பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
திருக்குறள் - குறு வினாக்கள்
1. “ நச்சப் படாதவன்” செல்வம் – இத்தொடரில் தடித்த
சொல்லுக்குப் பொருள் தருக.
          நச்சப் படாதவன்    -      பிறருக்கு உதவி செய்யாதவன்
2. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய
வேண்டியதை
Ø  நடுநிலையாகக் இருத்தல்
Ø  கடமை தவறாது இருத்தல்.
Ø  இரக்கம் காட்டுதல்
3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
   
| 
   அ) உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்  | 
  
   1) ஒழுக்கத்தின்
  எய்துவர் மேன்மை  | 
 
| 
   ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது  | 
  
   2) உயிரினும்
  ஓம்பப்படும்  | 
 
| 
   இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்  | 
  
   3) நடு ஊருள்
  நச்சு மரம் பழுத்தற்று  | 
 
அ) உயிரைவிடச் சிறப்பாகப்
பேணிக் காக்கப்படும்     - உயிரினும் ஓம்பப்படும்
ஆ) ஊரின் நடுவில் நச்சு
மரம் பழுத்தது போன்றது    - நடு ஊருள்
நச்சு மரம் பழுத்தற்று
இ) ஒழுக்கத்தின் வழி
உயர்வு அடைவர்                  -
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
4) செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் 
   உரைக்கின்றார்?
Ø  முயற்சி செய்தால் செல்வம் பெருகும். 
Ø  முயற்சி இல்லாவிட்டால் வறுமை வந்து சேரும்.
