10TH-TAMIL-REVISION QUESTION AND MODEL PUBLIC EXAM-7-2026

பத்தாம் வகுப்பு
மாதிரி திருப்புதல் மற்றும் பொதுத் தேர்வு-7- 2025
மொழிப்பாடம் – தமிழ்
மீத்திற மாணவர்கள் – சிறப்பு வினாத்தாள்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 100
அறிவுரைகள் :
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    
பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
              ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்
                வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             
           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்
   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(15x1=15)
1. “சிலம்புச் செல்வர்” என்று அழைக்கப்படுபவர் .
அ) பாவாணர்  ஆ) கண்ணதாசன்     இ) ம.பெ.சிவஞானம்  ஈ) மார்ஷல் ஏ.நேசமணி
2.சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க_______
அ) உழவு, ஏர், மண், மாடு      ஆ)  ஏர், உழவு, மாடு, மண்
இ) உழவு, மண், ஏர், மாடு      ஈ) மண், மாடு, ஏர், உழவு
3.  “பாடி மகிழ்ந்தனர்”  என்பது எவ்வகைத் தொடர்
அ)  பெயரெச்சத்தொடர்        ஆ) விளித் தொடர்     இ) எழுவாய்த் தொடர்
ஈ) வினையெச்சத் தொடர்
4. பொருத்துக.
நிலம்       -                தொழில்
அ) குறிஞ்சி-1) ஏறு தழுவுதல்
ஆ) முல்லை- 2) மீன் பிடித்தல்
இ) மருதம்- 3)தேன் எடுத்தல்
ஈ) நெய்தல்-4)களை பறித்தல்
அ)3,1,4,2        ஆ)4,3,2,1       இ)3,4,1,2         ஈ)2,3,4,1
5. காசி காண்டம் என்பது _
அ) காசி நகரத்திற்கு வழிபடுத்தும் நூல்          ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஈ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
6. கண்ணதாசனின் இயற்பெயர்____
அ) முகம்மது ரஃபி      ஆ) முத்தையா  இ) துரை மாணிக்கம்   ஈ) தமிழழகனார்
7. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?___
அ) நெடுஞ்செழியன்; திருமுடி காரி             ஆ) உதியன்;சேரலாதன்
இ) பேகன்; கிள்ளிவளவன்                           ஈ) அதியன்; பெருஞ்சாத்தான்
8.”காலம் கரந்த பெயரெச்சம்” என்று அழைக்கப்படுவது  —------
அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ)  உம்மைத்தொகை   ஈ)  வினைத்தொகை
9. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்  _____
அ)ம.பொ.சி     ஆ) நேசமணி    இ) செங்கல்வராயன்           ஈ) ராஜாஜி
10. இட்லிப் பூ என்று அழைக்கப்படுவது______
அ) கரந்தைப் பூ          ஆ) வஞ்சிப் பூ            இ) நொச்சிப் பூ           ஈ) வெட்சிப் பூ
11.கம்பர் ஆதரித்த வள்ளல் _____
அ) சடையப்ப வள்ளல்           ஆ) கம்ப வள்ளல்       இ) மாணிக்க வள்ளல்  ஈ) தேவர் வள்ளல்
 பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
 நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்_ சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன் 
நகைமுத்த வெண்குடையான் நாடு.
12. இப்பாடல் இடம் பெற்ற நூல்_
அ) கம்பராமாயணம்    ஆ) திருவிளையாடற்புராணம்
இ) தேம்பாவணி          ஈ) முத்தொள்ளாயிரம்
13. “கமுகு”- என்பதன் பொருள்_
அ)  சேறு        ஆ) முத்து       இ) பாக்கு        ஈ) சங்கு
14.  “குவிமொட்டு”- இலக்கணக் குறிப்பு தருக ____
அ) பண்புத்தொகை   ஆ) வினைத்தொகை  இ) உவமைத்தொகை  ஈ) உம்மைத்தொகை
15.”முத்துயுடைய நாடு” என்று அழைக்கப்படுவது____
அ)  முத்து நாடு ஆ) தொண்டை நாடு  இ) பாண்டியநாடு  ஈ)   சோழ நாடு            
பகுதி-II                      
பிரிவு-1   (மதிப்பெண்:18)
 குறிப்புகள்:எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை யளிக்கவும்.
(21 -வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.                                                           (4x2=8)
16. விடைக்கேற்ற வினா அமைக்கவும்.
 அ) புறத்திணை பன்னிரெண்டு வகைப்படும்.
ஆ)   பெருநாவலர் தெய்வப்புலவர் என்று அழைக்கப்படுபவர் திருவள்ளுவர்.
17. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
18.வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
19. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ_ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
20. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
21. “உலகு” என முடியும் குறளை எழுதுக.
                                                             பிரிவு-2
  குறிப்புகள்:எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.(5x2=10)
22. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்_ இத்தொடர் கால
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு ?
23. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக. 
24. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்
ஆ)கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
25. படிப்போம்; பயன்படுத்துவோம்!.
அ) Land Breeze           ஆ)Monarchy
 குறிப்பு: (செவி மாற்றுத்திறனாளருக்கான மாற்று வினா)
பிறமொழிச் சொற்களை எழுதுக. அ) கோல்டு பிஸ்கட்    ஆ) ஆல் தி பெஸ்ட்
26. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) கொஞ்சம் அதிகம்           ஆ) வரப் போகிறேன்
27. தொடரை படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கல் சிலை ஆகுமெனில், நெல்_____ ஆகும்.
ஆ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்_____
28. வெண்பா, ஆசிரியப்பாவின் ஓசைகளை எழுதுக.
 
