சேலம் மாவட்ட ஆயத்த திருப்புதல்
தேர்வு-2022
தமிழ்
விடைக்குறிப்பு
10-ஆம்
வகுப்பு காலம்:
1.00 மணி. மதிப்பெண்:35
பகுதி-I
I)
ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன்
சேர்த்து எழுதுக. 6×1=6
1.
“ உனதருளே பார்ப்பன் அடியேனே”
– யார் யாரிடம் கூறியது?
அ)
குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ)
இறைவனிடம் குலசேகராழ்வார்
இ)
மருத்துவரிடம்
நோயாளி ஈ)
நோயாளியிடம்
மருத்துவர்
2.
அருந்துணை என்பதைப்
பிரித்தால்_______________
அ)
அருமை
+ துணை ஆ)
அரு
+ துணை இ)
அருமை
+ இணை ஈ)
அரு
+ இணை
3.விதைக்கு
தேவை எரு எனில்,கதைக்குத் தேவை ___________.
அ)
கற்றல் ஆ)
கரு இ)
சோறு ஈ) எழுத்து
4.
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று
கூட்டிப் பொருள் கொள்வது _______________.
அ)
ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ) முறை
நிரல்நிறைப் பொருள்கோள்
இ)
எதிர் நிரல் நிறைப் பொருள்கோள் ஈ) கொண்டுக்
கூட்டுப் பொருள்கோள்
5.குளிர் காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்_______________
அ)முல்லை,குறிஞ்சி,மருத
நிலங்கள் ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல்
நிலங்கள்
இ)
குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள் ஈ)
மருதம்,நெய்தல்,பாலை
நிலங்கள்
6.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து _________
அ)
பொருள் ஆ)
செயல் இ)
விடல் ஈ) உலகு
பகுதி-2
II)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.
(13வது வினா கட்டாய வினா) 5×2=10
7.
மருத்துவத்தில் மருந்துடன் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
மருத்துவர் கத்தியால் அறுத்து
சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.
8.
. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான்.
புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர
கடிக்க மாட்டான்” என்று
இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான்.
– இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக்
கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.
9.
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்
தொடர்களாக்குக:-
Ø அறிவைத் திருத்தி சீராக்குவோம்
Ø கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்
10. இந்த அறை
இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே!
சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!
மின்சாரம்
இருக்கிறதா?இல்லையா? மேற்கண்ட உரையாடலில்
உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
மின்விளக்கின் சொடுக்கி
எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா
மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா
11.
உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய்
எழுந்திராய்’
காலதூதர் கையிலே
‘ உறங்குவாய் உறங்குவாய்
‘
கும்பகன்னனை
என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு
அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
· கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
·
கால
தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.
12.கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள்
மலையில் உழுதனர்.
முல்லைப்
பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
Ø உழவர்கள் வயலில் உழுதனர்
Ø முல்லைப் பூச்செடியைப்
பார்த்தவாறே ஆயர்கள் காட்டிற்குச் சென்றனர்.
13.
“ உலகு “ – என முடியும் திருக்குறளை எழுதுக.
குற்றம் இலனாய்க் குடிசெய்து
வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
14.
தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துக் கொண்டு தொடர்களை முழுமை செய்க.
அ) காட்டு விலங்குகளைச்
____ சுடுதல் ____தடை
செய்யப்பட்டுள்ளது. செய்த
தவறுகளைச் _______ சுட்டல்
____திருத்த உதவுகிறது.(
சுட்டல்,சுடுதல்
)
ஆ)
பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______
கண்ணுக்கு
நல்லது.( காணுதல்,காட்சி)
பகுதி-3
III)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3×3=9
(
18 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும் )
15. மாளாத காதல்
நோயாளன் போல் – என்னும்
தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
மருத்துவர் கத்தியால்
அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுப்போல நீங்காத துன்பத்தை
எனக்கு தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்
16.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும்.-இக்குறட்பாவில்
அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
Ø ஆற்றுநீர் பொருள்கோள்
Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.
