10TH - KALVI TV - SANGA ILAKKIYATHIL AARAM

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           19 - 01- 2022           

வகுப்பு                    பத்தாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -8- சங்க இலக்கியத்தில் அறம்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. மேன்மை தரும் அறம் என்பது-----------

அ)கைம்மாறு கருதாமல் அறம் செய்வது   ஆ)மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது 

இ)புகழ் கருவி அறம் செய்வது                 ஈ)பதிலுதவி பெறுவதற்காக அறம்செய்வது

2) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ)உதியன், சேரலாதன்           ஆ)அதியன்,பெருஞ்சாத்தன்     இ)பேகன்,கிள்ளிவளவன்                ஈ)நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி

3) கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்-------

அ) கால்டுவெல்                       ஆ) அர்னால்டு                        இ) மூ.வ                  ஈ) பாவாணர் 

4) அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக் கூறியவர்-------

அ)ஏணிச்சேரி முடமோசியார்                 ஆ) ஔவையார்                     இ) கபிலர்               ஈ) பரணர் 

5)”இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

         அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” -என்று குறிப்பிடப்பட்ட வள்ளல் 

அ)பாரி                                                 ஆ) பேகன்                             இ)ஆய்                    ஈ) கர்ணன்

6) அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை

அ)தானம், தவம்  ஆ)உறுபொருள்,திறைப்பொருள்    இ) செங்கோல்,கொடுங்கோல்                ஈ)செங்கோல்,வெண்கொற்றக்குடை 

7) நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பது-----கடமை

அ) அரசன்                              ஆ) குடிமக்கள்                        இ) வணிகர்                           ஈ) அமைச்சர்

8) ஊன்பொதிப் பசுங்குடையார் கூறும் அரசியல் அறம்

அ)முறையாக வரிவசூலித்தல்                                               ஆ)அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்குதல்

இ)குடிமக்களின் வறுமை போக்குதல்                                     ஈ)எல்லைகளை விரிவாக்கல்

9)”நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும்  அறனும்காத்தலும் அமைச்சர் கடமை”-என்று குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி                 ஆ)புறநானூறு                        இ) அகநானூறு                      ஈ) பதிற்றுப்பத்து

10) அரசருக்கு உதவிய அமைச்சர்களைசெம்மை சான்ற காவிதி மாக்கள்எனப்போற்றியவர்

அ)கபிலர்                               ஆ) இளங்கோவடிகள்             இ) மோசிகீரனார்                    ஈ) மாங்குடி மருதனார் 

11)’அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்எனக் குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி                 ஆ)புறநானூறு                        இ) அகநானூறு                      ஈ) பதிற்றுப்பத்து

12) மதுரையில் இருந்த அவையம் பற்றிக்குறிப்பிடும் நூல்

அ) மதுரைக்காஞ்சி                 ஆ)புறநானூறு                       இ) அகநானூறு                      ஈ) பதிற்றுப்பத்து

13) தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக் கூடாது எனக் கூறியவர்

அ)மாங்குடி மருதனார்            ஆ)அவ்வையார்                      இ)ஆவூர் மூலங்கிழார்            ஈ)கிள்ளிவளவன் 

14) பின்வருவனவற்றுள் போர் அறம் எது?

அ)ஆயிரம் யானைகளைக் கொல்லுதல்                   ஆ)வீரமற்றோர்,புறமுதுகிட்டோரை எதிர்த்துப் போரிடாமை

இ)அனைவரையும் பழிவாங்குதல்                           ஈ)பொருள் கொடுத்து உதவுதல் 

15) தமிழர்களால் வீரத்தை போன்றே போற்றப்பட்ட பண்பு

அ) கொடை             ஆ) போர்த்திறம்                     இ) கல்வி                                ஈ) தொழில்கள்

16)’செல்வத்துப் பயனே ஈதல்’ - என்று கூறியவர்

அ) கபிலர்               ஆ) அவ்வையார்                    இ) நக்கீரனார்                         ஈ) மாங்குடி மருதனார்

17) வள்ளல் எழுவரின் கொடை பெருமையைக் குறிப்பிடும் நூல்

அ)பெரும்பாணாற்றுப்படை      ஆ)சிறுபாணாற்றுப்படை                        இ)புறநானூறு                          ஈ)கலித்தொகை

18) கொடை இலக்கியங்களாகக் கருதப்படுபவை

அ)சங்க இலக்கியங்கள்           ஆ)நீதி இலக்கியங்கள்            இ)ஆற்றுப்படை இலக்கியங்கள்               ஈ)காப்பியங்கள்

19) சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல்

அ)புறநானூறு         ஆ)கலித்தொகை                    இ)பட்டினப்பாலை                    ஈ)பதிற்றுப்பத்து

20) ’இல்லோர் ஒக்கல் தலைவன்,பசிப்பிணி மருத்துவன்’  என்றெல்லாம் போற்றப்பட்டவர்

அ)வள்ளல்கள்                        ஆ)அரசர்கள்                          இ)அமைச்சர்கள்       ஈ)மருத்துவர்கள்

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post