6TH - TAMIL - TERM 1 - UNIT 2 - GUIDE

 

இளந்தமிழ்

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 2

இயற்கை இன்பம்                                                                    சிலப்பதிகாரம்

மனப்பாடப்பாடல்

*மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிப்போல்

 மேல்நின்று தான் சுரத்தலான்* - இளங்கோவடிகள்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. கழுத்தில் சூடுவது ------

அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை

2. கதிரவனின் மற்றொரு பெயர் ------

அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்

 3. 'வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) வெண் + குடை ஆ)வெண்மை + குடை இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை

 4. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) பொன் + கோட்டு ஆ) பொற் + கோட்டு இ) பொண் + கோட்டு ஈ) பொற்கோ + இட்டு

 5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) கொங்குஅலர் ஆ) கொங்அலர் இ) கொங்கலர் ஈ) கொங்குலர்

6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ)அவன்அளிபோல் ஆ) அவனளிபோல் இ) அவன்வளிபோல் ஈ) அவனாளி

ஆ) நயம் அறிக.

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

திங்களை – திங்களை

போற்றுதும் – போற்றுதும்

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

திங்களை – திங்களை

போற்றுதும் – போற்றுதும்

இ) குறுவினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

          வெண்ணிலவு, சூரியன், மழை

 2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

          இயற்கை உலக உயிர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வருவதால் போற்றத்தக்கது.

ஈ) சிந்தனைவினா

இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

          ஐம்பெரும் பூதங்களை தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். ஆரம்பத்தில் அச்சம் காரணமாக போற்றியவன் சிந்தனை தெளிவுக் காரணமாக பக்தியினால் போற்றுகிறான்.

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்------

அ) ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு

2. ’சித்தம்’ என்பதன் பொருள் ------

அ) உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ------

அ) அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

 அ) நன்+மாடங்கள் ஆ) நற் +மாடங்கள் இ) நன்மை + மாடங்கள் ஈ) நல் + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) நிலம் + இடையே ஆ ) நிலத்தின் + இடையே இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______

அ) முத்துசுடர் ஆ) முச்சுடர் இ) முத்துடர் ஈ) முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______

அ) நிலாஒளி ஆ) நிலஒளி இ) நிலாவொளி ஈ) நிலவுஒளி

ஆ) பொருத்துக.

1. முத்துச்சுடர்போல - மாடங்கள்

2. தூய நிறத்தில் - தென்றல்

3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி

விடை:

1. முத்துச்சுடர்போல - நிலாஒளி

2. தூய நிறத்தில் - மாடங்கள்

3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

இ) நயம் அறிக.

 1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – ட்டி    தூணில் – துய்ய             காணி - கேணி

 2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – கேணி             ன்மாடங்கள் – தென்னை மரம்   த்து - முத்து

குறுவினா

1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

Ø  காணி அளவு நிலம்

Ø  மாளிகை

Ø  நீருடைய கிணறு

Ø  தென்னை மரங்கள்

2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

Ø  முத்து போன்ற நிலவொளி

Ø  குயிலின் ஓசை

Ø  உள்ளம் மகிழும் இளந்தென்றல்

சிந்தனைவினா

1..பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக.

Ø  வாழை மரம்

Ø  பனை மரம்

Ø  கொய்யா மரம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்

2. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) வேதி + யுரங்கள் ஆ) வேதி + உரங்கள் இ) வேத் + உரங்கள் ஈ) வேதியு + ரங்கள்

 3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) தரையிறங்கும்  ஆ) தரைஇறங்கும்  இ) தரையுறங்கும்  ஈ) தரைய்றங்கும்

4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) வழிதடம் ஆ) வழித்தடம் இ) வழிதிடம் ஈ) வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் சத்தி முத்தப்ப் புலவர்

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசைப் போதல் என்று பெயர்.

 4. இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி

 5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று தட்ப வெப்பம்

இ) சொற்றொடர் அமைத்து எழுதுக.

1. வெளிநாடு – பறவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றன.

2. வாழ்நாள் – வாழ்நாள் முழுவதும் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சலீம் அலி

3. செயற்கை – செயற்கை உரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது.

ஈ) பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

1. மரங்களை வளர்த்து இயற்கை யைக் காப்போம் .செயற்கை

உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)

2. தமிழகத்தில் வலசைப் பறவைககளின் வருகை மிகுந்துள்ளது தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)

குறுவினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

            உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

Ø  தலையில் சிறகு வளர்தல்

Ø  இறகுகளின் நிறம் மாறுதல்

Ø  உடலில் கற்றையாக முடி வளர்தல்

 சிறுவினா

1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

Ø  பறவை : சிட்டுக் குருவி

Ø  நிறம் : பழுப்பு

Ø  ஆண்குருவி : தொண்டைப் பகுதி கறுப்பு நிறம்

Ø  பெண் குருவி : மங்கிய பழுப்பு நிறம்

Ø  இருப்பிடம் : கூடு கட்டி வாழும்

Ø  இனப்பெருக்கம் : மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும். 14 நாட்கள் அடைகாக்கும்

Ø  உணவு : தானியம், புழுபூச்சி, மலர், அரும்பு, இளந்தளிர், தேன்

 2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

Ø  உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலைக் காரணமாக வலசைப் போகின்றன.

Ø  வலசையின் போது பறவையின் உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன.