பகுதி-III
                          பிரிவு-1      (மதிப்பெண்:18)
  குறிப்புகள்:எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.(2x3=6)
29.வாய்மை பற்றிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
30. உரைப்பத்தியைப் படித்து விடை தருக.
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு, முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அ) விருந்தே புதுமை என்று கூறியவர்?
ஆ) விருந்தோம்பல் என்றால் என்ன?
இ) விருந்தினர் என்றால் என்ன?
31. பல துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
பிரிவு-2
 குறிப்புகள்:எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
வினாஎண்: (34- வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.)(2x3=6)
32.  மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
33. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
34.அ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.  (அல்லது)
ஆ) “தூசும்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
பிரிவு-3
குறிப்புகள்:எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.(2x3=6)
35. மார்கழி திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
  பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
36. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக தான். இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
37.    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.      - இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி-IV     (மதிப்பெண்:25)
 குறிப்புகள்:அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                               (5x5=25)
38.அ) சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக. (அல்லது)
ஆ)  பொருள் செயல் வகை என்னும் அதிகாரம் மூலம் வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
39.அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக   (அல்லது)
ஆ) உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
40. காட்சியை கண்டு கவினுற எழுதுக.
41.மதுரை மாவட்டம் 5-வது தெரு, காந்தி வீதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் மகள் தமிழரசி பத்தாம் வகுப்பை தமிழ் வழியில் அரசு உயர்நிலை பள்ளியில் படித்து தற்போது மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் சேர விரும்புகிறார் தேர்வர் தன்னை தமிழரசியாக பாவித்துப் படிவத்தை நிரப்புக.
42.மொழிபெயர்க்க.
அ) Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going _Rita Mae Brown
ஆ) Tomorrow is often dag the busiest day of the week _Spanish Proverb
இ) It is during our darkest moments that we must focus to see the light ._Aristotle
ஈ) Education is what remains after one has forgotten  what are one has learned in school._ Albert Einstein
உ) success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. Win-Ston  Churchill. (அல்லது)
ஆ) பள்ளியிலும் வீட்டிலும் நடந்து கொள்ளும் முறைகளைப் பட்டியலிட்டு எழுதுக.
குறிப்புகள் : (செவி மாற்றுத்திறனாளருக்கான மாற்று வினா)
மேற்கு என்பதற்கு குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; வறண்ட நிலப் பகுதியிலிருந்து வீசுவதால் வெப்ப காற்றாகின்றேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பணிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.
1) மேற்கு என்னும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
2) பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் அழைக்கப்படும் காற்றின் பெயர்?
3. வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர்?  
4. மேற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படும்?
5. மேற்கு காற்று எந்தப் பகுதியில் இருந்து வீசுகிறது?
பகுதி-V     ( மதிப்பெண்கள்:24)
குறிப்புகள்:அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.(3x8=24)
43.அ) சங்ககால தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.  (அல்லது)
ஆ) நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44.அ) ‘பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க (அல்லது)
ஆ)கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுஜர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
45.அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.            (அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
  குறிப்புகள்: முன்னுரை- சாலைப் பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்பு- சாலை விதிகள் ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளைத் தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.
 
முதல் மதிப்பெண்  பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்!
வினாத்தாள் உருவாக்கம்:
P.MUTHUKUMAR -PG TAMIL
 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post