அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கனிவான வணக்கம். தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இந்த கல்வி ஆண்டிற்கான அறிவிப்பு அரசின் தேர்வுகள் துறை மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. பதினொன்றாம் வகுப்பு பயிலும் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் ரூபார் 50 கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம். 05-09-2024 முதல் 19-09-2024 முடிய அரசின் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பு குறித்த செய்தியை கீழ் உள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளவும்.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி வாரந்தோறும் இணையவழியில் நடைபெறும். மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெறவும்.
இணைய வகுப்பு தொடர்பான விளக்கங்கள் பெற : 8667426866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்த இணைய வகுப்பு முற்றிலும் இலவசம்.
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2024
அரசின் செய்திக் குறிப்பு