6TH - TAMIL - TERM 1 - UNIT -3 - GUIDE

 

இளந்தமிழ்

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

அறிவியல் தொழில் நுட்பம்                                                 அறிவியல் ஆத்திசூடி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. உடல் நோய்க்கு ____________ தேவை.

அ) ஔடதம்  ஆ) இனிப்பு  இ) உணவு  ஈ) உடை

 2. நண்பர்களுடன் _____________ விளையாடு.

அ) ஒருமித்து  ஆ) மாறுபட்டு  இ) தனித்து  ஈ) பகைத்து

3. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______

 அ) கண் + அறி ஆ) கண்டு + அறி இ) கண்ட + அறி ஈ) கண் + டற

4. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) ஓய்வு + அற ஆ) ஓய் + அற இ) ஓய் + வற ஈ) ஓய்வு + வற

5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

அ) ஏன்என்று ஆ) ஏனென்று  இ) ஏன்னென்று ஈ) ஏனன்று

6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________

அ) ஔடதமாம் ஆ) ஔடதம்ஆம் இ) ஔடதாம் ஈ) ஔடதஆம்

ஆ) எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

 1. அணுகு - தெளிவு

2. ஐயம் - சோர்வு

3. ஊக்கம் - பொய்மை

4. உண்மை – விலகு

விடை:

1. அணுகு - விலகு

2. ஐயம் - தெளிவு

3. ஊக்கம் - சோர்வு

4. உண்மை – பொய்மை

இ) பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.

1. சிந்தனை கொள் அறிவியல்

அறிவியல் சிந்தனை கொள்

2. சொல் தெளிந்து ஐயம்

ஐயம் தெளிந்து சொல்

3. கேள் ஏன் என்று

ஏன் என்று கேள்

 4. வெல்லும் என்றும் அறிவியலே

என்றும் அறிவியலே வெல்லும்

ஈ )குறு வினா

 மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

ஒளடதமாம் அனுபவம்

உ) சிறுவினா

பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

Ø  அறிவியல் சிந்தனை வேண்டும்

Ø  ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்

Ø  முடிந்தவரை புரிந்துக் கொள்ள வேண்டும்

Ø  ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்

Ø  உண்மையை கண்டறிந்தால் ஊக்கம் கிடைக்கும்

Ø  என்றும் அறிவியல் வெல்லும்

Ø  வினாக்கள் கேட்க வேண்டும்

Ø  சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

Ø  ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

Ø  வெற்றி கிடைக்கும் வரை ஓய்வில்லாமல் உழை

Ø  அனுபவமே சிறந்த மருந்து.

ஊ) சிந்தனை வினா

உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?

Ø  ஆங்கில மருத்துவம்

Ø  சித்த மருத்துவம்

Ø  யுனானி மருத்துவம்

Ø  ஹலோபதி மருத்துவம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. மனிதன் எப்போதும் உண்மையையே ______________.

 அ) உரைக்கின்றான் ஆ) உழைக்கின்றான் இ) உறைகின்றான் ஈ) உரைகின்றான்

2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

அ) ஆழமான + கடல் ஆ) ஆழ் + கடல் இ) ஆழ + கடல்  ஈ) ஆழம் + கடல்

3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________

அ) நீலம்வான் ஆ) நீளம்வான் இ) நீலவான் ஈ) நீலவ்வான்

5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____

அ) இல்லாதுஇயங்கும் ஆ) இல்லாஇயங்கும் இ) இல்லாதியங்கும் ஈ) இல்லதியங்கும்

ஆ) நயம் அறிக.

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.

ழக்கடல்  ய்வுகள் நீலவானின்   நிலவில்

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

செற்கை  ற்கை நாளை வேளை

3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.

பார்க்கின்றான் நினைக்கின்றான்   சிறக்கின்றான் உரைக்கின்றான்

 இ) குறுவினா

1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?

          செய்தித் தொடர்பு

            இயற்கை சீற்றங்களை முன் கூட்டி அறிய பயன்படுகிறது

 2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

          கோள்களில் நகரம் அமைத்து வாழ்வான். விண்வெளிக்கு பாதை வகுப்பான்.

ஈ) சிந்தனை வினா

 1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக

Ø  விண்வெளியில் மனிதர்கள் தங்குவதற்கு

Ø  அறுவை மருத்துவத்தில்

Ø  வேளாண்மை

Ø  எந்திர மனிதர்கள் உருவாக்கம்

Ø  கோள்கள் பற்றி அறிய

 2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?

Ø  ஒன்பது

Ø  புதன்

Ø  செவ்வாய்

Ø  வெள்ளி

Ø  வியாழன்

Ø  நெப்டியூன்

Ø  யுரேனஸ்

Ø  பூமி

Ø  சனி    

3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?

இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் சந்திராயன் ஆகும்.

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.

 அ) நூலறிவு      ஆ) நுண்ணறிவு     இ) சிற்றறிவு       ஈ) பட்டறிவு

2. தானே இயங்கும் எந்திரம் _______________.

அ) கணினி ஆ) தானியங்கி இ) அலைபேசி ஈ) தொலைக்காட்சி

3. 'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) நின் + றிருந்தஆ) நின்று + இருந்தஇ) நின்றி + இருந்தஈ) நின்றி + ருந்த

 4. ’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

அ) அவ்வு + ருவம் ஆ) அ + உருவம் இ) அவ் + வுருவம் ஈ) அ + வுருவம்

 5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

அ) மருத்துவம்துறைஆ) மருத்துவதுறைஇ) மருந்துதுறைஈ) மருத்துவத்துறை

6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________

அ) செயலிழக்கஆ) செயல்இழக்கஇ) செயஇழக்கஈ) செயலிலக்க

7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------

அ) போக்குதல்     ஆ) தள்ளுதல்     இ) அழித்தல்       ஈ) சேர்த்தல்

 8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------

அ) அரிது            ஆ) சிறிது           இ) பெரிது          ஈ) வறிது

ஆ)  கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை  எந்திரங்கள்

2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு

3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் டீப் புளு

4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு  சவுதி அரேபியா

இ) சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 1. தொழிற்சாலை  - தொழிற்சாலைகளில் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

2. உற்பத்தி  - நெசவு மூலம் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

3. ஆய்வு  - மனிதர்கள் செயற்கை கோளை விண்ணில் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.

4. செயற்கை  - இயந்திர மனிதர்கள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.

5. நுண்ணறிவு - தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை நுண்ணறிவு

ஈ) குறுவினா

 1. ’ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?

Ø  காரல் கபெக் என்னும் செக் நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் 1920 இல் நாடகம் எழுதினார்.

Ø  அதில் ரோபோ என்னும் சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

Ø  ரோபோ என்னும் சொல்லுக்கு அடிமை என்பது பொருள்

 2. ‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.

Ø  டீப் புளூ என்பது ஐ.பி.எம் என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி

Ø  1997 இல் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவரை சதுரங்கப் போட்டியில் வெற்றிக் கொண்டது.

உ) சிறுவினா

 1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.

Ø  தொழிற்சாலையில் உற்பத்தி செய்தல், பழுது நீக்குதல் பணிகள் செய்கிறது.

Ø  மருத்துவத் துறையில் நோயின் அறிகுறியைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

Ø  பிற கோள்களில் சென்று ஆய்வு நடத்துகிறது.

Ø  மனிதர்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் செல்கிறது.

2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?

Ø  மனிதர்கள் செல்ல முடியாது.

Ø  வெப்ப நிலை உறை நிலைக்கும் கீழே இருப்பதால் எந்திர மனிதனை அனுப்புகின்றனர்

 

ஊ)  சிந்தனை வினா

1. உங்களுக்கென ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக

Ø  என்னோடு விளையாடுவதற்கும்

Ø  வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும்

Ø  கல்வி கற்றுதருவதற்கும்

Ø  கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும்..

Ø  வீட்டின் வேலைகளை செய்வதற்கும்

 

ஒளி பிறந்தது

1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

Ø  உணவு உற்பத்தியில் தன்னிறைவு

Ø  தகவல் தொழில் நுட்பத்தில் மிகுதியான வளர்ச்சி

Ø  எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன்

Ø  அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி

Ø  நவீன மருந்துகளும், பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி.

Ø  அக்னி, பிரித்வி ஏவுகணைகளை செலுத்துவதில் வெற்றி

2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

Ø  போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன்.

Ø   பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதுவே தமக்குப் பெருமகிழ்வு அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடுகிறார்.

மொழி முதல், இறுதி எழுத்துகள்

1. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?

Ø  , , , , , ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

Ø  , , , வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

Ø  ங – வரிசையில் '' என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது

2. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

க், ச், ட், த், ப், ம் என்னும் வல்லின மெய்களும், 'ங்' என்னும் மெல்லின மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

      3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் யாவை?

Ø  மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.

Ø  உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்

Ø  ஆய்த எழுத்து சொல்லின் இடையில் வரும்.

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார். ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சி. வி. இராமன்.

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?

சர்.சி.வி.இராமன்

 2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

 அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?

ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?

இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

 ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ? ஏன்?

பிப்ரவரி 28

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக:-

            இராமன் விளைவு

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

அறிவியல் ஆக்கங்கள்

முன்னுரை

            இன்று நாம் அறிவியல் ஆக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். எங்கும் அறிவியல் எதிலும் அறிவியல் என இவ்வுலகம் இயங்கி வருகிறது. நாள் தோறும் புது புது அறிவியல் ஆக்கம்  நிறைந்த செயல்பாடுகளும், கருவிகளும் வந்துக் கொண்டே உள்ளன,

மருத்துவத்துறை

            மருத்துவத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை நாம் காணலாம். முன்பெல்லாம் அறுவை சிகிச்சை எல்லாம் உடலை கிழித்து தான் செய்யப்பட்டது. இன்று சிறு கீறல் இல்லாமல் லேசர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உடலின் பாகங்கள் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யபடுகிறது.

போக்குவரத்துத் துறை

            மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முன்பு கால்நடைகள் கொண்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இன்று விரைவாக செல்லக் கூடிய அதி நவீன வாகனங்கள் அறிவியலின் ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகளாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பம்

   இன்று உலகம் இணைய வ்ழியில் நொடிப் பொழுதில் உலக நடப்புகளை அறிந்துக் கொள்ள இணைய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணையம் மூலம் உலகமே ஒரு கிராமம் போல மாறிவிட்டது.

முடிவுரை

            அறிவியலின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியின் ஒரு மைல் கல். மனிதர்களாகிய நாம் நன்மை தரும் செயல்களை செய்து நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வோம்..

மொழியோடு விளையாடு

சொல்வளம் பெருக்குக.

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

 1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.

அழைப்பு மணியை அழுத்தினான் கணியன்

3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.

மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க இயந்திரங்களைக் கண்டுபிடித்தனர்

4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இன்று பல்வேறு துறைகளிலும் எந்திரமனிதன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது

பகிர்க.

1. ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க

Ø  மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு இயந்திர மனிதன் கொண்டு வேலை செய்வர்

Ø  எந்திரங்களை உருவாக்க வேண்டிய வேலைகள் அதிகரிக்கும்

Ø  எந்திர மனிதன் உருவாக்கிய வேண்டிய கல்விகள் உருவாக்கப் பட வேண்டும்.

Ø  மனிதர்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.

Ø  வருமானம் மனிதர்களுக்கு குறைவு ஏற்படும்..

 கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக.



      - 

 

வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக.

எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்

அப்துல் கலாம்

 

 2. வாக்கியத்தை நீட்டி எழுதுக:-

எ.கா; நான் படிப்பேன் ( அறிவியல் , பாடம், நன்றாக )

நான் அறிவியல் பாடம் படிப்பேன்

நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்

1. அறிந்து கொள்ள விரும்பு. ( எதையும், காரணத்துடன், தெளிவாக )

எதையும் அறிந்து கொள்ள விரும்பு

எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு

எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

2. நான் சென்றேன் ( ஊருக்கு, நேற்று, [பேருந்தில் )

நான் ஊருக்குச் சென்றேன்.

நேற்று நான் ஊருக்குச் சென்றேன்.

நேற்று நான் பேருந்தில் ஊருக்குச் சென்றேன்

3. அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

எ.கா: அறி – அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு

1. பார் – பார்த்தல் , பார்வை, பார்க்க

2. செய் – செய்தல், செய்தி, செய்வினை, செய்யும்

3. தெளி – தெளிதல், தெளிவு, தெளித்தல், தெளியும்

4. படி – படித்தல், படிப்பு, படியேறுதல், படியேறு

 

4. மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்குக.

எ. கா : கம்பு





 

 

 



 

வம்பு, நம்பு,தம்பி, கம்பி, நம்பி

 

5. குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

1. அப்துல் கலாமின் சுயசரிதை – அக்னிச்சிறகுகள்

3. சிந்தித்து செயல்படும் தானியங்கி – எந்திர மனிதன்

10. எந்திர மனிதனுக்குக் குடியுரிமை வழங்கிய முதல் நாடு – சவுதி அரேபியா

வலமிருந்து இடம்

2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல் – ஆய்வு

6. சதுரங்கப் போட்டியில் டீப்புளூ வென்றது.

8. மருந்து என்னும் பொருள் தரும் சொல் – ஒளதடம்

மேலிருந்து கீழ்

1. ரோபோ என்னும் சொல்லின் பொருள் – அடிமை

2. அகரவரிசையில் அமையும் இலக்கியம் – ஆத்திசூடி

7. புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டம் பெற்ற எந்திர மனிதன் – சோபியா

கீழிருந்து மேல்

4. இந்தியா செலுத்திய ஏவுகணை – அக்னி

5. தானாகச் செயல்படும் எந்திரம் – தானியங்கி

9. அப்துல் கலாம் வகித்த  பதவி    குடியரசு தலைவர்

6. சூழலைக் கையாள்க.

மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து பழுதாகிப் பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? • அழ ஆரம்பித்து விடுவேன்.

• யாரிடமாவது உதவி கேட்பேன்.

 அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.

ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.

கலைச் சொல் அறிவோம்

செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence

 மீத்திறன் கணினி - Super Computer

செயற்கைக் கோள் - Satellite

நுண்ணறிவு - Intelligence

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

 

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்


www.tamilvithai.com

www.kalvivithaigal.com

CLICK HERE TO GET PDF - GUIDE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post