகை,ஆத்ம சிந்தனை

 

11. முதல் மழை விழுந்ததும் எது பதமாகிவிட்டது? 

அ. மேல் மண்           ஆ. வரப்புகள்                    இ. வயல்                  ஈ. நாற்று

12. எது புதிது என கு.ப.இராஜகோபாலன் கூறுகிறார்_________________________

அ. கை                   ஆ. கார்                          இ. காடு                ஈ. நட்சத்திரம்

13. ஏர் புதிதா? என்ற கவிதை எந்த நிலத்திற்குரியது ?

அ. குறிஞ்சி            ஆ. மருதம்                       இ. முல்லை                ஈ. நெய்தல்

14. கடுகிச்செல் என்பதன் பொருள்_________________________

அ. மெதுவாக செல்            ஆ. நிதானமாக செல்            இ. விரைவாக செல்         ஈ. அமைதியாக செல்

15.  காட்டைக் கீறுவோம் – என்பதில் காடு என்பது எதனை உணர்த்துகிறது?

அ. மரங்களை                     ஆ. காடுப்பகுதி               இ. மேட்டுப்பகுதி         ஈ. வயல்பகுதி

இணைய வழித் தேர்வு 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post