பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
திருக்குறள் - குறு வினாக்கள்
1. “ நச்சப் படாதவன்” செல்வம் – இத்தொடரில் தடித்த
சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப் படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன்
2. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய
வேண்டியதை
Ø நடுநிலையாகக் இருத்தல்
Ø கடமை தவறாது இருத்தல்.
Ø இரக்கம் காட்டுதல்
3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
அ) உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் |
1) ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை |
ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது |
2) உயிரினும்
ஓம்பப்படும் |
இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் |
3) நடு ஊருள்
நச்சு மரம் பழுத்தற்று |
அ) உயிரைவிடச் சிறப்பாகப்
பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப்படும்
ஆ) ஊரின் நடுவில் நச்சு
மரம் பழுத்தது போன்றது - நடு ஊருள்
நச்சு மரம் பழுத்தற்று
இ) ஒழுக்கத்தின் வழி
உயர்வு அடைவர் -
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
4) செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர்
உரைக்கின்றார்?
Ø முயற்சி செய்தால் செல்வம் பெருகும்.
Ø முயற்சி இல்லாவிட்டால் வறுமை வந்து சேரும்.