சேலம் – அரையாண்டுத் தேர்வு -2024
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 10 |
||
வி.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
1. |
அ) வைப்பு |
1 |
2. |
அ) பயிலுதல் |
1 |
3. |
இ) அச்சுக்கலை |
1 |
4. |
ஆ) கல்லாதவர் |
1 |
5. |
இ) நல்வாழ்வுக்காக |
1 |
6. |
ஆ) கல்வி |
1 |
7. |
ஆ) விளி |
1 |
8. |
இ) மூன்று |
1 |
9. |
ஆ) வெம்மை + கரி |
1 |
10. |
ஆ) காலிறங்கி |
1
|
II)
கோடிட்ட இடம் நிரப்புக –
5×1=5 |
||
11.
|
தலை |
1
|
12
. |
மூன்று |
1
|
13
. |
கல்வி |
1
|
14
. |
சேலம் |
1
|
15
|
வளர்ச்சி |
1
|
III)
பொருத்துக 4×1=4 |
||
16
|
பத்துப்பாட்டு |
1
|
17
|
எழுதிய பாடல் |
1
|
18
|
கெடுதல் விகாரம் |
1
|
19
|
புது வருவாய் |
1
|
IV.அடிமாறாமல்
எழுதுக 3+2 = 5 |
||
20அ |
*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு
வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும்
வாழியவே! * |
3 |
20ஆ |
ஆற்றுதல் என்பது
ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது
புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது
தன்கிளை செறாமை அறிவு எனப்படுவது
பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது
கூறியது மறாஅமை நிறை எனப்படுவது
மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது
கண்ஓடாது உயிர் வெளவல் பொறை எனப்படுவது
போற்றாரைப் பொறுத்தல் – நல்லந்துவனார் |
3 |
21. |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல் |
2 |
V)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி 5×2=10 |
||
22 |
நிலம், நீர்,
தீ, காற்று, வானம் எனும் ஐம்பூதங்களால்
ஆனது. |
2 |
23 |
தாய்நாடு
என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது. |
2 |
24 |
தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு
எந்தப் பழியும் ஏற்படாது |
2 |
25.
|
புல்லாங்குழல் , முழவு |
2 |
26 |
விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும் |
2 |
27 |
v உழவர்களின்
கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு
வசதித்திட்டம் v ஆதரவற்ற
மகளிருக்குத் திருமண உதவித் திட்டம் |
2 |
28 |
இன்று
இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார். |
2
|
29
|
கற்றவருக்கு
அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை |
2
|
VI)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி 4×2 =8 |
||
30 |
செய்பவர், கருவி, நிலம், செயல்,
காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும்
வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். |
2 |
31 |
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து
மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். சான்று
:
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள்
என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது |
2 |
32 |
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித
மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். சான்று: தாய் + மொழி =
தாய்மொழி |
2 |
33 |
அ.
௨ ஆ) ௬ |
1 , 1 |
34 |
அ) சாயம் ஏற்றுதல் ஆ) வெட்டுக்கிளி |
1, 1 |
35 |
அ) உண் ஆ) நிரை |
1,1 |
VII)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.
