மாதம் :
அக்டோபர்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பருவம் :
இரண்டாம் பருவம்
பாடம் : தமிழ் -
இயல் -1
பாடத்தலைப்பு : அழியாச் செல்வம்
அறிமுகம் :
Ø தமிழ்மொழியின் சிறப்புக் கூறும் பாடல் ஒன்றினைக்
கூறுக
Ø கல்வி குறித்து நீ
அறிந்த செய்திகளை கூறுக
கற்பித்தல்
துணைக் கருவிகள் :
Ø
கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø
கல்வியே
அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை
அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø பாடலின் பொருளை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø கல்வியின் பெருமைகளைக்
கூறல்
கருத்து வரைபடம் : அழியாச்
செல்வம்

விளக்கம் : (
தொகுத்தல் )
அழியாச்
செல்வம்
· கல்வி
பொருள் போல் வைத்திருந்தாலும் பிறரால் கொள்ளப்படாது.
· ஒருவருக்குக்
கொடுத்தாலும் குறைவுபடாது
· அரசராலும்
கவர் முடியாது
· தம்
குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டியச் செல்வம் கல்வி
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு
:
o ஆசிரியர்
குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்
o செய்யுளினைச்
சீர் பிரித்து வாசித்தல்
o செய்யுளில்
புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்
o செய்யுளில்
காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்
o மனப்பாடப்
பகுதியினை மன்னம் செய்தல்
o மனப்பாடப்பகுதியினை
இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
LOT :
Ø வேளாண்
வேதம் என அழைக்கப்படுவது எது?
Ø ஒருவர்
தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேன்டிய செல்வம் ________
MOT
Ø கல்வி
பெறுவதினால் கிடைக்கும் பயன்களைக் கூறுக
Ø கல்வி
செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறுவன யாவை?
HOT:
Ø கல்வியின்
சிறப்பினை விளக்கும் கதை அல்லது நீ அறிந்த கொண்ட நிகழ்வுக் குறித்துக் கூறுக
Ø ‘
கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?
குறைதீர் கற்றல் :
· மதிப்பீட்டின்
மூலம் மாணவர்கள் கடினமாக உணரும் பகுதியைக் கண்டு எளிமைப்படுத்தி சிறு சிறு பகுதிகளாகப்
பிரித்து மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
வலுவூட்டல் :
Ø பாடப்பொருளை
மீண்டும் கற்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்.
கற்றல் விளைவுகள் :
Ø T716
– மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும்.சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றின்
பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
