இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத்
தொகுப்பு
பருவம்
: 1 இயல்
: 1
தமிழ்த் தேன் இன்பத்தமிழ்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத்
தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
அ)
சமூகம் ஆ)
நாடு இ) வீடு ஈ) தெரு
2. நாள்
முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ)
அசதி
3. நிலவு + என்று என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) நிலயென்று ஆ)
நிலவென்று இ)
நிலவன்று ஈ) நிலவுஎன்று
4. தமிழ்
+ எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள்
5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) அமுது +
தென்று ஆ)
அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ)
அமு + தென்று
6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ)
செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர்
ஆ)
இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
1. விளைவுக்கு – பால்
2. அறிவுக்கு - வேல்
3. இளமைக்கு
- நீர்
4. புலவர்க்கு
- தோள்
1. விளைவுக்கு – நீர்
2. அறிவுக்கு – தோள்
3. இளமைக்கு – பால்
4. புலவர்க்கு - வேல்
இ)
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
பேர் - நேர்
பேர் – நேர் ; பேர் –
நீர்; பேர் – ஊர்; பால் – வேல்; வான் – தேன்; தோள் - வாள்
ஈ)
குறுவினா .
1. பாரதிதாசன்
தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
அமுது, நிலவு, மணம்
2. நீங்கள்
தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
உயிரோடு ஒப்பிடிவோம்.
உ)
சிறுவினா
1. இன்பத் தமிழ் - பாடலில்
உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
2. சமூக
வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
சமூக வளர்ச்சிக்கு நீர் அடிப்படையானது.
ஊ) சிந்தனை வினா
வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ்
ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது ?
·
வேல் கூர்மையான ஆயுதம்.
·
தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள்,கவிதைகள்
கூர்மையான கருத்துகளைக் கொண்டது.
·
ஆகவே தமிழ் வேலோடு ஒப்பிடப்படுகிறது.
தமிழ்க்கும்மி
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால்
------ அடையலாம்
அ) பன்மை ஆ)
மேன்மை இ) பொறுமை ஈ)
சிறுமை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்
------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் +
தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ)
செம்மை + தமிழ்
4. ’பொய்யகற்றும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
அ)
பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய +
கற்றும்
ஈ) பொய் +
யகற்றும்
5. பாட்டு+
இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) பாட்டிருக்கும் ஆ)
பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
6. எட்டு + திசை என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ)
எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
ஆ)
நயம் உணர்ந்து எழுதுக.
1. பாடல்
அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி
– கோதையரே
எட்டுத்
திசையிலும் – எட்டிடவே
ஊழி
- ஊற்று
2. பாடல் அடிகளில் இரண்டாம்
எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி
– கொட்டுங்கடி
ஊழி – ஆழி
பொய் -
மெய்
3. பாடல்
அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி
– கொட்டுங்கடி
கொண்டதுவாம்
– நின்றதுவாம்
பூட்டறுக்கும்
- பாட்டிருக்கும்
இ)
குறுவினா .
1. தமிழ்
மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Ø பொய்
அகற்றும் மொழி
Ø அறியாமையை
நீக்கும் மொழி
Ø உண்மையை
ஊட்டும் மொழி
2. செந்தமிழின்
புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
செந்தமிழின் புகழ் எட்டுத்திசையிலும் பரவ
வேண்டும் என கவிஞர் கூறுகிறார்.
ஈ) சிறுவினா
1. கால வெள்ளத்தை எதிர்த்து
நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
Ø பல
நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி
Ø அறிவு
ஊற்றாகிய நூல்கள் பல கொண்ட மொழி
Ø கடல்
சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும்
அழியாமல் நிலைத்திருக்கும் மொழி
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி
நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.
Ø தமிழ்
உலகெங்கும் பரவ வேண்டும்.
Ø இயற்கைச்
சீற்றங்கள் பல வந்தாலும் எவற்றாலும் அழியாதது தமிழ்.
Ø தமிழ்
மொழியில் உள்ள நூல்கள் அறியாமையை நீக்கும், உண்மையை ஊட்டும். அறத்தைத் தரும்.
