www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்/நவம்பர்
வாரம் : இரண்டாம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 6
தலைப்பு : முத்தொள்ளாயிரம்
அறிமுகம் :
Ø தமிழ்நாட்டில் பண்டைய கால அரசுகளைக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø பல்வேறு நூல்களைப் படித்து, ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்துக் கூறும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø பண்டைய சங்க கால தமிழ்நாட்டின் மூன்று நாடுகளின் வளங்களைக் கூறல்
Ø சேர நாட்டின் வளத்தைப் பற்றிக் கூறல்
Ø சோழ நாட்டின் வளத்தைப் பற்றி கூறல்
Ø பாண்டிய நாட்டின் வளத்தைப் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் : சீவக சிந்தாமணி
விளக்கம் : முத்தொள்ளாயிரம்
· வெண்பாவில் எழுதப்பட்ட நூல் – முத்தொள்ளாயிரம்
· சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது
· சேர நாடு : சேரனின் நாட்டில் அச்சம் இல்லை
· சோழநாடு : வளமும் வீரமும் மிக்கது
· பாண்டிய நாடு: முத்து வளம் மிக்கது
காணொலிகள் :
· விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
· கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
· வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்துப் படித்தல்
Ø செய்யுளில் காணும் புதியச் சொற்களை அடிக்கோடிடல்
Ø புதியச்சொற்களுக்கான பொருளை அகராதிக் கொண்டு பொருள் காணல்
Ø மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்
Ø சேரநாடு, சோழநாடு,பாண்டிய நாடு – வளங்களை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø முத்தொள்ளாயிரத்தில் இடம் பெறும் மூன்று நாடுகள் யாவை?
Ø முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் யார்?
MOT:
Ø சேர நாட்டில் அச்சம் இருக்கின்றது என்பதனைப் பாடல் எவ்வாறு கூறுகிறது?
Ø பாண்டிய நாட்டின் வளம் முத்தொள்ளாயிரம் எவ்வாறு காட்டுகிறது?
HOT:.
Ø நாட்டின் வளங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?
Ø நீங்கள் படிக்கும் உங்கள் பள்ளியின் வளாகம்,வகுப்பறை எவ்வாறு இருக்க வேண்டும்?.
கற்றல் விளைவுகள் :
முத்தொள்ளாயிரம்
T934 இலக்கியங்கள் விவரிக்கும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை