10TH-TAMIL-SALEM-1ST REVISION ANKSWER KEY-2026

 


 சேலம் – முதல் திருப்புதல்  தேர்வு - ஜனவரி  -2026

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக்குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

1

2.

ஆ) மணிப்பெயர் வகை

1

3.

) உழவு, ஏர், மண், மாடு

1

4.

ஈ) சிலப்பதிகாரம்

1

5.

ஆ) கலைஞர்

1

6.

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

1

7.

அ) அகவற்பா

1

8.

அ) ஒரு சிறு இசை

1

9.

) காட்டைச் சேர்

1

10.

) எழுவாய்த் தொடர்

1

11.

ஆ) கம்பராமாயணம்

1

12 .

அ) கண்ணதாசன்

1

13 .

அ) வண்டு

1

14 .

அ) தருவேன் - தட்டுவேன்

1

15

ஆ) காலக்கணிதம்

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

v  பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

17.

v  மகரந்தம் சிந்தும் சோலைகள்

v  மரம் செறிந்த செண்பகக் காடுகள்

v  அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்

v  புதுமணல் தடாகங்கள்

v  கமுகுந்தோட்டங்கள்

v  நெல்வயல்கள்

2

18.

Ø  முயற்சி செய்தால் செல்வம் பெருகும்.

Ø  முயற்சி இல்லாவிட்டால் வறுமை வந்து சேரும்.

2

19

மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது.

மேகங்களின் கருணை  : தாகங்கள் தீர்க்கிறது

2

20

Ø  வருக, வணக்கம்

Ø  வாருங்கள்.

Ø  அமருங்கள், நலமா?

Ø  நீர் அருந்துங்கள்

2

21.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சிஉழிஞை

2

23

அ) எட்டு - அ

ஆ) நான்கு, இரண்டு -  ,

1

1

24.

கிளர்ந்தகிளர் + த்(ந்) + த் + அ

கிளர்பகுதி

த்சந்தி

த்(ந்) – ந் ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

பெயரெச்ச விகுதி

1

1

25

தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

காலம் காட்டாது

காலம் காட்டும்

படர்க்கைக்கே உரியது

மூவிடத்திற்கும் உரியது

1

1

26

அ) பண்பாடு                   ஆ) கிளர்ச்சி

2

27

அழகிய குழந்தைகள் தனித்தனியே எழுதி தர வேண்டும்.

2

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

 அ) சோற்றுக்கு ஒரு சோறு பதம்        ஆ) உள்ளளவும் நினை

2

28

அ) இயற்கைக்கு செயற்கை என எழுதினான்.

ஆ) விதி என்பதற்கு வீதி என எழுதினான்

1

1

பகுதி – 3 – பிரிவு - 1

29

Ø  தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.

Ø  விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் பழைய வாளைப் பணையம் வைத்தான் தலைவன்.

Ø  மறுநாளும் விருந்தினருக்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்

1

 

 

 

1

 

 

 

1

30

அ) குறிஞ்சி

ஆ) தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில்

இ) சண்பகம், பிரம்ம கமலம், குறிஞ்சி, மூங்கில்

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

Ø  விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலை நகர் காப்போம் என முழங்கினார்

1

 

1

 

1

 

 

பகுதி -3 / பிரிவு - 2

32

·        சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.

·        விரிந்த தாமரை மலர்கள் விளக்குகள் போல் தோன்றுகின்றன.

·        மேகங்கள் மத்தள ஒலியாய் எழுகின்றன.

·        குவளை மலர்கள், கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.

·        அலைகள், திரைச்சீலைகளாய் விரிகின்றன.

·        வண்டுகள், மகர யாழின் தேனிசைப் போல ரீங்காரம் பாடுகின்றன.

3

33

v  மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

v  இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

v  இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

v  மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

v  மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

3

34அ

காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

3

34ஆ

    நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

 ஒலித்து அழுவ போன்றே

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கட்டு                          : முதனிலைத் தொழிற்பெயர்

சொட்டு                     : முதனிலைத் தொழிற்பெயர்

வழிபாடு                     : விகுதி பெற்ற தொழிற்பெயர்

கேடு                           : முதனிலை திரிந்த தொழிற்பெயர்

கோறல்                      : விகுதி பெற்ற தொழிற்பெயர்

3

36

அணி       : 

Ø  ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது

உவமை அணி.

Ø  உவமை, உவமேயம்,உவம உருபு இடம் பெறும்.

சான்று : வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

             கோலொடு நின்றான் இரவு     

உவமை  :      வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன்

உவமேயம் :    செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்.

உவமஉருபு :  போலும்

3

37

சீர்

அசை

வாய்பாடு

செய்-க

நேர்+நேர்

தேமாங்காய்

பொரு-ளைச்

நிரை+நேர்

புளிமா

செறு-நர்

நிரை +நேர்

புளிமா

செறுக்-கறுக்-கும்

நிரை+நிரை+நேர்

கருவிளங்காய்

எஃ-கத-னிற்

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

கூரி/ய

நிரை + நேர்

புளிமா

தில்

நேர்

நாள்

இத்திருக்குறளின் இறுதிச்சீர் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

38

·        தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·        மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·        இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

·        ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

38ஆ

சேர நாடு :

v  செவ்வாம்பல் மலர்களைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்தது என அஞ்சி சிறகுக்குள் ஒடுங்கின.

v  பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்ட சேர நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றது.

சோழ நாடு :

v  உழவர்கள் நெற்போர் மீது நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ ‘ என்று கூவி அழைப்பர்.

v  போர்க்களத்தில் கொல்யானை மீது நின்றுகொண்டு ‘ நாவலோ ‘ என்று அழைப்பது போலிருந்தது.

v  யானைப்படைகளை உடைய சோழனது நாடு,

பாண்டிய நாடு :

v  தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன.

v  பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன.

v  பாண்டிய நாடு முத்துவளம் மிக்கது.

5

39அ

அனுப்புநர்

பெறுநர்

ஐயா,

பொருள்

இணைப்பு                                                                              

இப்படிக்கு

இடம்                                                       

நாள்

உறை மேல் முகவரி

5

39ஆ

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

 நூல் ஆசிரியர்

5

40

அ)

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத   

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற

எழுகின்றான். அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்தகாட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக்கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லாஇடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.          

5

42ஆ

1. நான் செல்லும் வழி இன்சொல் வழி.

2. என் நண்பர்களை  இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.

3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன்

4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன்

5. பிறருக்கு நன்மை செய்வேன்

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. 12 முதல் 18

2. கரியமில வாயு

3 கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிருங்கள். வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிடுங்கள்.

4. மரங்களை வளருங்கள், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தாருங்கள்.

5. சூன் -15

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

கருணையன் துயரம்

தாயை இழந்த வலி

கருணையன் அறியாதவை

முடிவுரை

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காற்று மாசுபாடு

மரங்கள் நடுதல்

பொதுப்போக்குவரத்து

நெகிழி கட்டுப்பாடு

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

முடிவுரை

8

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காலி இடமும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பமும்

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

8

44ஆ

மகளிர் நாள் விழா - அறிக்கை

            எம்பள்ளிக் கலையரங்கத்தில் 25-10-2025 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

            கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

          தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

          இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

v  மகளிரின் சிறப்புகள்

v  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

v  சுய உதவிக்குழுக்களின் பங்கு

v  மகளிர் கல்வி    போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

          ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

மாணவத் தலைவரின் நன்றியுரை:

          மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும், தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

8

45ஆ

முன்னுரை

பெயர்ப்பதிவும், காலை உணவும்

போட்டி அரங்கங்கள்

மாணவர்களின் பங்களிப்பு

 திருவிழாக்கோலம்

முடிவுரை.

8


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post