உ)
சிந்தனை வினா
1. தமிழ் மொழி
அறியாமையை எவ்வாறு அகற்றும்?
Ø அறியாமையை
அகற்றுவது நூல்கள்
Ø தமிழ்
மொழியில் பல நூல்கள் உள்ளன.
Ø அதைக்
கற்பதால் தமிழ் அறியாமையை அகற்றுகிறது
வளர்தமிழ்
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
‘ தொன்மை ‘ – என்னும் சொல்லின் பொருள்________
அ)
புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை
2.
‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ)
இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம்
ஈ) இடப் + புறம்
3.
‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
அ)
சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ)
சீரி + இளமை ஈ) சீற் + இளமை
4.
சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____
அ)
சிலம்பதிகாரம் ஆ)
சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்
5.
கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______
அ)
கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ)
கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ்
6.
“ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்___
அ)
கண்ணதாசன் ஆ) பாரதியார் இ)
பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
7.
“ மா “ என்னும் சொல்லின் பொருள்_____
அ)
மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ)
அம்மா
ஆ)
கோடிட்ட இடத்தை நிரப்புக:-
1.
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
2.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
3.
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
இ)
சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக.
1.
தனிச்சிறப்பு – தமிழ்மொழி தனிச்சிறப்பு
வாய்ந்தது
2.
நாள்தோறும் – தமிழில் நாள்தோறும் புதுபுது கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன
ஈ)
குறுவினா:-
1.
தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?
தமிழின் மிக தொன்மையான நூல் தொல்காப்பியம்.
அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த மொழியாக
அழைக்கப்படுகிறது.
2.
நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி,
வளையாபதி, மணிமேகலை
உ)
சிறுவினா:-
1.
அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
Ø அஃறிணை
– அல் + திணை
Ø அல்
+திணை = உயர்வு அல்லாத திணை
Ø பாகற்காய்
= பாகு + அல் + காய்
Ø பாகு
+ அல் + காய் = இனிப்பு அல்லாத காய்
2.
தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.
தமிழில் இலக்கியங்கள் பலவும் ஓசை நயம்
மிக்கனவாகவும், இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் உள்ளது. தொடை நயங்கள் பலவும் உள்ளன,
3.
தமிழ்மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
Ø தாய்மொழியாக
விளங்குகிறது.
Ø மிகவும்
தொன்மையான மொழி
Ø அறியாமையை
அகற்றி, இன்பம் தரும் மொழி
Ø நாள்தோறும்
புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.
Ø கணினித்தமிழாக
விளங்கும் மொழி
ஊ)
சிந்தனை வினா:-
1.
தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
Ø உயிரும்
மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.
Ø உயிரும்,
மெய்யும் ஒலிப்பு முறைகளை அறிந்துக் கொண்டால் உயிர்மெய்யெழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம்.
Ø எழுத்துகளைக்
கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.
Ø தமிழ்மொழி
பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளே. எனவே எழுதுவதும் எளிது.
2.
தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
Ø
தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய
வடிவங்கள் உருவாகி வருகின்றன.
Ø
தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என
மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
தமிழ்
எழுத்துகளின் வகையும் தொகையும்
அ)
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக:-
1.
உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் உளி
2.
இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல் கோ
3.
ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் எஃகு
ஆ)
குறு வினா:-
1.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Ø
ஐந்து வகைப்படும்
Ø
எழுத்து இலக்கணம்
Ø
சொல் இலக்கணம்
Ø
பொருள் இலக்கணம்
Ø
யாப்பிலக்கணம்
Ø
அணி இலக்கணம்
2.
மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
Ø
வல்லினம் – க்,ச்,ட்,த்,ப்,ற்
Ø
மெல்லினம் – ங்.ஞ்,ண்,ந்,ம்,ன்
Ø
இடையினம் – ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
3.
தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
உயிர்க்
குறில் , உயிர் மெய்க் குறில் – 1 மாத்திரை
உயிர்
நெடில், உயிர்மெய் நெடில் – 2 மாத்திரை
மெய்யெழுத்து
,ஆய்த எழுத்து – ½ மாத்திரை
மொழியை
ஆள்வோம்
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
விரிவான
கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும்
என்னும் பழமொழி தரும் பல பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் நலமே
உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை,
உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே
அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
1. பழமொழியின் சிறப்பு சொல்வது
அ)
விரிவாகச் ஆ)
சுருங்கச்
இ) பழைமையைச் ஈ) பல மொழிகளில்
2.
நோயற்ற வாழ்வைத் தருவது சுத்தம்
3.
உடல்நலமே அடிப்படை உழைப்புக்கு
4.
உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உணவு, உடை, உறைவிடம்
5.
பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக:- சுத்தம்
பிறமொழிக்
கலப்பின்றிப் பேசுக.
1.
எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
எங்கள்
பள்ளியில் சுற்றுலா அழைத்துப் போகிறார்கள்
2.
பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.
பெற்றோரிடம்
அனுமதிக் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
ஆய்ந்தறிக.
பெயரில்
தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம்.
S. இனியன், எஸ்.
இனியன், ச. இனியன் - இவற்றுள் சரியானது எது? ஏன்?
ச.இனியன்
என்பது சரி.
தலைப்பெழுத்தும்
தமிழில் எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.
கடிதம்
எழுதுக.
விடுப்பு
விண்ணப்பம்.
அனுப்புதல்
க.அஞ்சலாதேவி,
6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி
– 637102.
பெறுதல்
வகுப்பாசிரியர் அவர்கள்,
6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி
– 637102.
ஐயா,
வணக்கம்.எனது அண்ணன்
திருமணம் நாளை நடைபெற உள்ளதால்,
திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் மாணவி,
க.அஞ்சலாதேவி
இடம்:
கோரணம்பட்டி
நாள்:
30-06-2022.
மொழியோடு
விளையாடு
திரட்டுக
. ’மை’ என்னும்
எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க
கடமை,
புதுமை, கருமை, பெண்மை, வெண்மை, முதுமை, பழமை.
1.
கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) கரும்பு – கரு, கம்பு
கவிதை – கவி, கதை, விதை
பதிற்றுப்பத்து – பற்று, பத்து
பரிபாடல் – பரி, பாடல்
2.
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
நூல்
மொழி கோல்
மீன் நீதி
எழுது கண் வெளி தமிழ் மணி
மாலை விண்
(எ.கா.) விண்மீன
எழுதுகோல்,
நீதி மணி, கண்மணி, நீதி நூல், தமிழ் மாலை, நூல் வெளி, தமிழ்மணி
பொருத்தமான
சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை,
ஆற்றல், ஈடு, இசை,
உணர்வு, ஏடுகள், உரிமை,
என்றும், எளிதாய், உவகை,
, அன்பு
(எ.கா.)
அ
- அன்பு தருவது தமிழ்
ஆ
- ஆற்றல் தருவது தமிழ்
இ
- இனிமை தருவது தமிழ்
ஈ
- ஈடு இல்லாதது தமிழ்
உ
- உணர்வு தருவது தமிழ்
ஊ
- ஊக்கம் தருவது தமிழ்
எ
- எளிதாய் வேண்டும் தமிழ்
ஏ
- ஏற்றம் தருவது தமிழ்
கட்டங்களில்
மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க
1.
பாரதிதாசன்
2.
ஒளவையார்
3.
வாணிதாசன்
4.
பாரதியார்
5.
திருவள்ளுவர்
6.
சுரதா
கலைச்
சொல் அறிவோம்
வலஞ்சுழி
- Clock
wise
இடஞ்சுழி
- Anti
Clock wise
இணையம்
- Internet
குரல்தேடல்
- Voice
Search
தேடுப்பொறி
- Search
engine
தொடுதிரை
- Touch
Screen
முகநூல்
- Facebook
செயலி
- App
புலனம்
- Whatsapp
மின்னஞ்சல்
- E-mail
ஆக்கம்
:
தமிழ்விதை
மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த
வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்
CLICK HERE TO GET PDF - GUIDE
HARD WORK SIR VAZHTHUKKAL SIR
ReplyDelete