HomeCLASS 11 TTSE-TET-2-10TH-TAMIL-2025-UNIT-02-KEYTTKIRATHA EN KURAL-PAGE24,25 byதமிழ்விதை -September 17, 2025 0 தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025 தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு — 2025 இயல் – 2 : கேட்கிறதா என் குரல் (பக்கம்:24-25) வகுப்பு: 10 — மொத்த மதிப்பெண்: 21 1. பொருத்துக.அ) மூச்சு - 1) நிலம்ஆ) தாகம் - 2) கதிரவன்இ) உறைவிடம் - 3) காற்றுஈ) ஒளி - 4) நீர் அ) 4,2,3,1 ஆ) 3,4,1,2 இ) 4,3,2,1 ஈ) 2,4,3,1 2. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனக் கூறுபவர்_______ அ) திருவள்ளுவர் ஆ) ஒளவையார் இ) தொல்காப்பியர் ஈ) திருமூலர் 3. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர் _________ அ) திருவள்ளுவர் ஆ) ஒளவையார் இ) தொல்காப்பியர் ஈ) திருமூலர் 4. திருமந்திரத்தை இயற்றியவர் __________ அ) திருவள்ளுவர் ஆ) திருமூலர் இ) தொல்காப்பியர் ஈ) ஒளவையார் 5. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்களில் ஆயுள் பெருக்கம் உண்டாம் – என காற்றினைச் சிறப்பிக்கும் நூல்____ அ) திருக்குறள் ஆ) ஒளவை குறள் இ) குறுந்தொகை ஈ) பெரிய புராணம் 6. கிழக்கிலிருந்து வீசும் காற்று _________ அ) குடக்கு ஆ) வாடை இ) குணக்கு ஈ) கோடை 7. வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசும் காற்று _________ அ) ஊதைக்காற்று ஆ) மழைக்காற்று இ) தென்றல் ஈ) வெப்பக்காற்று 8. கூற்று 1 : பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து வீசுவதால் காற்று இதமாக உள்ளது. கூற்று 2 : இதமாக வீசும் காற்று ஊதைக் காற்று என அழைக்கப்படுகிறது. அ) கூற்றுகள் இரண்டும் சரி ஆ) கூற்றுகள் இரண்டும் தவறு இ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி 9. கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்து வீசும் காற்றின் தன்மை அ) வெப்பக் காற்று ஆ) குளிர்காற்று இ) தென்றல் ஈ) மழைக்காற்று 10. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் இவ்வடிகள் இடம் பெற்ற நூல்___ அ) தொல்காப்பியம் ஆ) சிலப்பதிகாரம் இ) தென்றல் விடு தூது ஈ) புறநானூறு 11. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலின் இலக்கிய வகை ______________ அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) காப்பியம் இ) சிற்றிலக்கியம் ஈ) உரை பாட்டு மடை 12. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்____________ அ) பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது ஆ) திருமந்திரம் இ) தொல்காப்பியம் ஈ) புறநானூறு 13. நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே – இக்கவிதையை இயற்றியவர் அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) வண்ணதாசன் ஈ) கண்ணதாசன் 14. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி – இவ்வடிகளில் கடலைக் குறிக்கக்கூடிய சொல்லைத் தேர்க. அ) நள்இரு ஆ) நாவாய் இ) முந்நீர் ஈ) ஓட்டி 15. வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! – இவ்வடிகளில் காற்றைக் குறிக்கும் சொல் அ) ஆண்ட ஆ) வளி இ) மருக ஈ) உரவோன் 16. கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பெண்பாற் புலவர்______ அ) ஒளவையார் ஆ) காரைக்கால் அம்மையார் இ) வெண்ணி குயத்தியார் ஈ) பிற்கால ஒளவையார் 17. கதிரவனின் வெப்பத்தால் சூடாகி அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்று அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை எவ்வாறாக நிரப்புகிறது? அ) வெப்பக்காற்று ஆ) ஊதைக்காற்று இ) புயல் காற்று ஈ) பருவக்காற்று 18. சூன் முதல் செப்டம்பர் வரை வீசும் காற்று அ) புயல் காற்று ஆ) பருவக்காற்று இ) வடகிழக்குப் பருவக் காற்று ஈ) தென்மேற்கு பருவக் காற்று 19. வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலம் அ) ஜனவரி முதல் மார்ச் ஆ) அக்டோபர் முதல் டிசம்பர் இ) சூன் முதல் செப்டம்பர் ஈ) ஜீன் முதல் அக்டோபர் 20. இந்தியாவின் முதுகெலும்பு . அ) ஏழ்மை ஆ) இளமை இ) வேளாண்மை ஈ) முதுமை 21. இந்தியாவிற்கு தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைக் கொடுக்கும் காற்று அ) வடகிழக்கு பருவக் காற்று ஆ) தென்மேற்குப் பருவக் காற்று இ) குளிர்காற்று ஈ) சுழல் காற்று SUBMIT RESET Tags: CLASS 11 CLASS10 TNTET-2 TTSE Facebook Twitter