7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT1 - THAMIZHAR KAPPAR KALAI

   

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

தமிழரின் கப்பற்கலை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழர்கள் சிறிய நீரநிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ______

அ) கலம்       ஆ) வங்கம்    இ) நாவாய்   ஈ) ஓடம்

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ___

அ) சுக்கான்   ஆ) நங்கூரம் இ) கண்ணடை        ஈ) சமுக்கு

 கோடிட்ட இடங்ளை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் _________ என அழைக்கப்படும்.

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது _______

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் __________ எனக் குறிப்பிடப்படும்.

 பொருத்துக.

1. எரா - திசைகாட்டும் கருவி

2. பருமல் - அடிமரம்

3. மீகாமன் - குறுக்கு மரம்

4. காந்தஊசி - கப்பலைச் செலுத்துபவர்

 தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம்

2. காற்றின் திசை

3. வானியல் அறிவு

4. ஏற்றுமதி

குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

 2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

சிறுவினா

 1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

சிந்தனை வினா

1. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற் குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

PDF - FILE

CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post