3×3 =9 |
||
36 |
Ø நன்செய், புன்செய்
நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. Ø விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து
நாட்டின் வறுமையைப் போக்குகிறது. Ø புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்
வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது |
2 |
37 |
ü சரியான
உணவு,
சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய
மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். ü எளிமையாகக்
கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள். ü கணினித்திரையிலும்
கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள் |
3
|
38 |
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு,
முறை, எல்லை. |
3 |
39 |
ü சேரனின்
நாடடில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது. அகலமான நிலப்பகுதியில்
விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன. ü முளைத்த
விதைகள் செழிப்புடன் வளர் தட்டுப்பாடின்றி மழை பொழிகின்றது. தகுந்த காலத்தில்
மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது. ü செழித்த
பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன. அக்கதிர்கள் அறுவடை
செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல்
இல்லாமலே இருக்கின்றது. ü நெற்போரினை
அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார
ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய,
சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன் சிறந்து
விளங்குகின்றது. |
3 |
40 |
இத்தொடரில்
பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத்தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்தபெண் வந்தாள் என்னும் பொருள்
தருகிறது. இதில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமைஉருபும் ‘ஆகிய’ என்னும் அதன்
பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண்என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகைஎனப்படும். |
3 |
41 |
ü மூங்கிலைக் கொண்டு பலவகையான
கைவினைப் பொருள்களைச் செய்யலாம். ü மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை,
முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால்
செய்யப்படும் பொருள்கள் ஆகும். பிறந்த குழந்தைக்குத் தொட்டில்
முதல், இறந்தவரை சுமந்து
செல்லும் பாடை பயன்படுத்தப்படுகிறது |
|
VIII
.விடையளி
5×5 =25 |
||
42அ |
ü இல்வாழ்வு
என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். ü பாதுகாத்தல்
என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
ü பண்பு
எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். ü அன்பு
எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி
வாழ்தல். ü அறிவு
எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். ü செறிவு
எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல்
காப்பாற்றுதல். ü நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். ü நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு
உரிய தண்டனைவழங்குதல். ü பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். |
5 |
42ஆ |
Ø காலையும் ,மாலையும்
நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். Ø தூய்மையான காற்றைச்
சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும். Ø குளித்த பிறகு உண்டு,இரவில்
நன்றாக உறங்க வேண்டும். Ø அளவுடன் உண்ண வேண்டும். |
3 |
43 அ |
7, தெற்கு
வீதி, மதுரை-1 11-03-2024. ஆருயிர் நண்பா, நலம் நலமறிய ஆவல். நீ .மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில்
முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.மிக்க
மகிழ்ச்சியாக உள்ளது. நீ இதே போன்று பல
வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படிக்கு, உனது
நண்பன் க.முகிலன். உறைமேல் முகவரி: பெறுதல் த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
5 |
43ஆ |
அனுப்புநர் சே.அறிவுமதி, 562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், நாமக்கல் மாவட்டம்-631003. பெறுநர் வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மாவட்டம்-631003. ஐயா, பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல்
சார்பு. வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து
வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது. நான்
அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும்
இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு, தங்கள் பணிவுடைய
சே.அறிவுமதி. இடம்:
நாமக்கல் நாள்:
12-03-2024. உறைமேல்
முகவரி: பெறுதல் : .வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல்
மாவட்டம்-631003. |
5 |
44 |
1. உடன் 2. பொருட்டு 3. இருந்து 4. காட்டிலும் 5. உடைய |
5 |
45 |
1. நீண்டகாலமாக
இருப்பது 2. இயலாத
செயல் 3. விரைந்து
வெளியேறுதல் 4. இருப்பது
போல் தோண்றும்; ஆனால் இருக்காது 5. ஆராய்ந்து
பாராமல் |
5 |
46 |
1. உலகப்
புத்தக நாள் 2. இராயப்பேட்டை
ஒய்.எம்.சி.ஏ.மைதானம் 3. 11 4. நுழைவு
கட்டணம் இல்லை 5. 10
சதவீதக் கழிவு |
|
IX.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3×8 =24 |
||
47அ |
v தமிழரது
நிலம்,நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. தமிழர் தத்துவங்களான
சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்
உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும்
மாற்றங்களை விளக்கின. v நோயை
இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின்
தன்மை,சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை
மிகத்தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது நாட்டு
வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு
சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும்
விரிந்திருக்கிறது. |
8 |
47ஆ |
v அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய
பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர். v தமிழகத்தில் பழங்காலந் தொட்டே
இக்கலை வளர்ந்திருக்கிறது. கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது, மண்பாண்டங்கள்
ஆகும். v சிந்துசமவெளி, ஆதிச்சநல்லூர்
செம்பியன் கண்டியூர்; கீழடி போன்ற பகுதிகளில் செய்த
அகழ்வாய்வில் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. v களிமண்ணால் உருவாக்கப்படும்
மண்பாண்டங்கள்,
சுடுமண் சிற்பங்கள் போன்றவை முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப்
பொருள்கள் ஆகும். v மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால்
செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள்,
பனையோலையால் செய்யப்படும் பொருட்கள் இவையனைத்தும் கைவினைப்
பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் நிகழாது. v மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள்,
பொருட்கள் அத்தனையும் கைவினைப் பொருட்கள் ஆகும், v அரசு கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கம்
அளித்து வருகிறது. கைவினைக் கலைஞர்களுக்கான சிறுதொழில் கடன் வசதியும் அளித்து
வருகிறது. v அரசு அழகும், நலமும் வாய்ந்த
இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை வாங்குவோம்!
