SLMDT-10TH-TAMIL-HALF YEARLY EXAM - 2024 - AK

 

 சேலம் – அரையாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

சேலம், தஞ்சாவூர்,கிருஷ்ணகிரி

( ஒரே வினாத்தாள் )

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                           மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) சருகும் சண்டும்

1

2.

இ) ஐ,கு

1

3.

அ) பால் வழுவமைதி

1

4.

ஈ) இலா

1

5.

ஆ) வனத்தின் நடனம்

1

6.

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்தல்

1

7.

ஈ) சிலப்பதிகாரம்

1

8.

இ) வலிமையை நிலைநாட்டல்

1

9.

அ) கூவிளம் தேமா மலர்

1

10.

ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

1

11.

அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை

1

12 .

இ) சீராக

1

13 .

ஈ) பாடுகிறோம், கூறுகிறோம்

1

14 .

ஆ) பாரதியார்

1

15

அ) நெடுமை + காலம்

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

17.

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

18.

·         வருக, வணக்கம்

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்

2

19

வரகு,காடைக்கண்ணி, குதிரை வாலி

2

20

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்.

2

21.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

   பெருமை முயற்சி தரும்.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.

.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

          மெய்ப்பொருள் காண்ப தறிவு.

1

1

23

·         கவிஞர்        – பெயர்ப் பயனிலை

·         சென்றார்      – வினைப் பயனிலை

·         யார்?             - வினா பயனிலை

1

1

24.

அமர்ந்தான்அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர்பகுதி                    த்(ந்) – சந்தி

ந்ஆனது விகாரம்           த்இறந்த கால இடைநிலை

ஆன்ஆண்பால் வினை முற்று விகுதி

2

25

அ. பொருத்தமான தொடரில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

ஆ. பொருத்தமான தொடரில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

26

அ) கற்குவியல்   ஆ) ஆட்டு மந்தை

1

1

27

அ. விடு என்பதற்கு வீடு என எழுதினான்.

ஆ. கொடு என்பதற்கு கோடு என எழுதினான்

1

1

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

 பசும்  , மஞ்சள்

1

1

28

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

1

1

1

30

அ) பழநியப்பன்     ஆ) எம்.ஆர்.இராதா

இ) தூக்கு மேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது.

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

Ø  இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்.

Ø  இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.

Ø  மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்.

Ø  மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்.

3

33

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவைத் தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

3

34அ

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34ஆ

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;                                               -இளங்கோவடிகள்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

காலையில் நீயெழும்பு

ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

தொழு-தகை

நிரை – நிரை

கருவிளம்

2

யுள்-ளும்

நேர் – நேர்

தேமா

3

படை-யொடுங்-கும்

நிரை – நிரை-நேர்

கருவிளங்காய்

4

ஒன்-னார்

நேர் – நேர்

தேமா

5

அழு-தகண்

நிரை – நிரை

கருவிளம்

6

ணீ-ரும்

நேர் – நேர்

தேமா

7

அனைத்து

நிரைபு

பிறப்பு

இக் குறளின் இறுதிச் சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

பயின்று வரும் அணி : உவமை அணி

அணி விளக்கம் :

        புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

அணிப் பொருத்தம் :

அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினைப் பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரியின் மூலம் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களைக் கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்குச் சம‌ம் ஆகு‌ம்.

உவமானம்    - வேலொடு நின்றான் இடுஎன்றது.

உவமேய‌ம்    - கோலொடு நின்றான் இரவு.  

உவம உருபு – போலும்

3

பகுதி - 4

38

·         தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது.

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

38ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

·                 இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

39அ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

 

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

5

39ஆ

அனுப்புதல்

      பாலாஜி,

      12,ராஜ வீதி,

      மேட்டுப்பட்டி,

      சேலம்.

பெறுதல்

                          நகராட்சி ஆணையர் அவர்கள்,

                          நகராட்சி ஆணையம் அலுவலகம்,

                          சேலம்,

ஐயா,

     பொருள் :- தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், புதை சாக்கடைத் தூர்வாரவும் வேண்டுதல் - சார்பு

                       வணக்கம். எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், புதை சாக்கடைத் தூர்வாரவும், நோய் வராமல் தடுக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                              இப்படிக்கு,

                                                                                தங்கள் உண்மையுள்ள,

                                                                                           வெ.பாலாஜி.

உறைமேல் முகவரி

பெறுதல்

                          நகராட்சி ஆணையர் அவர்கள்,

                          நகராட்சி ஆணையம் அலுவலகம்,

                          சேலம்,

 

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும்

பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்.

Ø  அமுத குழம்பினைக் குடிப்போம்.

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.

மையக் கருத்து:

நிலவிலும், நட்சத்திர ஒளியிலும், காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவினைச் சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

          முதலெழுத்து ஒன்றி வருவது மோனை.

                   நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

          முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                   நிலாவையும்  -        குலாவும்

இயைபு :

          செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ, சீரோ,அசையோ ஒன்றி வருவது.   

          வெறிபடைத்தோம்   -        மகிழ்ந்திடுவோம்

அணி நயம்:

          இப்பாடலில் மனதைச் சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

இயற்கை இன்பம்

5

42ஆ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. ஆல, பலா மலர்   2. அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா  3. இலுப்பை

4. பாதரிப் பூ 5. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மலர்படுக்கை

கருணையன் துயரம்

தாயை இழந்த வலி

கருணையன் அறியாதவை

பறவைகள், வண்டுகளின் அழுகை

முடிவுரை

முன்னுரை :

        தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்து இருக்கும் துயரம் பெரிது. வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்போம்.

மலர்படுக்கை :

·         கருணையன் தன் கைகளைக் குவித்து, பூமித்தாயிடம் தன்னை அன்னையின் உடலை அன்போடு காக்க வேண்டும் எனக் கூறினான்.

·         தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும், தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

கருணையன் துயரம் :

·         தாய் கூறிய சொற்களை மழைநீராக உட்கொண்டு, தாயின் மார்பில் ஒரு மணிமாலையாக வாழ்ந்தேன்.

·         நெற்பயிர் மழைநீர் இல்லாமல் வாடி காய்ந்து விட்டத்தைப் போல நானும் தாயை இழந்து வாடுகிறேன்.

தாயை இழந்த வலி :

·         மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலர் போல என் மனம் வாடுகிறது.

·         அம்பினால் துளைக்கப்பட்டு உண்டான புண்ணின் வலியால் தவிப்பது போன்று வாடுகிறேன்.

·         துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகிறேன்.

·         தனித்து விடப்பட்ட காட்டில் வழி தெரியாமல் வாடுகிறேன்.

கருணையன் அறியாதவை:

·         உயிர் பிழைக்கும் வழி அறியேன்

·         உடலின் தன்மையை அறியேன்

·         உடலுக்கு வேண்டிய உணவைத் தேடும் வழி அறியேன்

·         காட்டில் செல்வதற்கான வழிகளை அறியேன்.

பறவைகள், வண்டுகளின் அழுகை :

·         கருணையன் புலம்பியதைக் கண்டு…

·         பல்வேறு இசைகளை இயக்கியது போன்று…

·         தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும்

·         மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும்

·         பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவது போன்று கூச்சலிட்டன,

முடிவுரை :

        துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்டோம்.

8

43ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

தமிழின் சொல் வளம்

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை

முடிவுரை

முன்னுரை :-

        தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளைக் காண்போம்.

தமிழின் சொல்வளம் :

·         தமிழ் சொல் வளம் மிக்கது.

·         அனைத்து சொற்களுக்கும், அனைத்து நிலைகளுக்கும் தமிழ் பெயர் உண்டு.

·         எ.கா : பூவின் நிலை – அரும்பு, போது, மலர், வீ, செம்மல்

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை :

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத் தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினையும் அறியலாம்.

முடிவுரை :

        தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளைக் கண்டோம்.

 

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பேரண்டம்

கருந்துளைகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

முன்னுரை :

          அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன் விண்வெளிப் பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

பேரண்டம் :

        இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளைகள்:

        ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

        விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்பதனை ஹாக்கிங் விளக்கினார்.

தலைவிதி :

        தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

        ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

        ஹாக்கிங் விண்வெளிப் பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

8

44ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

45அ

இடம் : பள்ளி, வகுப்பறை

பங்கேற்பாளர்கள் :    தமிழாசிரியர், ஜனனி, ஜிவிதா , அஸ்வினி,

ஜிவிதா  :      ஜனனி, அஸ்வினி  நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில்

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள் மணி      அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம்.

ஜனனி     :              ஆம், வந்தவுடன் கேட்கலாம்.

மாணவர்கள் : வணக்கம். ஐயா,

தமிழாசிரியர் : வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு உண்டீர்களா?

மாணவர்கள் : உண்டோம் ஐயா.

ஜிவிதா  :                ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள்.

ஜனனி, அஸ்வினி:   ஆமாம். ஐயா.

தமிழாசிரியர் :           ஆம். மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்

மாணவர்கள் : கூறுங்கள் ஐயா.

தமிழாசிரியர் :           1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை அவசியம்.

ஜிவிதா :                 ஐயா, இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம்.

தமிழாசிரியர்  :         அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக் கிளறினாலும்.  தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல சமூகத்தில் கெட்டது இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜனனி       :         ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக்    கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம்.

தமிழாசிரியர் :          மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின்  குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும்.

அஸ்வினி :    ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள் இவ்வாறே நடந்து கொள்வோம். நன்றி ஐயா.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

திருக்குறள்

நூலின் மையப் பொருள்:

        மனித வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டுள்ளது.

மொழிநடை:

        யாவருக்கும் புரியும் வண்ணம் இரண்டு அடிகளால் எழுதப்பட்டது.

வெளிப்படுத்தும் கருத்து:

          உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனை வெளிப்படுத்துகிறது.

நூலின் நயம்:

        ஏழு சீர்களால் எதுகை, மோனை நயங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

        133 அதிகாரங்களையும். அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என 1330 குறள்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கூறு:

          உலகின் பல மொழிகளில் இந்நூல் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

நூல் ஆசிரியர்:

திருவள்ளுவர்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 kindly wait to 10 seconds to get pdf

 

 

 

 

 

 

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post