10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - PANMUGA KALAINGAR

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      பன்முகக் கலைஞர்


அறிமுகம்                   :

Ø  தமிழகத்தில் உழவர் சந்தை, சமத்துவபுரம் இவற்றால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்து கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø   கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் மூலம் சமூகத்திற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க முன்வருதல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø கலைகள் பற்றிக் கூறல்

Ø கலைஞரின் கலைத்திறனைப் பற்றிக் கூறல்

Ø  கலைஞரின் பன்முகத்திறன் பற்றிக் கூறல்

Ø கலைஞர் செயல்படுத்திய இன்றைய நலத்திட்டங்கள் குறித்துக் கூறல்

Ø தமிழ்செம்மொழிக்காக கலைஞர் ஆற்றிய செயல்கள் பற்றி கூறல்

கருத்துரு வரைபடம்              :

பன்முகக் கலைஞர்

விளக்கம்    :

            பன்முகக் கலைஞர்

Ø  1924இல் ஜூன்-3இல் கலைஞர்  முத்துவேலருக்கும்,அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாம் மகவாக பிறந்தவர்.

Ø  இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டி “ வாருங்கள் போருக்குச் சென்றிடுவோம்” என முழங்கியப்படி போராட்டம் நடத்தினார்.

Ø  பட்டுக்கோட்டை அழகிரி, அண்ணா ஆகியோரின் பேச்சில் ஈடுபாடு கொண்டார். “ நட்பு “ என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

Ø  மேடை நாடகங்கள் பல எழுதியுள்ளார்.

Ø  திரைப்படங்களிலும் பல படங்களுக்கு வசனங்களையும், திரைகதைகளும் எழுதியுள்ளார்.

Ø  மாணவ நேசன் என்னும் இதழை நடத்தியுள்ளார்.

Ø  தமிழார்வம் காரணமாக பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார்.

Ø  அறிஞர் கூடும் கவிஅரங்கத்தை மக்கள் கூடும் கவியரங்கமாக மாற்றியவர்.

Ø  கட்டுமானப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார்.

Ø  முத்தமிழிலும் தன் முத்திரையைப் பதித்ததால் முத்தமிழ் அறிஞர் என போற்றப்பட்டார்.

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  கலைஞர் பற்றி அறிதல்

Ø  கலைஞரின் போராட்டப் பண்புகளை அறிதல்

Ø  கலைஞரின் பேச்சுக்கலையைப் பற்றி அறிதல்

Ø  நாடகத்திலும், திரைப்படங்களிலும் அவரின் வசனங்கள், கதைகளை அறிதல்

Ø  கட்டுமானத்தில் கலைஞரின் ஈடுபாட்டினைக் காணுதல்

Ø  கலைஞரின் எழுத்து பற்றி அறிதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  கலைஞர் என்ற பாராட்டுப் பெயர் கொண்டவர்__________

Ø  கலைஞரின் பிறப்பு பற்றிக் கூறுக

                MOT :

Ø  மாணவநிலையில் கலைஞரின் போராட்டப் பண்பினைக் கூறுக.

Ø இளையத்தலைமுறைகளுக்கு கலைஞர் கூறுவது யாது?

                HOT :

Ø கலைஞரின் திரைப்படங்களை வகைப்படுத்திக் கூறுக.

Ø கலைஞர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்கு போன்று நீங்கள் எப்படிப்பட்ட பங்கினை அளிப்பீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :         பன்முகக் கலைஞர்

T1027 கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் மூலம் சமூகத்திற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க ஊக்கமளித்தல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post