6TH - 17-01-2022 -KALVI TV - TAMILNATIL GANDHI - VIDEO AND WORKSHEET

   https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           17- 01- 2022            

வகுப்பு                    ஆறாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :      பருவம் -3 - இயல் - 1  - தமிழ்நாட்டில் காந்தி

காணொளி

பணித்தாள்
அ. சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்த ஆண்டு------------

அ. 1919         ஆ. 1920        இ. 1921        ஈ. 1922

2. இவர் எங்கள் தமிழ்நாட்டின் கவிஞர் என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்?

அ. பாரதிதாசன்           ஆ. பாரதியார்            இ. கண்ணதாசன்      ஈ. வாணிதாசன்

3. காந்தியடிகள் எளிமைத் திருகோலம் பூண்ட ஆண்டு__________

அ. 1919         ஆ. 1920        இ. 1921        ஈ. 1922

4. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் -----------க் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்

அ. தெலுங்கு           ஆ. தமிழ்                இ. மலையாளம்             ஈ. கன்னடம்

5. யாருடைய தமிழ்க்கையேடு தன்னை மிகவும் கவர்ந்ததாக காந்தியடிகள் கூறியுள்ளார்.

அ. கால்டுவெல்             ஆ. மணவை முஸ்தபா           இ. ஜி.யு.போப்                    ஈ. அகத்தியலிங்கம்

6. எந்த நூல் தம்மை மிகவும் கவர்ந்த நூல் என காந்தியடிகள் கூறியுள்ளார்?

அ.  திருவாசகம்        ஆ. திருக்குறள்                     இ. தேவாரம்                           ஈ. சிலப்பதிகாரம்

7.  சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ____________

அ. 1947                 ஆ. 1957         இ. 1937         ஈ. 1927

8. யாருடைய அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்தியடிகள் கூறினார்?

அ. உ.வே.சா               ஆ.  திரு.வி.க         இ. மா.பொ.சி                     ஈ. வ.உ.சி

9. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________

அ) கோவை            ஆ) மதுரை              இ) தஞ்சாவூர்                         ஈ) சிதம்பரம்

10. இராஜாஜியின் வீட்டில் காந்தி எதற்காக கருத்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்?

 அ) உறுப்பினர் சேர்க்கை       ஆ) விடுதலை குறித்து            இ) ரெளலட் சட்டத்தினைப் பற்றி  ஈ) உப்பு சத்தியாகிரகம் குறித்து 

11. இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் யாரைப் பற்றிக் கேட்டார்?

அ) பாரதியார்                        ஆ) பாரதிதாசன்                     இ) கண்ணதாசன்                    ஈ) உ.வே.சா

12. காந்தியடிகள் எந்த கோயிலுக்குள் நுழைய மறுப்புத் தெரிவித்தார்?

அ) சொக்கநாதர்                     ஆ) பழனி முருகன்                  இ) மதுரை மீனாட்சி                ஈ) காஞ்சி காமாட்சி

13. வெளிநாட்டுப் பொருட்கள் கொண்டு தமது இல்லத்தை அலங்கரித்த அன்பரின் வீடு எந்த ஊரில் இருந்தது?

அ) மதுரை                             ஆ) கானாடு காத்தான்                          இ) வட்டமலை          ஈ)  அம்பத்தூர்

14. . நமது இந்திய ரூபாய் தாளில் யாருடைய படம் உள்ளது?

அ) நேரு                  ஆ) அண்ணா                         இ) காந்தி                               ஈ) நேதாஜி

15. காந்தியடிகள் என்ன தொழில் செய்து வந்தார்?

               அ) வழக்குரைஞர்                   ஆ. ஆசிரியர்                         இ) மருத்துவர்                         ஈ) பொறியாளர்

இணைய வழித் தேர்வு


DOWNLOAD WORKSHEET
IN PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post