Ø பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள்
கொள்ளுமாறு அமைந்துள்ளது.
17.“
கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில்
மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.”
– காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும்,
பண்டைத்
தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும்
எழுதுக.
· கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல் தொழில்கள் நடைபெறுகின்றன.
· மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
· நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
18.
‘ வாளால் அறுத்து ….’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை எழுதுக.
வாளால் அறுத்துச் சுடினும்
மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்
கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
- குலசேகராழ்வார்
( அல்லது )
‘
அருளைப் பெருக்கி…..’ எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடலை எழுதுக.
அருளைப் பெருக்கி அறிவைத்
திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய்
இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
- கா.ப.செய்கு தம்பி பாவலர்
19.
. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்கு கூறிய இலக்கணங்கள்
நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
·
தொழில்
செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை
அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.
·
மனவலிமை,குடிகளைக்
காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக
அமைய வேண்டும்.
·
இயற்கையான
நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது
·
ஒரு
செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து
தான் நாம் செயல்பட வேண்டும்.
பகுதி-4
IV)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
2×5=10
20.
கம்பராமாயணம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக
முன்னுரை |
இயற்கை வளம் |
கலை நிகழ்வு |
நாட்டின் சிறப்பு |
இராமனின் அழகு |
குகனின் வருத்தம் |
கும்பகர்ணன் நிலை |
முடிவுரை |
முன்னுரை :
உள்ளதை
உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது. கால எல்லை அற்றது.
கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்.
அப்படிப்பட்ட கம்பராமாயண கருத்துகளை நாம் இங்கு காணலாம்.
இயற்கை வளம் :
சரயு ஆறு சோலைகள்,செண்பகக் காடுகள்,அரும்புகள்
மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள்,குருக்கத்தி, கமுகத் தோட்டம்,நெல்ய்வயல்கள் இவை
அனைத்திலும் பரவி பாய்கிறது. இது ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் உள்ளது.
கலை நிகழ்வு :
மயில்கள்
தன் சிறகை விரித்து ஆடுகிறது. தாமரை மலர்கள் விளக்குகள் போல் விரிகிறது. மேகங்கள்
மத்த ஒலியாய் ஒலிக்கிறது. நீரலைகள் திரை சீலைகளாக எழுகிறது. வண்டுகளின் ரீங்காரம்
யாழினி இசையை ஒத்து இருக்கிறது.
நாட்டின் சிறப்பு :
கோசல
நாட்டில் வறுமை இல்லாத காரணத்தால் கொடை இல்லை. நேருக்கு நேர் போர் புரிபவர்
இல்லாமையால் உடல் வலிமையை காட்ட வாய்ப்பில்லை. பொய்கள் இல்லாத காரணத்தால் மெய்
தனித்து இல்லை. கேள்விச் செல்வம் மிகுந்து உள்ளமையால் அறியாமை இல்லை.
இராமனின் அழகு :
ஆதவனின்
கதிர்கள் இராமனின் உடலில் பட்டு மறைய, நுண்ணிய இடைக் கொண்ட சீதையொடும், இளையவன்
இலக்குவனொடும் போனான். இராமனின் நிறம் மையோ?மரகதமோ?நீலக் கடலோ? கார்மேகமோ? ஒப்பற்ற
அழியாத அழகுடையவன் இராமன்.
குகனின் வருத்தம் :
தன்னை
உடன் பிறவா சகோதரனாக கூறிய இராமனை இந்த ஆற்றைக் கடந்து போகவிட்டால் இந்த வேடன்
இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னை பழிச் சொல்ல மாட்டார்களா? என குகன் மன
வருத்தமடைந்தான்.