கைவினைக் கலைக்கு உயிர் தருவோம்! |
3
|
48அ |
வெட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப்
புதரின் கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை நேரம் கூரன் என்ற
பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு
சருகுமான், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை.
பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. தலையை மட்டும் தூக்கி
வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது.
வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள்
முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை
அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக்
குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன்
பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின்
துர்நாற்றமே எட்டியது. உயிர்பிழைத்த
கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை
ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம்,
அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என்
கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்' என்று கூறிக்
காட்டுக்குள் ஓடியது. வெட்டுக்கிளியின்
பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற
அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக்
கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
8 |
48ஆ |
முன்னுரை :
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கள்னிவாடி
சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும்
நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்ரமணியத்தின் கவலை:
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ்
துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி
அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி/ நெய்ய
தாமதமாகிறது. மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப்
பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல்
சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார். நண்பன் ரகுவின் உதவி
: நண்பர் ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள்,
அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச்
செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள்
சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள்
என்றார். அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும்! என்கிறார். மாயழகும் ஒச்சம்மாவும்:
ஒச்சம்மா உசிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி
மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமகள் பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ
வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள். பாவு பிணைத்தல்: ரகு
அனுப்பியதாகவும், தன் பிரச்சினையையும்
சுப்பிரமணியம் எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி
ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தவர்
கைக்குழந்தையுடான் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து
விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழத்தை
விழித்துக் கொள்கிறது. குழத்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை முடித்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவலின்
வீட்டிற்குக் கொளண்டுபோய் சேர்க்கிறார். முடிவுரை:
இரவு பகல்
பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் தறி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை
செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது. |
8
|
49
அ |
முன்னுரை: “நூலகம் அறிவின் ஊற்று” ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்” என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில்
நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது
குறித்தும் நாம் காண இருக்கிறோம். நூலகத்தின்
தேவை: “
சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான
நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக
உள்ளது. நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது . நூலகத்தின்
வகைகள்: மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும். நூலகத்தில்
உள்ளவை: மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள்,
சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது
நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். படிக்கும் முறை: நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த
முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும். முடிவுரை: “என்னை தலைகுனிந்து படித்தால், உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்” என்று புத்தகம் மனிதர்களைப்
பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. நூலகமே
என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம்
உணர வேண்டும். |
9
|
49
ஆ |
முன்னுரை: “கைத்தொழில்
ஒன்றைக் கற்றுக்கொள் உனக்கில்லை
ஒத்துக்கொள் எத்தொழில்
எதுவும் தெரியாமல் இருந்திடல்
உனக்கே சரியாமோ? “ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பாடிய பாடலில் கூறியுள்ளார்..இக்கட்டுரையில் கைத்தொழிலின் அவசியம் குறித்துக்
காண்போம். கைத்தொழில் வகைகள்
மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத்
தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல்,
நெசவுத்தொழில்,
பாய்பின்னுதல்,
கூடைமுடைதல்,
ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற
பல கைத்தொழில்களைச் செய்யலாம்.
கைத்தொழிலின்தேவை: . குடிசைத் தொழிலின் மூலம் ஆக்கப்படும் பொருள்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.
அவை அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன. அவை நாள்தோறும்
பயன்படுத்தப்படுவதால் அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத
உற்பத்தியினால் நிறைவேற்றலாம்.
பொருளாதார பயன் ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப்
பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக
இருக்கின்றன நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். சிறு சிறு கைத்தொழில்கள் நாட்டின்
பொருளாதாரத்தையும், அவர்களின் வருவாயையும் கூட்டுகிறது. முடிவுரை:
. எனவே
மாணவர்கள், கல்விப்
பயிற்சி காலத்திலேயே நெசவு தையல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு
கற்றுக்கொண்டால் நாம் கற்ற கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம்
பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம். அயலார் கையை எதிர்பார்க்காமல்
சுயசார்பு உடையவர்களாக வாழ கைத்தொழில் உதவும். |
5 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்