www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : டிசம்பர்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : தேம்பாவணி
அறிமுகம் :
Ø உனக்குத் தெரிந்த சமயங்களின் பெயர்களையும், அவற்றின் புனித நூல்களின் பெயர்களையும் கேட்டறிந்து அதன் மூலமாகப் பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
Ø வீரமாமுனிவர் பற்றி அறிமுகம் செய்தல்
Ø தேம்பாவணி பற்றி கூறல்
Ø பாடல்களை சீர்ப்பிரித்து வாசித்துக் காட்டி, மாணவர்களையும் வாசிக்க வைத்தல்.
Ø மனப்பாடப்பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்
கருத்துரு வரைபடம் :
தேம்பாவணி
விளக்கம் :
தேம்பாவணி
· சாதாரண உயிரினங்களின் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் மனிதம்
· தேமாவணி – நூற் குறிப்பு
· தேம்பா + அணி = தேம்பாவணி – வாடாத மாலை
· தேன் + பா + அணி – தேம்பாவணி – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
· ஆசிரியர் : வீரமாமுனிவர்
· இயற் பெயர் : கான்சுடான்சு சோசப் பெசுகி
· எழுதிய நூல்கள் : சதுரகராதி, தொன்னூல் விளக்கம், சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்
· இஸ்மத் சன்னியாசி – தூய துறவி
· கருணையன் தாயார் எலிசபெத் அவர்களுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
· அச்சூழலில் அவரின் தாயார் இறந்து விட கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்கு கொள்கிறது
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள் சரளமாக வாசிக்க வைத்தல்
Ø வீரமாமுனிவர் பற்றி அறிதல்
Ø தேம்பாவணி பற்றி அறிதல்
Ø பாடலினை சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்
Ø பாடலின் தொடை நயங்களை உணர்தல்
Ø பாடலின் மையக்கருத்தினை அறிந்து வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø தேம்பாவணியை இயற்றியவர் யார்?
Ø கருணையன் என்பவர் யார்?
MOT :
Ø கருணையன் எதற்காக வருந்துகிறார்?
Ø எவையெல்லாம் அறியேன் என கருணையன் கூறுகிறார்?
HOT :
Ø கருணையன் துன்பத்தை இயற்கை எவ்வாறு காணுகிறது என்பதனை தேம்பாவணி கூறுகிறது?
Ø மற்றவர்கள் இழப்பிற்கு நீங்கள் எவ்வாறு வருந்துவீர்கள்?
கற்றல் விளைவுகள் : தேம்பாவணி
T1047 மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தைப் படித்தல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை