9TH-TAMIL-NEW EDITION - UNIT - 1 -SPECIMEN-25-26

 

இயல் – 1                                                                                         

அமுதென்று பேர்

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி__________

அ) தமிழ்                ஆ) தெலுங்கு        இ) மலையாளம்     ஈ) கன்னடம்

2 தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச் செய்யுள்      ) புதுக்கவிதை     ) சிற்றிலக்கியம்   ஈ) தனிப்பாடல்

3. பின்வருவனவற்றில் அளபெடை இடம் பெறாத தொடர் எது?

) குக்கூஉ எனக் குயில் கூவியது     ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது

இ) அண்ணாஅ என அழைத்தான்       ) ஓடி வா ஓடி வா

4. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............  - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை, இரட்டைதொடை )இயைபு,அளபெடை, செந்தொடை

) மோனை, எதுகை, இயைபு           ஈ) மோனை, முரண், அந்தாதி

5. சிந்தா மணி என்பதன் இலக்கணக் குறிப்பு__________

) வேற்றுமை தொகை           ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்      

) பண்புத்தொகை                    ) வினைத்தொகை

) குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

          திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

        என்னை ஈர்த்த அடிகள் :

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!-எந்தக்

                   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே

          காரணம் : காலத்தினால் முதலில் தோன்றியது. என்றும்

                          நிலையாய் இருப்பது.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்  

  தொடுக்கப்படும் செய்யுள் வகை.

4. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை

   அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் –

   இலக்கியங்களின் பாடுப்பொருளாக இவ்வடிகள்

    உணர்த்துவன யாவை?

அகவாழ்வையும், புற வாழ்வையும் இவ்விலக்கியங்களின்

இவ்வடிகளின் பாடுப்பொருளாக உணர்த்துகின்றன.

5. தென் திராவிட மொழிகள் எவையேனும் நான்கினை எழுதுக.

தமிழ்           மலையாளம்           கன்னடம்     துளு

6. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

          அளபெடை இரண்டு வகைப்படும்

          1 ) உயிரளபெடை            2) ஒற்றளபெடை  

சிறுவினா

1. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

Ø  தமிழ், அமுதை விட மேலானது.

Ø  இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது

Ø  முத்தமிழாகவும் விளங்குகிறது.

Ø  அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது.

Ø  தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள் இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள்.

Ø  தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி

Ø  என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது.

2.  திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

        1. தென் திராவிட மொழிகள்

          2. நடுத்திராவிட மொழிகள்

          3. வடதிராவிட மொழிகள்

தென் திராவிடம் : தமிழ் மொழி

          தமிழ் என்றென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை அழகாக காட்டும் இலக்கியங்கள் உள்ளன. மனித வாழ்வுக்குத் தேவையான நீதிநெறி கருத்துகளை கூறும் நீதி நூல்கள் உள்ளன.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

          மூன்று – தமிழ்

          மூணு – மலையாளம்

          மூடு – தெலுங்கு

          மூரு – கன்னடம்

          மூஜி – துளு

4. ‘ புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்’–உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

Ø  அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் சூட்டுவதற்கு குரல் கொடுப்பேன்.

Ø  தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.

Ø  பல்வேறுத் துறைகளில் பலவிதமான கலைச்சொற்களை உருவாக்கி தமிழை வளர்ப்பேன்.

Ø  தானியங்கி பணம் எடுக்கு இயந்திரதில் தமிழ் மொழியைத் தெரிவு செய்து பரிவர்த்தனையை மேற்கொள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டுவேன்.

நெடுவினா

1. காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தமிழின் தனித்தன்மைகள்

முடிவுரை

முன்னுரை :

        காலத்தால் அழியாதது , காலம் தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தகைய தமிழ்மொழியானது காலந்தோறும் தன்னை புதுபித்துக் கொள்ளும் திறனும் உண்டு. அத்தகைய தமிழ் மொழியின் தனித்தன்மைகளை இக்கட்டுரை வாயிலாக காணலாம்.

தமிழின் தனித்தன்மைகள்:

        “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் “ என்னும் பாரதியின் கூற்று தமிழின் சிறப்பை பறைசாற்றுகிறது.

Ø  தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. காலத்தால் முன் தோன்றியது.

Ø  தமிழ்மொழி, திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளக்குகிறது

Ø  உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக பேசவும் ,எழுதவும் கூடிய மொழியாக இன்று தமிழ் உள்ளது.

Ø  அனைத்து நிலைகளுக்கும், அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் உண்டு.

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்களும் உண்டு.

Ø  பலசொற்களுக்கு ஒரு பொருள் தரக் கூடிய வளமும் தமிழில் உண்டு.

Ø  இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

முடிவுரை :

        “ தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”  என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழின் தனித்தன்மையை உணர்ந்து உலகம் முழுமைக்கும் தமிழைப் பரவச் செய்ய நம்மால் முடிந்த அளவு முயற்சிகளை செய்ய வேண்டும்.

2. புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

இலங்கை தமிழ்க் குடும்பம்

அகதிமுகாம்

உயிர் வாழும் திறமை

இலக்கியங்களில் புலம் பெயர்தல்

முடிவுரை

முன்னுரை

        தங்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அவலங்களை புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் பாதிப்பு எங்ஙனம் தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாகக் காணலாம்.

இலங்கை தமிழ்க் குடும்பம்

·      இலங்கையில் மவுண்லவினியா என்னுமிடத்தில் ப்ரீஸ் என்பவரின் சிங்களர் வீட்டில் வசித்து வந்தார் கதையின் ஆசிரியர் அ.முத்துலிங்கம்.

·      1958 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் கொழும்புக்கு வந்தது.

·      எங்கள் அண்ணன் பிரீஸிடம் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என வேண்டினார்.

·      எங்களின் பாதுகாப்புக்கு பிரீஸ் உத்திரவாதம் தந்தார்.

·      அடுத்த நாள் அங்கிருந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் எஞ்சியது எங்கள் குடும்பம் மட்டுமே,

அகதி முகாம்

·      போலீஸ் வாகனத்தில் தமிழ் குடும்பங்களை ஒரெயொரு பெட்டி தான் எடுத்து வரலாம் என்ற கட்டளையுடன் அகதிகள் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

·      முத்துலிங்கம், டேனியல் டிஃபோ எழுதிய  ராபின்சன் குரூசோ “ என்ற புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

·      ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவச உடை வழங்கியது.

·      முகாமில் மறியல் கைதிகள் போல வரிசையில் தட்டையேந்தி வரிசையில் உணவுக்காக காத்து நின்றது.

 

உயிர் வாழும் திறமை

·      சில வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரைச் சந்தித்தார் முத்துலிங்கம்.

·      அந்த இளைஞரின் கதை சிற்று வித்தியாசமானது.

·      அவர் இலங்கையிலும், பாங்காக்கிலும் சிறையில் இருந்திருக்கிறார்.

·      விசா கெடுவை மீறி சிங்கப்பூரில் ஒன்பது நாள் தங்கியதற்கு ஒன்பது பிரம்படிகள் பெற்றார்.

·      கள்ள பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அமெரிக்கா சென்றதற்காக சிறை தண்டனையை அனுபவித்தார்.

·      மூன்று வருட சிறைவாசம் முடிந்து கனடாவுக்கு வந்த அவர் தனது 18 வது முயற்சியில் நேர்முகத் தேர்வில் கனரக வானகம் ஓட்டுநராக வேலை கிடைத்தது.

·      புது நாடு கிடைத்த சந்தோசம் இருந்தாலும். கூடவே அகதியான வாழ்வதன் வலியும் மிகவும் பாதித்துள்ளது.

இலக்கியங்களில் புலம் பெயர்தல் :

·      “ வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊர் பாழ்” என நற்றிணைக் கூறுகிறது.

·      தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கினர்.

·      ஃபாரன் ஹீட் 451 என்னும் நூல் , ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும் என்கிறது.

புலம் பெயர்த்தலில் பாதிப்புகள் :

·           ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம் பெயர்ந்துக் கொண்டு தான் இருக்கிறான்.

·           புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, தமிழைக் கைவிட்டுவிடும் என்ற பொதுவான குற்றசாட்டு இருக்கிறது.

·           தமிழர்கள் எட்டுக்கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

·           தாய்மண்ணை விட்டு பிரிந்து வாழும் அவர்களின் நிலை ஆறாத வடுவாக உள்ளது.

முடிவுரை:

எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு, ஐவகை நிலத்திற்கும் நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்திற்கு பாடல்கள் இல்லை. புலம் பெயர்ந்த பத்து இலட்சம் மக்கள் சென்றடைந்தது பனிபிரதேசங்களுக்குத் தான். ஆறுமணி குருவி போல ஈழத்திருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு எல்லையே கிடையாது. அகத்திலும், புறத்திலும் பாதிப்புகள் இருந்தாலும் சூரியன் மறையாத தமிழ்ப்புலம் என்பதற்கு ஏற்ப உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் பரவி உள்ளனர்.

 

 

 

 

 

மொழியை ஆள்வோம்

) மொழி பெயர்க்க:-

1. LINGUISTICS      -      மொழி ஆராய்ச்சி

2. LITERATURE      -      இலக்கியம்

3. PHILOLOGIST     -      மொழியியற் புலமை               

4. POLYGLOT       -      பன்மொழியாளர்    

5. PHONOLOGIST   -      ஒலிச்சின்ன வல்லுநர்

6. PHONETICS       -      ஒலிப்பியல்  

) அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கிறது.    ( திகழ் )

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்துகொள்வாள் ( கலந்துகொள் )

3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.( பேசு )

4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றனர் ( செல் )

5. தவறுகளைத் திருத்துவேன் ( திருத்து )

) வடிவம் மாற்றுக.

          பின்வரும் பத்தியைப் படித்துப் பார்த்து, அச்செய்தியை உங்கள் பள்ளி அறிவிப்புப் பலகையில் இடம் பெறும் அறிவிப்பாக மாற்றுக.

          மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறந்த கல்விப்பணியை வழங்கி வருகிறது. இப்பள்ளி, சிறந்த கவிஞராகத் திகழும் இன்சுவை முதலான பன்முகப் படைப்பாளிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. ஒரு சோற்றுப் பதமாய் மருதூர்ப் பள்ளி மாணவி பூங்குழலி படைத்த “ உள்ளங்கையில் உலகம் “ என்ற நூலின் வெளியீட்டு விழா 21 ஜூன் திங்கள், பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் ( கின்னஸ் சாதனை படைத்த ) முன்னாள் மாணவர் இன்சுவை நூலை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுவார். மருதூர்ப் பள்ளி விழா அரங்கத்தில் நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, அனைவரையும் அழைக்கின்றோம்.

அறிவிப்பு பலகை

அரசு மேல்நிலைப் பள்ளி – மருதூர்

அன்புடையீர்,

வணக்கம். 21-06-2025 புதன் பிற்பகல் 3.00 மணியளவில் பள்ளி விழா அரங்கத்தில் நம் பள்ளி மாணவி ‘ பூங்குழலி ‘  எழுதிய ‘உள்ளங்கை உலகம்‘ என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சிறப்புரை :

          ‘ கின்னஸ்’ சாதனை படைத்த முன்னாள் மாணவர் – சிறந்த கவிஞர் ‘ இன்சுவை ‘

அனைவரும் வருக! வருக

) தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் கல்வி கல்        

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்

3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே

4. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

உ) கடிதம் எழுதுக.

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய “ கால் முளைத்த கதைகள் “ (எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

12, தெற்கு வீதி,

சேலம்-6

                                                                                                28,ஜூன் 2025.

அன்புள்ள நண்பனுக்கு,              

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி,

இப்படிக்கு,

             அன்பு நண்பன்,                                                                                                                                             

         அ.கபிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

ஈரோடு – 1

 

 

எ) நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.

        உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க

உலகத் தாய்மொழி நாள் ( 21-02-2021 )

நிகழ்ச்சி நிரல்

காலை 9    : தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுதல்

தலைமை   : திரு.வெ.ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர்

முன்னிலை : திரு.கு.சிவானந்தன் – மாவட்டக் கல்வி அலுவலர். சேலம் கல்வி மாவட்டம்.

வரவேற்புரை        : திரு.மா.பெருமாள், தலைமை ஆசிரியர்,

அறிக்கை வாசித்தல் : செல்வி. ஆ.கவிப்பிரியா, மாணவச்செயலர்

விழாப் பேருரை : முனைவர்.க.அறிவொளி, தமிழ்

      வளர்ச்சித்துறை.

வாழ்த்துரை     : திரு.இர. இரவி , அறிவியல் ஆசிரியர்.

நன்றியுரை     : திருமதி.ஆ.பாக்கியவதி, அறிவியல் ஆசிரியை.

நாட்டுப்பண்     : மாணவர்கள்.

ஏ) நயம் பாராட்டுக:-

(கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம் பெற வேண்டும் )

விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்

பொழிகின்ற புனலருவிப் பொழிலில்,காட்டில்

புல்வெளியில்,நல்வயலில்,விலங்கில்,புள்ளில்

தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

தெவிட்டாத நுண்பாட்டே,தூய்மை ஊற்றே,

அழகு என்னும் பேரொழுங்கே மெய்யே,மக்கள்

அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!                                   

       - ம.இலெ. தங்கப்பா

முன்னுரை :

        இயற்கை எழிலினை ம.இலெ.தங்கப்பா அவர்கள் பாடிய பாடலில் உள்ள திரண்ட கருத்து, பொருநயம்,சொல் நயம், சந்த நயம், அணி நயம் ஆகியவற்றைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

திரண்ட கருத்து:

வானம்,கடல்,மலை,பள்ளத்தாக்கு,அருவி,குளம்,புல்வெளி,வயல்,விலங்குகள், பறவைகள் போன்ற எல்லா பொருள்களிலும் இயற்கையாகிய அழகு, தூய்மை எனும் பேரொழுக்கம் காணப்படுவது போல மக்கள் உள்ளத்திலும் அவை குடியிருக்க வேண்டும்.

பொருள் நயம்

        நெடுவான், பொழில், மெய், பெருமலை, அகம் என பொருள் பொதிந்துள்ள சொற்களைக் கொண்டு பாடல் இயற்றி இருப்பது சிறப்பு வாய்ந்தது.

தொடை நயம்

        எதுகை, மோனை போன்ற தொடை நயங்களைக் கொண்டு பாடல் இயற்றப்பட்டுள்ளது.

மோனை :

        அடிதோறும், சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது.

        விரிகின்ற          விண்ணோங்கு

          பொழிகின்ற -        புல்வெளியில்

எதுகை:

        அடிதோறும், சீர் தோறும் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.

         விரிகின்ற – தெரிகின்ற

சந்த நயம் :

          இந்தப் பாடல் இசையுடன் பாடுவதற்கு ஏற்ற வகையில் இயற்றப்பட்டுள்ளது.

அணி நயம் :

        இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

முடிவுரை :

        புலவர் செந்தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்து எதுகை, மோனை நயங்களுடனும், இனிய சந்த நயத்துடன் பாடல் அமைத்திருப்பது மிகவும் சிறப்புமிக்கது.

மொழியோடு விளையாடு

அ) அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

          அத்தி,குருவி,விருது,இனிப்பு வரிசையாக

அத்தி : அத்தி – திகைப்புபுகழ்ச்சிசிரிப்பு

குருவி : குருவி – விதி - திகைப்புபுகழ்ச்சிசிரிப்பு

விருது : விருது – துசி – சிரிப்பு – புன்னகை

இனிப்பு : இனிப்பு – புதிது – துலக்கு – குடும்பம்

வரிசையாக : வரிசையாக - கருப்பு – புன்னகை – கைப்பேசி

ஆ) கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.

வா

 

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நான்

வந்தேன்

வருகிறேன்

வருவேன்

நாங்கள்

வந்தோம்

வருகிறோம்

வருவோம்

நீ

வந்தாய்

வருகிறாய்

வருவாய்

நீங்கள்

வந்தீர்கள்

வருகிறீர்கள்

வருவீர்கள்

அவள்

வந்தாள்

வருகிறாள்

வருவாள்

அவன்

வந்தான்

வருகிறான்

வருவான்

அவர்

வந்தார்

வருகிறார்

வருவார்

அவர்கள்

வந்தார்கள்

வருகிறார்கள்

வருவார்கள்

அது

வந்தது

வருகிறது

வரும்

அவை

வந்தன

வருகின்றன

வரும்

 

இ) காட்சியைக் கண்டு கவினுற எழுது.

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ளக் காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

சமூக விளைவைக் காட்டும் காட்சி

தனித்திறனை உணர்த்தும் காட்சி

 

ஈ) அகராதியில் காண்க:-

நயவாமை         விரும்பாமை 

கிளத்தல்    -       சிறப்பித்துக் கூறல்

கேழ்பு        -      உவமை    

செம்மல்     -        தலைவன்

புரிசை       -      மதில்

நிற்க அதற்குத் தக

உங்களுடைய நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.

திங்கள் – வருத்தம் தெரிவிக்கிறேன், பொறுத்துக் கொள்ளவும் ஆகிய சொற்றொடர்களை இன்று இரண்டு முறை வகுப்பில் பயன்படுத்தினேன். இதனால் புதிய நண்பர் கிடைத்தார்

செவ்வாய் -  நான் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்து, அதனை பள்ளியே பாராட்டியது.

புதன் – தம்பியின் பிறந்தநாள் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.

வியாழன் – தமிழ் தேர்வுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது.

வெள்ளி -  முதியோர் ஒருவருக்கு உதவினேன். அவர் நீண்டு வாழ்க என பாராட்டினார்.

சனி – சதுரங்க விளையாட்டு விளையாடினேன்

ஞாயிறு – குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தோம்.

படிப்போம்; பயன்படுத்துவோம்

Comparative Grammar        -  ஒப்பிலக்கணம்     

 Vowels                           - உயிரொலிகள்

Lexicon                           – பேரகராதி   

Consonants                      - மெய்யொலிகள்

அறிவை விரிவு செய்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்

மொழிபெயர்ப்பும் ஒலி பெயர்ப்பும் – மணவை முஸ்தபா

தமிழ் நடைக் கையேடு

மாதிரி அனுமதிக் கடிதம்

அனுப்புநர்

          மு. மகிழன்,

          ஒன்பதாம் வகுப்பு – ‘ அ ‘ பிரிவு

          அரசு உயர்நிலைப் பள்ளி,

          வளையசெட்டிப்பட்டி, சேலம்-637502

பெறுநர்

          வகுப்பாசிரியர் அவர்கள்,

          ஒன்பதாம் வகுப்பு – “ அ “ பிரிவு,

          அரசு உயர்நிலைப் பள்ளி,

          வளையசெட்டிப்பட்டி, சேலம்-637502

ஐயா,

பொருள் : பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி விண்ணப்பித்தல் – சார்பு

          வணக்கம், என் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். நான் இன்று மாலை நான்கு மணிக்கு அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்கு  அழைத்துச் செல்ல வேண்டியுள்ளமையால்,  மாலை மூன்று மணிக்கு பள்ளி முடிவதற்கு முன்பே வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

××××××××××

சேலம்

24-05-2025

பெற்றோர் கையொப்பம்

××××××××××

 CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post