கும்பகர்ணன் நிலை :
·
கும்பகர்ணனே
எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
கால தூதர் கையிலே படுத்து
உறங்கிடுவாய்
( அல்லது )
வினா
வகை,விடை வகைகளை – விளக்குக
வினா – வகைகள்
அறிவினா |
தான்
அறிந்த விடை பிறருக்குத் தெரியுமா? என அறியும் பொருட்டு வினவுவது. எ.கா
: மாணவரிடம் ஆசிரியர் கேட்கும் வினா |
அறியா
வினா |
தான்
அறியாத ஒன்றை அறிந்துக் கொள்வதற்கு வினவுவது எ.கா
: ஆசிரியரிடம் மாணவர் வினவுவது |
ஐய
வினா |
ஐயம்
தெளிவு பெற வினவுவது. எ.கா:
அங்கே இருப்பது பாம்போ? கயிறோ? |
கொளல்
வினா |
தான்
ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது எ.கா:
வணிகரிடம் சர்க்கரை இருக்கிறதா? என வினவுதல் |
கொடை
வினா |
ஒரு
பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது. எ.கா
: என்னிடம் இரு எழுதுகோல் உள்ளது. உன்னிடம் உள்ளதா? |
ஏவல்
வினா |
செயலை
செய்ய ஏவுதற் பொருட்டு வினவுதல் எ.கா:
நீ கடைக்கு செல்கிறாயா? |
விடை வகைகள்
சுட்டு
விடை |
சுட்டிக்
கூறும் விடை. எ.கா: பள்ளி எங்குள்ளது? வினாவிற்கு ‘ இடப்பக்கத்தில் உள்ளது’ எனக்
கூறல் |
மறை
விடை |
மறுத்துக்
கூறும் விடை எ.கா:
கடைக்கு போகிறாயா? வினாவிற்கு ‘ போகமாட்டேன்’ என மறுத்துக் கூறுவது. |
நேர்
விடை |
உடன்
பட்டுக் கூறும் விடை கடைக்கு
போகிறாயா? வினாவிற்கு ‘ போகிறேன்’ என உடன்பட்டுக் கூறுவது. |
ஏவல்
விடை |
மாட்டேன்
என்பதனை மறுப்பதை ஏவுதலாகக் கூறுவது. கடைக்கு
போகிறாயா? வினாவிற்கு ‘நீயே போ ’ என ஏவிக் கூறுவது. |
வினா
எதிர் வினாதல் விடை |
வினாவிற்கு
விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது. கடைக்கு
போகிறாயா? வினாவிற்கு ‘ போகாமல் இருப்பேனா?’ எனக் கூறுவது. |
உற்றது
உரைத்தல் விடை |
தனக்கு
நேர்ந்ததை விடையாகக் கூறுவது. எ.கா:
நீ விளையாடவில்லையா? வினாவிற்கு “ கால் வலிக்கிறது “ எனக் கூறுவது. |
உறுவது
கூறல் விடை |
இனிமேல்
நேர்வதை விடையாகக் கூறுவது எ.கா:
நீ விளையாடவில்லையா? வினாவிற்கு “ கால் வலிக்கும் “ என உறுவதை உரைப்பது. |
இனமொழி
விடை |
இனமான
மற்றொன்றை விடையாகக் கூறுவது. எ.கா:
பாடத் தெரியுமா? வினாவிற்கு “ ஆடத் தெரியும்” என்று கூறுவத |
21.
‘ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
( அல்லது )
உங்கள்
பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வினைக் கட்டுரையாக்குக.
குறிப்புச்சட்டகம் |
முன்னுரை |
பொருட்காட்சி |
நுழைவுச் சீட்டு |
பல்துறை அரங்கம் |
அங்காடிகள் |
பொழுதுபோக்கு |
முடிவுரை |
முன்னுரை :
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.
பொருட்காட்சி :
மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி
நடைபெற்றது.
நுழைவுச் சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல
நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்துறை அரங்கம் :
அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை
அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய
இருந்தன.
அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.
பொழுதுபோக்கு :
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம்
போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.
முடிவுரை:
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.