Ø  வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

சிந்தனைவினா

1. பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக

Ø  மரங்களை வளர்க்க வேண்டும்.

Ø  மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை வளர்க்க வேண்டும்.

Ø  செயற்கை உரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

Ø  இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்

கிழவனும் கடலும்

‘ கிழவனும் கடலும் ‘ என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.

Ø  கதையின் நாயகன் சாண்டியாகோ

Ø  வயது முதிர்ந்த மீனவர்

Ø  கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்

Ø  84 நாட்களாக அவர்க்கு மீன் கிடைக்கவில்லை

Ø  மனோலின் என்னும்சிறுவன் மீன் பிடிக்க கற்றுக் கொள்வதற்காக முதல் 40 நாட்கள் அவருடன் கடலுக்கு வந்தான்

Ø  40 நாட்களாக மீன் கிடைக்காத்தால் அவனை அவனது பெற்றோர் வேறொரு படகிற்கு அனுப்பிவிட்டனர்.

Ø  எண்பத்தி ஐந்தாவது நாள் மீன் பிடிக்க செல்கிறார். தொடர் முயற்சியின் பயனாக பெரிய சுறா மீன் கிடைக்கிறது.

Ø  ஆனால் அதனை கொண்டு வருவதற்குள் அனைத்து மீன்களும் அந்த மீனை உணவாகக் கொண்டன. இறுதியில் எலும்புக் கூடு மட்டுமே மிச்சம்.

Ø  மனம் தளராது வென்ற முதியவரிடம் மீண்டும் சிறுவன் கற்றுக் கொள்ள வந்தான்

Ø  நீதி : முயற்சிக்கு வயது தடை இல்லை. முயற்சி செய்தால் வானமே வசமாகும் என்பது முதியவரின் முயற்சியில் தெரிந்தது

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

Ø  உயிர் எழுத்து 12 , மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள்

Ø  பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதற் காரணமாக இவை இருப்பதால் இவை முதல் எழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.

2. சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?

Ø  சார்பெழுத்துகள் 10.

Ø  அவை,

o    உயிர்மெய்

o    ஆய்தம்

o    உயிரளபெடை

o    ஒற்றளபெடை

o    குற்றியலுகரம்

o    குற்றியலிகரம்

o    ஐகார குறுக்கம்

o    ஒளகார குறுக்கம்

o    ஆய்தக் குறுக்கம்

o    மகரக் குறுக்கம்

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம் பெறும்?

தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள். இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 1. எதனை இயற்கை என்கிறோம்?

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்

2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?

Ø  பனிபடர்ந்த நீலமலைகள்

Ø   பாடித்திரியும் பறவைகள்

Ø  தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்

Ø  சலசலக்கும் ஓடைகள்

Ø  ஆர்ப்பரித்து வீழும் அருவிகள்

Ø  நீந்தும் மீன்கள்

Ø  அலைவீசும் அழகிய கடல்

Ø  கண்சிமிட்டும் விண்மீன்கள்

Ø  தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

இயற்கை

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம்

முன்னுரை

           இயற்கை மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

       இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இயற்கை மாசடைதல்

            இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக  பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.

·         நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.

·         நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.

·         வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி நில மாசு ஏற்படுத்துகிறோம்.

இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

·         கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமை

·         நெகிழி மற்றும் குப்பைகளை எரிக்காமை

·         பொதுப் போக்குவரத்து பயன்பாடு

·         மின் சிக்கனம்,நீர் சிக்கனம்

·         இயற்கை உரங்கள் பயன்பாடு

முடிவுரை

    இயற்கையை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வளமான இயற்கையை வழங்கிடுவோம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக

. ’கடல்’ என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக

பரவை, தெண்டிரை, அழுவம், உவரி, அரலை

1. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

(எ. கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

கபிலன் வேலை செய்தான். அவன் களைப்பாக இருக்கிறான்.

 2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள். அவள் பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)

3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் (அலைத்தாள் / அழைத்தாள்)

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

வை

 1. ‘புள்’ என்பதன் வேறு பெயர் – 

சை

போ

ல்

 2. பறவைகள் இடம்பெயர்தல் –

பு

லி

ம்

3. சரணாலயம் என்பதன் வேறு பெயர் -

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

            சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

 2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

          பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

. 3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.

          சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

          இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

கட்டங்களில் சில சொற்கள்  மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொன்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

 

 

1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம்

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

3. திங்கள் என்பதன் பொருள் நிலவு

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை

 5. பாரதியார் காணிநிலம் வேண்டும் என்று பாடுகிறார்.

 6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் தனிநிலை

ஆய்ந்தறிக.

பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா ?

Ø  சரி இல்லை.

Ø  இயற்கையோடு தான் இயைந்து வாழ வேண்டும்.

Ø  மரங்களை அழிக்காமல் நட்டு வளர்க்க வேண்டும்.

Ø  நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

Ø  இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.

Ø  நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கவிதை படைக்க. கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.

 வானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

குளங்கள் அனைத்தும் நிரம்பிவிடும்

பயிர்கள் நன்கு வளர்ந்திடும்

உயிர்கள் வையத்தில் வாழ்ந்திடும்

-கலைச் சொல் அறிவோம்

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Climate

வானிலை  - Weather

வலசை - Migration

புகலிடம் -  Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

 

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்


www.tamilvithai.com

www.kalvivithaigal.com

CLICK HERE TO GET PDF - GUIDE

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post